மீலாத் விழா போட்டி: கால எல்லை நீடிப்பு:

November 29, 2020

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செயதுள்ள மீலாத் விழா போட்டி நிகழ்ச்சிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷய்க் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார். 
மேலதிக விபரங்களையும் விண்ணப்படிவத்தையும் திணைக்களத்தின் www.muslimaffairs.gov.lk என்ற இணையதளத்திலும் பேஸ்புக் பக்கத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
மீலாத் விழா போட்டி: கால எல்லை நீடிப்பு: மீலாத் விழா போட்டி: கால எல்லை நீடிப்பு:  Reviewed by irumbuthirai on November 29, 2020 Rating: 5

இதுவரையான கொரோனா மரண விபரங்கள்: ஒருவர் வீதியிலும் உயிரிழப்பு

November 29, 2020

28/11/2020 வரை 109 கொரோனா மரரணங்கள் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளன. 
இதில் மூவர் 10 - 30 வயதிற்கும் நால்வர் 31 - 40 வயதிற்கும், 41- 50 வயதிற்கும் உட்பட்ட 16 பேர், 51 - 60 வயதிற்கும் உட்பட்ட 21 பேர் 61 - 70 வயதிற்கும் உட்பட்ட 20 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 71 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதுடன் அந்த எண்ணிக்கை 45 ஆக தெரிவிக்கப்படுகின்றது. 
அத்துடன் மொத்த மரணங்களில் 81 பேர் கொழும்பு, 13 பேர் கம்பஹா, களுத்துறை 6 பேர், குருணாகலை 4 பேர், புத்தளத்தில் 3 பேர், நுவரேலியாவில் ஒருவர் மற்றும் இனங்காணப்படாத ஒருவரது மரணமும் அவற்றுள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை 44 பேர் வீடுகளில் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளடன் 64 பேர் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர். ஒருவர் வீதியில் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரையான கொரோனா மரண விபரங்கள்: ஒருவர் வீதியிலும் உயிரிழப்பு இதுவரையான கொரோனா மரண விபரங்கள்: ஒருவர் வீதியிலும் உயிரிழப்பு  Reviewed by irumbuthirai on November 29, 2020 Rating: 5

Negative வந்தால் 24 மணித்தியாலயத்திற்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும்..

November 29, 2020

கொரோனா சந்தேகத்தில் மரணிப்பவர்களுக்காக PCR மேற்கொள்ளப்படும் போது நெகட்டிவ் வந்தால், 24 மணித்தியாலத்திற்குள் அவர்களின் உடல்களை உறவினர்களிடம் கையளிக்க, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி உறுதியளித்துள்ளார். 
இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், சில முஸ்லிம்களின் உடல்கள், பழுதடைந்த பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் சில உடல்களில் கொரோனா தொற்று இல்லாத போதும், அவை PCR பரிசோதனைக்காக காத்திருப்பதால் 3 அல்லது 4 நாட்களில் பின், Negatve கண்டறியப்பட்ட பின்னர் ஒப்படைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அத்துடன் முஸ்லிம்கள் மிகவிரைவில் தமது உடல்களை அடக்கி விடுவார்கள் என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இதுதொடர்பில் தனிப்பிரிவு ஒன்றை நிறுவுமாறும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார். தனிப்பிரிவு ஒன்றின் மூலம் மரணிப்பவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பீசீஆர் முடிவுகளை விரைவில் பெற்றுக்கொண்டு, அதன்மூலம் ஜனாஸாக்களை விரைவில் விடுவிக்க முடியுமென்ற நம்பிக்கையையும், அவர் இதன்போது வெளியிட்டுள்ளார்.
-ஜப்னாமுஸ்லிம்.
Negative வந்தால் 24 மணித்தியாலயத்திற்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும்.. Negative வந்தால் 24 மணித்தியாலயத்திற்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும்.. Reviewed by irumbuthirai on November 29, 2020 Rating: 5

Batticaloa Campus தொடர்பில் அரசின் நிலைப்பாடு...

November 28, 2020

சர்ச்சைக்குள்ளான மட்டக்களப்பு ‘Batticaloa Campus’ பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படுமா? என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் G.L. பீரிஸ், 
உதிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பெரும் சர்ச்சைக்குள்ளான மட்டக்களப்பு ‘Batticaloa Campus’ பல்கலைக்கழகத்தை தனியார் நிறுவனமாக முன்னெடுப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
Batticaloa Campus தொடர்பில் அரசின் நிலைப்பாடு... Batticaloa Campus தொடர்பில் அரசின் நிலைப்பாடு... Reviewed by irumbuthirai on November 28, 2020 Rating: 5

வெளியானது அம்பலாங்கொடை பாடசாலை மாணவர்களின் PCR...

November 26, 2020

அம்பலாங்கொடை பகுதியில் 02 பாடசாலைகளின் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா உறுதிசெய்யப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகமளித்தமையால் குறித்த மாணவர்களுக்கு PCR செய்யப்பட்டிருந்தது.
வெளியானது அம்பலாங்கொடை பாடசாலை மாணவர்களின் PCR... வெளியானது அம்பலாங்கொடை பாடசாலை மாணவர்களின் PCR... Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

இன்று தொடங்கியது LPL..

November 26, 2020

LPL (Lanka Premier League) கிரிக்கெட் தொடர் இன்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. 
இன்றைய முதல் போட்டியில் அன்ஜலோ மெத்திவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் விளையாடுகின்றன. 
LPL இல் 5 அணிகள் பங்குபற்றுகின்றன.
இன்று தொடங்கியது LPL.. இன்று தொடங்கியது LPL.. Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்..

November 26, 2020

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் கருத்து வெளியிடுகையில், 
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
மேலும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையையும், கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க சகல தரப்பினரும் ஒததுழைப்பு வழங்கினார்கள். அதேபோன்று சாதாரண தரப் பரீட்சையையும் நடத்துவதற்கு சிறப்பான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்.. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்.. Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்...

November 26, 2020

ஒருகொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் அண்மையில் சென்று வந்த வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கடந்த செவ்வாய் கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் இம்மாணவர் நேற்று (25) பாடசாலைக்குச் சென்றுள்ளார். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார். 
இந்நிலையில் இன்று குறித்த பாடசாலை வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்... கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்... Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 26, 2020

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 20-11-2020 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 26, 2020

13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 13-11-2020 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

November 26, 2020

06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 06-11-2020 (In three languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

November 26, 2020

29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 29-10-2020 (In three languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு

November 26, 2020

தொற்றா நோய் கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற விஷேட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
அதாவது மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்க்கொள்வோருக்கு வசதியாக அரச ஒசுசல மருந்தகங்கள் 24 மணித்தியாலயமும்; செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். 
பொது மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த சூழ்நிலையில் நாம் இணையத்தளம், தொலைபேசி மூலமாக இலக்கங்களை வெளியிட்டு வருகின்றோம். இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மருந்து பட்டியலை WhatsApp, Viber மூலமாக அனுப்பி வைத்தால் நாம் தேவையான மருந்துகளை ஒசுசல மருந்தகத்தில் தயார் செய்து உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். 
கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் தற்போது சேவைகளை முன்னெடுத்துள்ளோம். இருப்பினும், இதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களை மீண்டும் எதிர்வரும் சில தினங்களில் நாம் அறிவிப்போம். எமது மருந்தக கூட்டுத்தாபன இணையத்தளத்தில் தொலைபேசி இலக்கங்கள் உண்டு. 
 நீங்கள் தொற்றாநோய்க்கு உள்ளானவர்கள் என்றால் அதற்கான மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டாம். கொரோனா தொற்றினால் உங்களுக்கு ஆபத்து ஏற்படுவதையும் பார்க்க தொற்றா நோய்க்கு மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு  Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5
Powered by Blogger.