விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர்

December 13, 2020

தேசிய மட்டத்தில் கொரோனாவிற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். 
அந்தவகையில் கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் மருந்து பானி, கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருந்து, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோரினால் விசேடமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை என்பவற்றை ஆய்விற்கு உட்படுத்தி உறுதிபடுத்துவதற்கு பிரதமர் தேசிய ஆராய்ச்சி சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.
விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர் விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர் Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்?

December 13, 2020

விரைவில் உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொரொனா தடுப்பு மருந்தை தருவிக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். 
அனுராதபுரத்தில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்? உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்? Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்..

December 13, 2020

நிலையான அட்டவணையின்றி செல்லும் விமான சேவையே இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் 4 விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வணிக விமானங்களுக்கும் நிலையான நேர அட்டவணையின்றி செல்லும் விமானங்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். 
இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 
சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்.. நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்.. Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

தனிமைப்படுத்தல் தொடர்பாக விடுக்கப்பட்ட புதிய அறிவிப்புகள்

December 13, 2020

தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்படும் மற்றும் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை இங்கு தருகிறோம். 

 ஊடக அறிக்கை 
கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார். 

கொழும்பு மாவட்டம் 
(01) டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்:

• சிரிசந்த செவன குடியிருப்புத் திட்டம் (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்) 
• சிரிமுத்து உயன (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்) 
• லக்ஹிரு செவன தும்மிரிய அடுக்குமாடி குடியிருப்பு ( மாளிகாவத்தை பொலிஸ் வலயம்) 
• சிறிசர உயன (பொரள்ளை பொலிஸ் வலயம்) 
 
(02) தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்:  
• மோதர (முகத்துவாரம் பொலிஸ் பிரிவு) 
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு 
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு 
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு 
• டேம் வீதி பொலிஸ் பிரிவு 
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு 
• மாளிகாவத்த பொலிஸ் பிரிவு 
• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு 
• மருதானை பொலிஸ் பிரிவு 
• கெரம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு 
• மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்கு  
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) 60ஆவது தோட்டம் 
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி 
 
(03) நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக குறிப்பிடப்படும் பிரதேசங்கள்:  
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ் 
 
கம்பஹா மாவட்டம் 
(01) நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்: 
வத்தளை பொலிஸ் பிரிவு 
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு  
• ஹெவரிவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு பேலியகொட பொலிஸ் பிரிவு 
• பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு 

(02) தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள் பேலியகொட பொலிஸ் பிரிவு:
• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு. 
• பேலியகொட கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு கிரிபத்கொட பொலிஸ் பிரிவு 
• வெலேகொட வடக்கு நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு 
• தலதுவை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி வெயங்கொட பொலிஸ் பிரிவு 
• ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை  
(03) நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடும் பிரதேசம்: 
வத்தளை பொலிஸ் பிரிவு 
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நய்துவ பிரதேசம் 
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம் பேலியகொட பொலிஸ் பிரிவில் 
• பட்டியமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில் 
• ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெதிகந்த பிரதேசம் நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் 
• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள் 

களுத்துறை மாவட்டம் 
(01) நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தலாக பெயரிடப்படும் பிரதேசம். 
 • புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவில் வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• குடா ஹீனிட்டியன்கல கிராம உத்தியோகத்தர் பிரிவில் மரிக்கார் வீதி 

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் இருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார். 

நாலக கலுவௌ. 
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
தனிமைப்படுத்தல் தொடர்பாக விடுக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் தனிமைப்படுத்தல் தொடர்பாக விடுக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு..

December 13, 2020

புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பொன்று கடந்த 11 அன்று பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 
இதன்போது பிரதமர், பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். 
அதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள், இம்முறை மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறையின் கீழ் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் என சுட்டிக்காட்டினர்.
அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு.. அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு.. Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

B.Ed Honours in Natural Sciences: The Open University of Sri Lanka

December 13, 2020

Applications are called for Level 5/ Level 6 of the Bachelor of Education Honours in Natural Sciences Degree Programme. This Degree Programme is a four academic years programme especially planned for Science / Mathematics teachers. 
Online Applications : 06th December 2020 
Closing Date for Applications : 06th January 2021 
Click the link below for more details.
B.Ed Honours in Natural Sciences: The Open University of Sri Lanka B.Ed Honours in Natural Sciences: The Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

புலமைப்பரிசிலில் சித்தியடைந்தோர்க்கான பாடசாலை முதன்முறையாக Online முறையில்...

December 12, 2020

1952 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மூலம் மாவட்ட வெட்டுப்புள்ளிகளை விட அதிகமாக புள்ளிகளைப் பெற்று சித்தியடையும் சகல மாணவர்களுக்கும் புதிய பாடசாலைகளில் தரம் 06 இல் இருந்து கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 
அந்தவகையில் இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் தரம் 06க்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முதல் முறையாக இணையத்தள தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் மாணவர்கள் தரம் 6ற்கு விண்ணப்பித்துள்ள பாடசாலைகளின் பெயர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் குறிப்பிடப்பட்ட ஏனைய தகவல்கள் உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்புக்கு அமைவாக உள்வாங்கும் பணி பாடசாலை அதிபர்களினால் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
டிசம்பர் 10 தொடக்கம் டிசம்பர் 24 ஆம் திகதி வரை தமிழ், சிங்கள மொழி மூலம் இத்தகவல்களை உள்ளீடு செய்வதற்கான வாய்ப்பு அதிபர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. Mobitel நிறுவனத்தின் அனுசரணையில் ரூபா 7.5 மில்லியன் செலவில் இதற்கான வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசிலில் சித்தியடைந்தோர்க்கான பாடசாலை முதன்முறையாக Online முறையில்... புலமைப்பரிசிலில் சித்தியடைந்தோர்க்கான பாடசாலை முதன்முறையாக Online முறையில்... Reviewed by irumbuthirai on December 12, 2020 Rating: 5

Vacancies: Airport and Aviation Services (Sri Lanka) Ltd. - Katunayake Airport

December 11, 2020

Vacancies in the Airport and Aviation Services (Sri Lanka) Ltd. - Bandaranaike Internationale Airport. Katunayake. 
Closing date: 17-12-2020.
Source: 06-12-2020 Sunday Observer.



Vacancies: Airport and Aviation Services (Sri Lanka) Ltd. - Katunayake Airport Vacancies: Airport and Aviation Services (Sri Lanka) Ltd. - Katunayake Airport Reviewed by irumbuthirai on December 11, 2020 Rating: 5

Vacancies: Sir John Kotelawala Defence University

December 11, 2020

Vacancies in the Sir John Kotelawala Defence University. 
Closing date: 21-12-2020.
Source : 06-12-2020 Sunday Observer.


Vacancies: Sir John Kotelawala Defence University Vacancies: Sir John Kotelawala Defence University Reviewed by irumbuthirai on December 11, 2020 Rating: 5

வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம்

December 11, 2020

இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றமையே இதுவரையுள்ள வழமையாகும். 
ஆனால் புதிய முறைகளுக்கு அமைவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் வீட்டுக்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் 28 நாட்கள் 14 நாட்களாக குறைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம் வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம் Reviewed by irumbuthirai on December 11, 2020 Rating: 5

ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள்..

December 11, 2020

50 ற்கு மேட்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு நேற்றைய தினம் (10) பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர். 
இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுடனான சந்திப்பின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், 
பட்டதாரி பயிலுனர்களாகிய நீங்கள் இன்றைய தினம் கடமையில் இணைத்துக்கொண்டமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் சகலரும் நமது சமூகத்திற்கு மிகப் பெறுதியானவர்கள். 
மேலும் பெருந்தோட்ட சமூக மக்களுக்கும், இந்நாட்டிற்கும் உங்களின் கடமை பெறுமதியானது. நீங்கள் சகலரும் இளைஞர்கள் எனவே அனைவரும் தங்களது கடைமைகளை நேர்த்தியாக செய்வீர்கள் என நம்புகின்றேன். உங்களுடைய கடமைகளை செய்ய ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் சமயத்தில் அதனை என்னால் நிவர்திசெய்து தரமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள்.. ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள்.. Reviewed by irumbuthirai on December 11, 2020 Rating: 5

கொரோனாவை தடையாகக் கொள்ள வேண்டாம் - ஜனாதிபதி

December 10, 2020

கொரோனா நோய்த்தொற்று நிலைமையை முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தடையாக கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 
கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள சகல இராஜாங்க அமைச்சுகளும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வுசெய்யும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்.. 
"சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கமைய தயாரிக்கப்படும் குறிப்பிட்ட குறிக்கோளுடன் கூடிய தனிப் பாடத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை கல்வி முறைகளை உருவாக்குவது மற்றொரு நோக்கமாகும். 
நாட்டின் வருங்கால தலைமுறையினரை உற்பத்தித் திறன்மிக்க பிரஜைகளாக உருவாக்க அவர்கள் புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொரோனாவை தடையாகக் கொள்ள வேண்டாம் - ஜனாதிபதி கொரோனாவை தடையாகக் கொள்ள வேண்டாம் - ஜனாதிபதி Reviewed by irumbuthirai on December 10, 2020 Rating: 5

Vacancies (Management Trainee): Bank of Ceylon

December 10, 2020

Vacancies for Management Trainees in the Bank of Ceylon. 
Closing date: 19-12-2020. 
See the details below.
Source : 06-12-2020 Sunday Observer.



Vacancies (Management Trainee): Bank of Ceylon Vacancies (Management Trainee): Bank of Ceylon Reviewed by irumbuthirai on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.