பட்டம் விடும் சிறுவர்கள்: விடுக்கப்படும் எச்சரிக்கை!
Irumbu Thirai News
August 18, 2026
பாடசாலை விடுமுறை என்பதால் தற்போது சிறுவர்களிடையே பட்டம் விடுவது மிகவும் பிரபலமாகியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்திருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டம் விடுதல் மகிழ்ச்சி அளிக்கும் செயலெனினும், பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். குழுக்களாக விளையாடும்போது ஏற்படும் மோதல்கள், உயரமான இடங்களில் இருந்து வீழ்தல், கட்டடங்களில் ஏறி நின்று பட்டம் விடும்போது கீழே விழுதல் போன்றவற்றால் பலத்த காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மிக முக்கியமான அபாயமாக, மின்கம்பிகளில் நூல் சிக்கும்போது மின்சாரம் நூல் வழியே பாய்ந்து குழந்தைகள் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதனால் கை, தோள்பட்டை, நெஞ்சுப் பகுதிகளில் திசுக்கள், இரத்த நாளங்கள், நரம்புகள் கடுமையாக சேதமடைகின்றன. சில சந்தர்ப்பங்களில், சேதமடைந்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. என்றார்.
மேலும், இவ்வாறான விபத்துக்களில் உடனடி உயிரிழப்புகள் கூட நிகழலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, உயர் மின்னழுத்த கம்பிகள் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தடுக்க பெற்றோர்களும் பெரியவர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகளின் பொழுதுபோக்கைப் போன்றே அவர்களின் உயிர் பாதுகாப்பும் முக்கியமானது. இதனால், விபத்துக்களைத் தவிர்க்க பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் அனைவரும் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Previous:
பட்டம் விடும் சிறுவர்கள்: விடுக்கப்படும் எச்சரிக்கை!
Reviewed by Irumbu Thirai News
on
August 18, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
August 18, 2026
Rating:
.jpeg)

.jpeg)










