News Updates in Tamil (1.4.2026)
Irumbu Thirai News
April 01, 2026
(1.4.2026 அன்று வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்.. )
தற்போது நிலவும் கடும் வெப்பம், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும் என கால்நடை வைத்தியர் சோபாத் விஜயரத்ன தெரிவித்துள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்குள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம். விலங்குகள் நாக்கை வெளியே தள்ளி மூச்சு வாங்குவதை நாம் அவதானிக்கலாம். பூனைகளும் அவ்வாறே செய்யும். இவ்வாறான நிலையில், உடனடியாக ஐஸ் கட்டிகளை வழங்குங்கள், உடலை நனையுங்கள் அல்லது கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். பகல் நேரங்களில் நாய்களுக்கு முகக்கவசம் அணிவிப்பதைத் தவிர்க்கவும். நாய் இருக்கும் இடத்தில் எப்போதும் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்துங்கள், தண்ணீரில் ஐஸ் கட்டிகளைப் போடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
இலங்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களின் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நுவரெலியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசாங்கமும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும், வைத்தியர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகச் சேவையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தமது சங்கத்தைச் சேர்ந்த 23,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அவ்வாறு அடிமைகளாகப் பணியாற்றத் தயாரில்லை என அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலம் முடிந்து ஐந்தாம் மாதம் முடியும் வரை இலங்கையில் எரிபொருள் கையிருப்பில் இருக்கும். எனினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 25 பேர் மல்லாகம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 12 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 43 இலட்சம் ரூபாவை வட்ஸ் அப் செயலியூடாக தந்திரமாக அபகரித்த பெண் ஒருவரை திருகோணமலை காவல்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று(01) காலை கைது செய்துள்ளனர்.
நியாயமற்ற இடமாற்றங்களைக் கண்டித்து, நாளை ( 02) நாளை மீண்டும் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டல்களை உடனடியாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்குக் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Previous:
News Updates in Tamil (1.4.2026)
Reviewed by Irumbu Thirai News
on
April 01, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
April 01, 2026
Rating:











.jpeg)



