2013 ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது.
4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நடந்தது.
தற்போது மேற்கிந்திய தீவில் விளையாடும் விராட் கோலி அங்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாடினார். அப்போது உரையாற்றிய கோலி,
‘அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்தது கிரிக்கெட் கிடைத்ததை விட மிகப் பெரிய வரம். மிகச் சரியான துணையை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனென்றால், அவரது பணிகளை அவராகவே சிறப்பாக செய்து வருகிறார். அதோடு எனக்கான இடத்தையும் சரியாக தருகிறார். என்னை சரியான பாதையில் வழிநடத்துவதும் அவர்தான். அவரிடம் இருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
‘அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்தது கிரிக்கெட் கிடைத்ததை விட மிகப் பெரிய வரம். மிகச் சரியான துணையை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனென்றால், அவரது பணிகளை அவராகவே சிறப்பாக செய்து வருகிறார். அதோடு எனக்கான இடத்தையும் சரியாக தருகிறார். என்னை சரியான பாதையில் வழிநடத்துவதும் அவர்தான். அவரிடம் இருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி
Reviewed by irumbuthirai
on
August 25, 2019
Rating:

No comments: