மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு


தற்போது உள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் அமைச்சர் டளஸ் அளகப்பெரும எதிர்வரும் மார்ச் மாதம் 

முதலாம் திகதி அளவில் நாட்டில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். 
கடந்த கால அரசாங்கத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மாத்திரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  இவர்கள் எந்தவித வேறுபாடுமின்றி பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படுவர் என்று  தெரிவித்தார்.
(அ.த.தி)

மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு Reviewed by irumbuthirai on January 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.