பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்


பகிடிவதை காரணமாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன் அறிக்கை 

3 மாத காலப்பகுதிக்குள் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 
இதன் அங்கத்தவர்களாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சுக், முன்னாள் உபவேந்தரான நாரத வர்ணசூரிய, பேராசிரியர் சங்கைக்குரிய மாகம்மன பஞ்ஞானந்த தேரர், கலாநிதி வணக்கத்திற்கு பெனட் சாந்த அடிகளார், கலாநிதி சந்திரா அம்புல்தெனிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ்  செயற்பட உள்ளனர்.  இதன் அமைப்பாளரும் செயலாளருமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உபதலைவர் திருமதி ஜனிதா லியனகே செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.