ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன?


ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த கூட்டம் நேற்று(8) காலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. 
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, தொழிற் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். பொதுத்தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தி கூட்டத்தை விட்டு செல்லும் வேளை, தொழிற்சங்க தலைவர்களால் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பிரச்சினைகள் தொடர்பாக  முன்வைக்கப்பட்டன. 
இதன்போது அவர்களிடம் இருந்து வெளியேற முயற்சித்த வேளை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பாலித ரங்கே பண்டார அமைதிப்படுத்த முயற்சித்துள்ளார். 
இதேவேளை இந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று பிற்பகல் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து 'சமகி ஜனபலவேகய' தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.