விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா?



விடைத்தாள் திருத்தும் பணிகள்  இதற்கு முன்னர் சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் நிறைவு பெற்றதன் பின்னரே ஆங்கில மொழி மூலம் ஆரம்பிக்கப்படும். ஆனால் இம்முறை மூன்று மொழி மூலமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும். 
எனவே இம்முறை விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் மற்றும் சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். உயர்தரத்தில் கற்பிப்பவர்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பெற்றவர்களாகவே இருப்பார்கள். அந்த வகையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மாத்திரம் தனியார், சர்வதேச பாடசாலைகளில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.  
நேற்று கல்வி அமைச்சரால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா? விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை  ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா? Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.