வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்:



எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீலம் அல்லது கருப்பு நிற Ball Point ரக பேனையை  வீட்டிலிருந்து கொண்டு வருவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்தும்போது வாக்காளர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் உரிய ஆவணங்களை கையில் தொடாமலேயே பணிகளை நிறைவேற்றுவதற்கும் எதிர்பார்ப்பதாக இதன்போது மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவூட்டும் பணியை செய்ய இலத்திரனியல் ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் வாக்கெண்ணும் பணிகளுக்காக இரண்டு முறை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நிவ்ஸ்வய.
வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்: வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்: Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.