ஆசிரியர் யாப்புக்கமைய ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பரீட்சைகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் கடந்த வியாழன் (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார். அந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதிபர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக இந்த பரீட்சை முறையாக இடம்பெறாமையை குறிப்பிடலாம். நாட்டில் பாடசாலைகளில் உள்ள அதிபர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக பதில் அதிபர்களை நியமிப்பது தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
பாடசாலைகளில் இருக்கின்ற திறமையான மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களை கண்டறிவதற்கும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
வருடாந்தம் ஆசிரியர் பரீட்சைகளை நடத்த தீர்மானம்!
Reviewed by irumbuthirai
on
September 13, 2020
Rating:

No comments: