திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 10ம் நாள் அதாவது புதன்கிழமை (14) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 135 பேர் கைது.37 வாகனங்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • தங்குமிட விடுதிகளில் இருந்து பணிக்கு செல்பவர்கள் அங்குள்ள ஏனையவர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவன பிரதானிகளுக்கு அறிவிக்க வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரல். 
  • கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு போதியளவு வைத்தியசாலை வசதி உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவிப்பு. 
  • கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மத்துகம பகுதியை சேர்ந்த தாதிக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. 

  • கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஒவ்வொரு கிளினிக் பிரிவிற்குமான தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு அறிவித்தலை வெளியிட்டது. நோயாளர்கள் குறித்த இலக்கத்துடன் தொடர்புகொண்டு உரிய முறையில் சேவையைப் பெறலாம். 
  • கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நாளை (15) காலை 5 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு. 
  • சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருமான உத்தரவு பத்திர விநியோகம் நாளை (15) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 130 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அறிவிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.