கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்:


கம்பஹா மற்றும் கொழும்பில் இரு வெவ்வேறு பரீட்சை மோசடிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலையில் பரீட்சார்த்தி ஒருவர் பரீட்சையின் போது Smart Watch பயன்படுத்தியுள்ளார். 
இதைக் கண்ட மேற்பார்வையாளர் அதை பறிமுதல் செய்ததோடு 
மீண்டும் பரீட்சை எழுத அனுமதித்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை பொலிஸில் பதிவு செய்துள்ளதாகவும் அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
மற்றுமொரு சம்பவத்தில் கொழும்பில் பரீட்சார்த்தி ஒருவர் தனது Smart Phone மூலம் தனது வினாத்தாளை படம்பிடித்து இன்னொருவருக்கு அனுப்பும் பொழுது பிடிபட்டுள்ளார். 
 இந்த தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்: கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்: Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.