வரலாற்றில் மறக்க முடியாத இன்றைய புலமைப்பரிசில் பற்றி...


Covid-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்றைய புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுவது முக்கிய விடையமாகும். 
இன்றைய பரீட்சை பற்றி... 
  • நாடு பூராகவும் 2,936 மத்திய நிலையங்கள். 
  • 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள். 
  • பரீட்சை  அனுமதி அட்டையே ஊரடங்கு சட்டத்துக்கான அனுமதி அட்டையாக மாறியமை..
  • பகுதி 1 மு.ப. 09.30 - 10.30 மணிவரையும், பகுதி 2 11.00 - 12.15மணி வரையும் இடம்பெறும். 
  • சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
  • கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கு அமர ஏற்பாடு. 
  • இதற்கு மேலதிகமாக இம்முறை Covid-19 ற்கு சிகிச்சை அளிக்கப்படும் IDH வைத்தியசாலையிலும் 5 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள் என்பது முக்கிய விடயமாகும். இந்த சின்ன வயதில் இலங்கையில் மிகவும் அழுத்தத்தை தரக்கூடிய பரீட்சையாக கருதப்படும் இந்தப் பரீட்சைக்கு வாழ்த்தி வழியனுப்ப யாருமின்றி பரீட்சைக்குத் தோற்றுவது அந்தப் பிள்ளைகளினதும் குடும்பத்தவர்களினதும் வாழ்வில் மறக்க முடியாத துயராகும் என்பதோடு இம்முறை பரீட்சையை வரலாறும் மறக்காது.
  • Irumbuthirainews
வரலாற்றில் மறக்க முடியாத இன்றைய புலமைப்பரிசில் பற்றி... வரலாற்றில் மறக்க முடியாத இன்றைய புலமைப்பரிசில் பற்றி... Reviewed by irumbuthirai on October 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.