கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இவ்வருடம் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரையும் பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஆரம்பமாகி,
செப்டம்பர் 5 ஆம் திகதி வரையும் ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ளன.
இம்முறை ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில், வௌிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
வௌிநாட்டு பார்வையாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதென ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் குழுக்களுக்கு ஜப்பான் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு:
Reviewed by irumbuthirai
on
March 20, 2021
Rating:

No comments: