அரச ஊழியர் ஒருவர் வேலைக்குச் செல்லாமலேயே 15 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வந்த சம்பவம் இத்தாலியில் பதிவாகியுள்ளது.
மருத்துவமனையில் 2005 ஆம் ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்ட குறித்த ஊழியர் அன்றிலிருந்தே வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
தனக்கு எதிராக புகார் செய்யவும் கூடாது என முகாமையாளரையும் மிரட்டியிருக்கிறார்.
அதற்குப் பின்னர்
வந்த முகாமையாளர் குறித்த ஊழியர் ஒருவர் வேலைக்கு வராதது பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
தற்போது இது தொடர்பான நீண்ட விசாரணை இடம்பெற்று வருகிறது. ஊழியருக்கு எதிராகவும் அவரைக் கவனிக்காமல் இருந்த 06 முகாமையாளர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இத்தாலியில் இதுவரை யாரும் இவ்வளவு காலம் வேலைக்கு செல்லாமல் ஏமாற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்ற அரச ஊழியர்!
Reviewed by irumbuthirai
on
April 25, 2021
Rating:

No comments: