இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்த புதிய திரிபானது சிரேஷ்ட பிரஜைகள் மட்டுமன்றி இளைஞர்களையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய புதிய திரிபானது காற்றின் மூலமும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முந்தைய திரிபு 01 அல்லது 02 நபர்களுக்கு பரவக்கூடியது என்பதுடன் புதிய திரிபானது ஒருவரிலிருந்து 5-6 பேர் வரை பரவக்கூடியது என பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுபிடிப்பு!
Reviewed by irumbuthirai
on
April 25, 2021
Rating:

No comments: