மன்னார், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மின்சார சபை ஊழியர் ஒருவர் தனது பதவி உயர்வுக்கான பரீட்சை ஒன்றை தனிமைபடுத்தபட்ட இடத்திலேயே எழுதியுள்ளார்.
இவர் இந்த பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திலேயே தோற்ற வேண்டியிருந்தது.
ஆனால் இவரின் நிலையை கருத்தில் கொண்டு துரித
முயற்சிகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் மின்சார சபை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் விளைவாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பரீட்சை எழுதிய நபர்!
Reviewed by irumbuthirai
on
April 25, 2021
Rating:

No comments: