அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்:


தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மின்சார பாவனையாளர்களின் முறைப்பாடுகளை விசாரித்து துரிதமாக சிறப்பான சேவையை அவர்களுக்கு வழங்கும் முகமாக புதிய அவசர தொலைபேசி இலக்கம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
0775 687 387 என்ற இந்த இலக்கத்திற்கு WhatsApp, Viber, IMO மூலமும் தொடர்பு கொள்ளலாம். இதற்கு மேலதிகமாக MMS மூலமும் தொடர்பு கொள்ளலாம். 
பாவனையாளர்கள் தமது எழுத்து மூலமான முறைப்பாடுகளை, புகைப்படமொன்றை எடுத்தும் அனுப்பலாம். 
இச்சேவையைப் பெற்றுக் கொள்பவர்கள், தங்களத, பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்), மின்சாரப்பட்டியல் கணக்கு இலக்கம், முறைப்பாட்டின் விபரம், தொடர்புடைய ஆவணங்கள் (இருப்பின்) ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்: அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.