ரிஷாட் பதியுதீன் வழக்கு: தொடராக விலகும் நீதிபதிகள்:


தம்மை கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்தல் சட்ட விரோதமானது என்ற தீர்ப்பினை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 
இது தொடர்பான விசாரணைகளிலிருந்து இதுவரை உச்சநீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் விலகியிருந்தனர். 
இந்நிலையில் குறித்த மனு இன்று (23) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தனிப்பட்ட காரணங்களால் தாம் குறித்த மனு விசாரணைகளில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸும் விலகியுள்ளார். 
அந்தவகையில் இந்த விசாரணைகளிலிருந்து மொத்தம் 3 பேர் இதுவரை விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீன் வழக்கு: தொடராக விலகும் நீதிபதிகள்: ரிஷாட் பதியுதீன் வழக்கு: தொடராக விலகும் நீதிபதிகள்: Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.