வேலை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு 5 வருட கால சம்பளமில்லாத விடுமுறை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்சர்வர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
அமைச்சர் குணவர்தனவின் கூற்றுப்படி, அரச ஊழியர்கள் 5 வருட முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் மூப்பு மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள் என்று தி சண்டே ஒப்சர்வர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அரச ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு : அரசின் புதிய திட்டம்!
Reviewed by Irumbu Thirai News
on
June 05, 2022
Rating:

No comments: