Bachelor of Information Technology (BIT - External) - 2022 (University of Colombo)

07 பேர் அடங்கிய குறித்த குழுவின் அறிக்கையானது இன்னும் 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இது தொடர்பான சுற்றறிக்கை யானது சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சம்பளமற்ற லீவு வழங்குதல் என்ற தலைப்பிலேயே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)
ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர்
"சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறை வழங்குதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை தொடர்பான விளக்கங்களை வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதாவது வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அரச ஊழியர் தமது விதவைகள் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் வதியாதோர் வெளிநாட்டு கணக்கு திறந்து அதன் ஊடாக நாட்டுக்கு மாதாந்தம் பணம் அனுப்ப வேண்டும்.
அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)
நிறைவேற்று தரமில்லாத புதிதாக இணைந்த அரச ஊழியர்களும் தமது தகுதிகாண் காலம் முடிவடைவதற்கு முன்னர் வெளிநாடு செல்லலாம். அவ்வாறு சென்றவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்ததன் பின்னர் தகுதிகாண் காலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் எத்தனை பேரை வெளிநாடு செல்ல அனுமதிப்பது என்பது தொடர்பான தீர்மானம் அந்த நிறுவனம் நியமிக்கும் குழு மூலமே எடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து எத்தனை பேரை உச்ச அளவில் வெளிநாடு செல்ல அனுமதிப்பது என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.
வெளிநாடு செல்ல அல்லது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் தொழில் ஒன்றில் ஈடுபடல் போன்ற நோக்கங்களுக்காக அரச உத்தியோகத்தர் சேவை காலத்தில் அதிகபட்சம் 05 வருடங்களுக்கு உட்பட்டு உத்தியோகத்தரின் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு ஏற்புடையதாக கொள்ளக்கூடிய வகையில் சம்பளம் இல்லாத வெளிநாட்டு லீவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் 35 வயதுக்குட்பட்ட அரச உத்தியோகத்தர்கள், தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலம் அல்லது வேறு எந்த மொழி / மொழிகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் தொழில் பயிற்சியை பூர்த்தி செய்வதற்கு அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு உட்பட்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சுற்றறிக்கை அறிமுகப் படுத்துவதற்கு முன்னர் தாபன விதிக்கோவை ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடு சென்று இதுவரை நாடு திரும்பாத, அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை கால பகுதியில் உள்ள உத்தியோகத்தர்கள், சம்பளத்துடனான லீவு அல்லது சம்பளமற்ற லீவைப் பெற்றிருப்பதன் காரணமாக கட்டாய சேவை காலத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள், கட்டாய சேவை காலத்தை நிறைவு செய்துள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் தகுதிகாண் காலத்தில் உள்ள நிறைவேற்றுதரத்தில் அல்லாதவர்களுக்காகவும் இந்த விடுமுறை பெறலாம்.
ஏற்கனவே சம்பளமற்ற அல்லது சம்பளத்துடன் வெளிநாடு சென்றுள்ள ஊழியர்கள் இந்த ஏற்பாடுகளுக்கு அமைய சம்பளமற்ற லீவு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வெளிநாட்டிலிருந்தே எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கலாம்.
இந்த ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடு செல்லும் சகல ஊழியர்களும் வெளிநாட்டு நிதி கணக்கிற்கு (NRFC) பணம் அனுப்ப வேண்டும்.
அந்தவகையில்,
ஆரம்ப நிலை சேவை வகுதியை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மாதாந்தம் 100 அமெரிக்க டொலர்களும்
இரண்டாம் நிலை சேவை வகுதியை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 200 அமெரிக்க டொலர்களும்
மூன்றாம் நிலை சேவை வகுதியை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 300 அமெரிக்க டொலர்களும்
நிறைவேற்றுத்தர சேவை வகையை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 500 அமெரிக்க டொலர்களும் அனுப்ப வேண்டும்.
உத்தியோகத்தர் வெளிநாட்டில் தொழில் செய்யும் போது மேற்கூறப்பட்டுள்ள பணத்தை அல்லது தொழில் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் 25 வீதத்தை அனுப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு பணம் அனுப்பீடு செய்வதற்காக வெளிநாடு சென்ற நாள் முதல் 2மாத நிவாரணம் வழங்கப்படுவதுடன் மூன்றாவது மாதத்திலிருந்து பணம் அனுப்ப வேண்டும்.
இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் 2022-6-22ஆம் திகதி முதல் நடைமுறையாகும்.
இந்த சுற்றறிக்கைகளை மும்மொழிகளிலும் இங்கே பார்வையிடலாம் மற்றும் டவுன்லோட் செய்யலாம்..
இன்று இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியான பயிற்சி செயலமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன் உயர்தர ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு மூலமான பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்பட்டு உயர் தரத்திற்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்படும்.
இந்த விசேட வேலைத்திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் ஆகிய மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்பதுடன் சகல பயிற்சி நடவடிக்கைகளும் ஜூலை மாதம் நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே நாடளாவிய ரீதியில் பிரதான நகரங்கள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் 70 வீதம் முதல் 80 வீதம் வரையான தொகையினர் வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல பிரதேசங்களிலும் அதிபர்கள் ஆசிரியர்களைக் கட்டாயம் வரவேண்டும் என்று கூறுவதோடு வராவிட்டால் தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுத்து தேவையற்ற நெருக்கடிகளை அவர்களுக்கு தோற்றுவிப்பதும் அறியக்கிடைக்கிறது
கல்வி அமைச்சர் கூறினார்... இந்த வாரம் ஆசிரியர்கள் தன்னார்வ அடிப்படையில் சுய விருப்பத்தின் பேரில் கடமைக்கு செல்வார்கள் என இவ்வாறான பின்னணியில் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை வழங்கப்படும் என அச்சுருத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் கல்வி அமைச்சால் அதிகாரம் வழங்கப்படவில்லை. இவ்வாறு செய்வது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுத்தரக்கோரி எம்பிலிப்பட்டிய, ஹட்டன், காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிக்கையில், 110 விடைத்தாள் திருத்தம் மத்திய நிலையங்கள் இருக்கும் நிலையில் அதில் 5, 6 மத்திய நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எரிபொருள் பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று காலையும் பேசினேன்... விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடமைக்கு செல்வதற்கு முன்னர் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது கடமை நிறைவடைந்து செல்லும்போது மாலை 5 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியிலும் எரிபொருளை பெறச் சென்றால் அதனை வழங்க முடியுமாக இருக்கும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை காட்டி எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் ஏச்சு பேச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேல் முறையீடுகள் தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய மேல்முறையீடுகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.