90% சித்தி: மத்திய மாகாண சுற்றறிக்கையை இரத்துச் செய்ய பணிப்புரை விடுத்த கல்வி அமைச்சர்!



2023 க.பொ.த. (சா/த) சித்தியை 90% வரை உயர்த்தல் என்ற தலைப்பில் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்யமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் நேற்று(24) பாராளுமன்றத்தில் வைத்து பணிப்புரை விடுத்துள்ளார். 


90 வீதத்தை அடையும் வரை குறித்த பாடசாலை அதிபர்களின் சம்பள ஏற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல். 
90 வீதத்தை அடைந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சேவை காலத்தினுள் ஒரு முறை மாத்திரம் பெறக்கூடிய வகையிலான மூன்று வருட சம்பள ஏற்றம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு Service Priory Access Card ம் வழங்கப்படும் 

போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இச்சுற்றறிக்கை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.





Previous:


90% சித்தி: மத்திய மாகாண சுற்றறிக்கையை இரத்துச் செய்ய பணிப்புரை விடுத்த கல்வி அமைச்சர்! 90% சித்தி: மத்திய மாகாண சுற்றறிக்கையை இரத்துச் செய்ய பணிப்புரை விடுத்த கல்வி அமைச்சர்! Reviewed by Irumbu Thirai News on August 25, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.