சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்!


நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (3) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் காலநிலையை கருத்தில் கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் இதுவரை 06 பேர் மரணித்துள்ளனர். 

அவிஸாவெல்ல, புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் புவக்பிடிய ஹேவாஹின்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி 11 வயது சிறுமி ஒருவரும் மாத்தறை தெய்யந்தர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து இருவரும் மொத்தமாக ஆறு பேர் மரணித்துள்ளனர். 

மேலும் இதுவரை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, காலி, நுவரெலியா, கேகாலை, காலி, மாத்தறை,  அம்பாந்தோட்டை குருநாகல் ஆகிய 10 மாவட்டங்களே அவையாகும்.

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! Reviewed by Irumbu Thirai News on June 02, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.