பேட்ட , விஸ்வாசம் சென்னை முதல் நாள் வசூலில் சர்காரை நெருங்க கூடவில்லை

January 11, 2019
நேற்று வெளியான ரஜனி நடிச்ச பேட்ட படமும் அகித் நடிச்ச விஸ்வாசம் படமும் வெளியானது.
இந்த இரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலக்சன் வெளியிடப்பட்டுள்ளது..

இந்த இரண்டு படமும் ஹபுஸ்புல்லா ஓடியது என தெரியப்படுகிறது

பேட்ட 1.12கோடி
விஸ்வாசம் 88இலட்சம்
ஆனால் இவ் இரண்டினையும் கூட்டினாலும் சர்கார் பட வசூல் வரவில்லை..
சர்கார் 2.37கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ட , விஸ்வாசம் சென்னை முதல் நாள் வசூலில் சர்காரை நெருங்க கூடவில்லை  பேட்ட , விஸ்வாசம் சென்னை முதல் நாள் வசூலில் சர்காரை நெருங்க கூடவில்லை Reviewed by Irumbu Thirai News on January 11, 2019 Rating: 5

இது தான் அரசியல்

January 10, 2019

ஜனாதிபதி மைத்றிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இது தான் அரசியல்


இது தான் அரசியல் இது தான் அரசியல் Reviewed by Irumbu Thirai News on January 10, 2019 Rating: 5

வாட்ஸ்அப்பும் நிகழ்கால வாழ்க்கையும்

January 10, 2019
"டேய் மச்சான், பொம்புள புள்ளயல் இரிக்கிற குரூப்புகள் ஏதும் இருந்தா என்னயும் எட் பன்னி உடன்டா, அலுப்பா கெடக்கு, டைம்பாசுக்கு ஒருத்தியும் இல்லாம"

"அப்புடி ஒண்டயும் காணல்லடா, முபீஸ்கிட்ட இரிக்கிம் அனுக்கிட்ட கேளு எட் பன்னுவான்."

எப்போதும் பெண்களுடனேயே பேசி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் சமீருக்கு அப்போது யாருமே தொடர்பில் இல்லை என்பது வெறுப்பாகவே இருந்தது. ஊரில் எந்தப் பெண்ணை கண்டாலும் விடுவதில்லை, பாடசாலை கலைப்பது தொடக்கம் இரவு பிரதான வீதிக்கு வரும் பெண்கள் வரை எல்லோரையும் பார்ப்பான். எல்லோருக்கும் பின்னால் செல்வான். மொத்ததில் அவனை ஒரு பிளேய் போய் என்றே சொல்லவேண்டும்.

இரவு தூங்க வந்தவனுக்கு முபீஸின் நியாபகம் வர உடனே வாட்சாப்பில் முபீசுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டான். பதிலுக்கு முபீசிடமிருந்து "ஒரு குரூப் இரிக்கி பரவால்ல எட் பன்றன், கடும் ஓவரா போகாத, சும்மா பன் ஆஆ சட் பன்னு எல்லாரும் நம்முட ஊராளுகள் மறுகா கனகாட்டு" என்று பதில் வந்தது.

"டேய் மச்சான் நான் ஓவரா போகமாட்டன், எல்லாம் சும்மா பன் தானே. பொம்புள புள்ள எண்டா அதுகள் நமக்காக பொறந்தவளுகள்டா, பொம்புள புள்ளயல ஊட்டுக்க அடச்சி வெக்கப்போடா சுதந்திரமா உடனும், அதுகளுக்கும் ஆசா பாசம் இரிக்கிம்தானே. அத நாமானேடா நெறைவேத்தனும். நீ எட் பன்னி உர்ரா சும்மா வெளாடுவம்" என்று வழமையான பாணியில் பதில் கொடுத்தான் சமீர். உடனே "Girls & Boys" என்ற ஒரு குரூப்பில் சமீருடைய இலக்கம் எட் பன்னுபட்டது.

அதில் பல இலக்கங்களில் ஆண்கள் பெண்கள் என பலர் இணைந்திருந்தார்கள். ஹாய் என்று தொடங்கிய மெசேஜிலிருந்து இரவு தூக்கம் வரும்வரை ஏகப்பட்ட ரெகோடிங்க்ஸ், போட்டோஸ், நகைச்சுவை, டபுள் மீனிங் கதைகள் என்று அந்த இரவே அந்த குரூப்பினால் கலகலப்பாக இருந்தது. இறுதில் "Semma cool aa irukku, naan thoonga poren, virumbina aakel wanga, good night😘" என்ற மெசேஜூடன் நிறைவு பெற்றான். எப்புடியும் இந்த குரூப்புல ஒருத்திய செட் ஆக்கிரனும் என்ற எண்ணத்தோடு அன்று இரவுத்தூக்கம் ஆனது அவனுக்கு.

காலை பதினொரு மணிக்கு தூக்கம் விழித்து டேட்டாவை ஒன் பன்னி வாட்சாப் பேஸ்புக்கில்தான் முதலில் கண் வைத்தான். இரவு அவனை எட் பன்னியிருந்த குரூப்பிலிருந்து ஒரு இலக்கம் லெப்ட் ஆகியிருந்தது. "அடேய், யார்ரா இது, நம்ம வந்த அடுத்தநாளே ஒருத்தி லெப்ட் ஆகியிருக்காள்" என்று எண்ணியவனாக எதேச்சையாக அந்த இலக்கத்தினை தன்னுடைய சிறிய தொலைபேசியில் டயல் செய்து பார்த்தான்.

மாலையில் முபீஸிடமிருந்து அழைப்பொன்று வந்தது. ஆன்சர் பன்னி என்ன மச்சான் என்று கேட்டதற்கு "என்னடா குரூப்ல இருந்து காலைல லெப்ட் ஆகியிருக்காய்?" என்றான் முபீஸ். சிறிது அமைதி காத்தவன் "ஒண்டுமில்ல மச்சான் போன் லோடாகிட்டு, என்ன இனி குரூப்புல எட் பன்னனாம், நான் பொறகு பேசுறன்" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

காலையில் அந்த குரூப்பிலிருந்து விலகியிருந்தது அவனுடைய சொந்த தங்கையின் வாட்சாப் இலக்கம்தான் என்பதை எப்படி மற்றவனிடம் சொல்வான்! அவமானத்தில் கூனிக்குருகிப்போனான்...!

வலைத்தளங்களில் அவதானமாகவும் நாகரீகமாகவும் இருங்கள். உங்கள் குடும்பத்தினர் உடன்பிறப்புக்கள் அறிந்தோர் அறியாதவர் என உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் நடத்தைகளை பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஷ்ரப்
(பிடித்து இருந்தால் பகிரவும்)
வாட்ஸ்அப்பும் நிகழ்கால வாழ்க்கையும் வாட்ஸ்அப்பும் நிகழ்கால வாழ்க்கையும் Reviewed by Irumbu Thirai News on January 10, 2019 Rating: 5

4 வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட 3 பாரிய ஆபத்துக்கள் - மஹிந்த தெரிவிப்பு

January 09, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையில் தான் தோற்கடிக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா  3 பிரதான ஆபத்துக்களை எதிர்கொள்கிறது என தெரிவிந்துள்ளார்

1. பொருளாதாரத்தின் ஆபத்து எந்த நேரத்திலும் வீழ்ச்சியடைகிறது
2. 19A காரணமாக மொத்த அரசு எந்திரம் உடைந்துபோகும் ஆபத்து
3. முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பின் ஆபத்து..


பகிரவும்





4 வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட 3 பாரிய ஆபத்துக்கள் - மஹிந்த தெரிவிப்பு 4 வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட 3 பாரிய ஆபத்துக்கள் - மஹிந்த தெரிவிப்பு Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

அஜித் படத்தின் மீதும் வழக்கு

January 09, 2019
அஜித்தின் விஸ்வாசம் படம் நாளை ரிலீஸ். ரசிகர்கள் தங்களது ஆசை நாயகனை நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பார்க்க இருப்பதால் படு கொண்டாட்டத்தில் உள்ளனர்


நாளை திரையரங்குகள் முழுவதும் எப்படிபட்ட கொண்டாட்டமாக இருக்க போகிறதோ என்று எதிர்ப்பார்ப்பில் அனைவரும் உள்ளார்கள்
இந்த நேரத்தில், கடன் பிரச்சனையால் பைனான்சியர்

நாளை உலகம் முழுவது அஜித்-சிவா 4வது முறை கூட்டணியில் வர இருக்கும் படம் விஸ்வாசம்.
இதன் போது பைனான்சியர் உமாபதிக்கு கொடுக்க வேண்டிய 78லட்சத்தினை தரவில்லை என கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை திரையிட கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
படக் குழுவினர் தெரிவிக்கையில் இன்று ரூ.35 லட்சத்தை தருவதாகும் மீதி பணத்தினை4 நாட்களில் வழங்க உறுதி அளித்துள்ளனர்
அஜித் படத்தின் மீதும் வழக்கு அஜித் படத்தின் மீதும் வழக்கு Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

KL ராகுலின் க்ரஸ் இவ தானா?

January 09, 2019
இந்தியா அணிக்கான ரெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டீ20 போட்டிகளில் ஆரம்ப வீரராக களம் இறங்கும் கே எல் ராகுல் தனது க்ரஸ் பற்றி தெரிவிந்துள்ளார்..

தனியார் டீவி சனலில் அளித்த பேட்டியில் போலிவூட் நடிகை  மலைக்கா அரோரா மீது க்ர்ஸ் இருந்தா தெரிவிந்தார்.
மேலும் மலைக்கா அர்ஜூன் கபூருடன் இணைந்த பின் அந்த ஆசையினை மறந்துள்ளார்..
KL ராகுலின் க்ரஸ் இவ தானா? KL ராகுலின் க்ரஸ் இவ தானா? Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

சர்வதேச தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி - இந்திய பெண்

January 09, 2019
189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச சர்வதேச நிதியத்தின் 11 ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய வம்சாவளிப் பெண்  48 வயதுடைய இந்திய பெண் கீதா நியமிக்கப்பட்டுள்ளார்இவ் நிதியம் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது

உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.



இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார். மேலும் இப் பதவி மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்..  இவர் கடந்த 1ம் திகதி பதவி ஏற்றுள்ளார்..

இவருக்கு முன்பு இருந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31 ஆம் திகதி ஓய்வு பெற்றதற்குபமைய கீதா இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 அனைவருக்கும் பகிருங்கள்

சர்வதேச தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி - இந்திய பெண் சர்வதேச தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி - இந்திய பெண் Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

2 Post Vacancy In Mahaweli Project

January 09, 2019

1. Finance Manager
2. Civil Engineer

Share To Others


2 Post Vacancy In Mahaweli Project 2 Post Vacancy In Mahaweli Project Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

மீண்டும் எரிபொருட்களின் விலை குறைவு

January 09, 2019


இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும்..                                       எரிபொருள் விலைகளின் சூத்திரம் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன




தற்போது "உலகச் சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைந்துவிட்டன அதன்படி இலங்கை இன்று முதல் விலைவாசி குறைக்கப்பட வேண்டும்" என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மீண்டும் எரிபொருட்களின் விலை குறைவு மீண்டும் எரிபொருட்களின் விலை குறைவு Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று விசாரனை

January 09, 2019

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய குழு இன்று மீண்டும் கூடவுள்ளது




மேலும் இக் குழு இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றத்தின் கட்டடத்தில் கூடவுள்ளது

இக் குழு சபாநாயகரினால் நியமிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது..  சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் என்பன பரீசீலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று விசாரனை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று விசாரனை Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை

January 08, 2019

இன்று பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்துரையாடும் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகையில் புலமைப்பரிசில் பரீட்ட்சையின் மூலம் சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.. மற்றும் இப் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுக்க உள்ளதாக கூறினார்..



மேலும் குறைந்த வருமான பெறும் குடும்பத்தில் வசிக்கும் சிறுவர்களுக்குசிறார்புலமை பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5

தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி

January 08, 2019


இன்று சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்வருமாறு அறிவித்துள்ளார்..

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும்.


தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5

உலக வங்கி தலைவரின் திடீர் இராஜினாமா அறிவித்தல்

January 08, 2019
தற்போதய உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவரின் கடமைக் காலம் முடிவடைய இன்னும் 3 வருடங்கள் உள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்.. இவர் கடந்த 6 வருட காலமாக இப் பதவியில் இருந்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.. 
எதிர்வரும் மாதம்  பதவியிலிருந்து விலகுவதாக நேற்று தினம்  அறிவித்துள்ளார்.



இதனடிப்படையில் 59 வயதான ஜிம் யோங் கிம் பதவி விலகியதன் பின்னர், உலக வங்கியின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியான கிரிஸ்டாலினா ஜோர்ஜிவா உலக வங்கியின் இடைக்காலத் தலைவராகக் கடமையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது
உலக வங்கி தலைவரின் திடீர் இராஜினாமா அறிவித்தல் உலக வங்கி தலைவரின் திடீர் இராஜினாமா அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5
Powered by Blogger.