மகாபொல புலமைப்பரிசிலுக்கு இணையத்தளம்

January 22, 2020


இன்று மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளமொன்று www.mahapola.lk. என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன,  இன்று முதல் மகாபொல புலமைப்பரிசில் 

நிதியத்தின் சகல தகவல்களையும் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆயிரத்து 500 கோடி ரூபாவாகவுள்ள புலமைப் பரிசில் நிதியத்தை இரண்டாயிர்ம் கோடி வரை உயர்;த்த எதிர்பார்க்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த அரசாங்க நிருவாகத்தின்போது மகாபொல புலமைப்பரிசில் வழங்குவதில் பிரச்சினைகள் இருந்தன. தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக இதனை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி.)
மகாபொல புலமைப்பரிசிலுக்கு இணையத்தளம் மகாபொல புலமைப்பரிசிலுக்கு இணையத்தளம் Reviewed by irumbuthirai on January 22, 2020 Rating: 5

மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள்

January 21, 2020


1,000 மாணவர்களுக்கு இந்த 2020 ஆம் ஆண்டில்  கணனி டிப்ளோமா அல்லது உயர்தர டிப்ளோமா பாடநெறியை   வார இறுதி நாட்களில் 

தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஹோமாகம தியகமவில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.
மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள் மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள் Reviewed by irumbuthirai on January 21, 2020 Rating: 5

தரம் 02 (கணிதம்): இலகு முறையில்...

January 20, 2020


தரம் 02 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தாம் செய்த பயிற்சிகளை தாமே சரி பிழை பார்க்கும் வசதி. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 02 (கணிதம்): இலகு முறையில்... தரம் 02 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 20, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள்

January 19, 2020

பரீட்சைத் திணைக்களத்தால் 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை இங்கு தருகிறோம்.
இதில்,


13 வகையான பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சையின் பெயர், நடைபெற்ற திகதி, பெறுபேறு வெளியிடப்பட்ட திகதி போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன் முழு விபரத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Results in November

பரீட்சைத் திணைக்களத்தால் 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தால் 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் Reviewed by irumbuthirai on January 19, 2020 Rating: 5

Results: Competitive Examination on Merit Basis for Promotion to the Post of Administrative Grama Niladhari of the Management Assistant Supra Grade under the Ministry of Home Affairs

January 19, 2020

Examination Department
Results of Competitive Examination on Merit Basis for Promotion to the Post of Administrative Grama Niladhari of the Management Assistant Supra Grade under the Ministry of Home Affairs. Click the link below to view the results:


Results
Results: Competitive Examination on Merit Basis for Promotion to the Post of Administrative Grama Niladhari of the Management Assistant Supra Grade under the Ministry of Home Affairs Results: Competitive Examination on Merit Basis for Promotion to the Post of Administrative Grama Niladhari of the Management Assistant Supra Grade under the Ministry of Home Affairs Reviewed by irumbuthirai on January 19, 2020 Rating: 5

தரம் 02 (தமிழ் மொழி): இலகு முறையில்...

January 19, 2020


தரம் 02 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சிகளை செய்து தாமே சரி பிழை பார்த்துக்கொள்ளலாம். 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 02 (தமிழ் மொழி): இலகு முறையில்... தரம் 02 (தமிழ் மொழி): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 19, 2020 Rating: 5

பாடசாலை மாணவர்களிடையே பங்களாதேஷ் தூதரகத்தால் நடாத்தப்படும் போட்டிகள்

January 19, 2020


தரம் 6-13 வரையான மாணவர்களுக்கு 3 வயதுப் பிரிவில் போட்டிகள் நடைபெறும். கட்டுரை, கவிதை, சித்திரம் போன்ற போட்டிகள் நடாத்தப்படும். 
தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற எந்த மொழியிலும் சமர்ப்பிக்கலாம். 
ஆக்கங்களை சமர்ப்பிக்க வேண்டிய இ. தினம்: 

10-02-2020. 
இது தொடர்பான முழு விபரங்களை கீழுள்ள படத்தில் காண்க.


பாடசாலை மாணவர்களிடையே பங்களாதேஷ் தூதரகத்தால் நடாத்தப்படும் போட்டிகள் பாடசாலை மாணவர்களிடையே பங்களாதேஷ் தூதரகத்தால் நடாத்தப்படும் போட்டிகள் Reviewed by irumbuthirai on January 19, 2020 Rating: 5

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை

January 18, 2020

புதிய முறை மூலம் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது 

'ட்ரோன' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால் . கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். ஆதர் சி கிளார்க் நிறுவனத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி 6 மாத கால குறுகிய காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் நிறுவனங்களில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான சேவையை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். 
ட்ரோன தொழில்நுட்பத்தின் மூலம் பெரும் நிலப்பரப்பில் நுளம்பின் தாக்கத்தைக் குறைக்க முடியும். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத் முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

விரைவில் இரயில் சாரதிப் பாடசாலை

January 18, 2020

விரைவில் ரயில் சாரதிப் பாடசாலையொன்று இரத்மலானையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வாக இவ்வாறான பாடசாலையொன்றின்; தேவை இருப்பதாக ரெயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அலுவலக ரெயில் சேவையை 

செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்தல், ரெயில் இடைமாறல் இடங்களின் எண்ணிக்கை என்பவற்றை அதிகரித்தல் மற்றும் பிரதான பாதையிலான சேவைகளைக் கூடுதலாக மேற்கொள்ளல் உள்ளிட்ட ரெயில் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ரெயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க கூறினார். 
நாட்டிற்கு கடந்த காலப்பகுதியில்  கொண்டுவரப்பட்ட ரெயில் எஞ்சின்கள் நாட்டிலுள்ள ரெயில் பாதைகளில் சேவையில் ஈடுபடுத்த முடியாது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

விரைவில் இரயில் சாரதிப் பாடசாலை விரைவில் இரயில்  சாரதிப் பாடசாலை Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

17-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

January 18, 2020

17-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய 03 மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
இதில், 

இலங்கை பொலிஸ் - பதவி வெற்றிடங்கள் 
பதிவாளர் திணைக்களம் - பதவி வெற்றிடங்கள் 
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 111 இன் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைத் தாண்டல் பரீட்சை போன்ற பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
இதன் தமிழ் வடிவத்தை முழுமையாகப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

இதன் ஆங்கில வடிவத்தை முழுமையாகப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

இதன் சிங்கள வடிவத்தை முழுமையாகப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



17-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 17-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு

January 18, 2020

கடந்த 5 வருட காலப்பகுதியில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக கல்விக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரம் பேர்


பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

January 18, 2020

பகிடிவதை காரணமாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன் அறிக்கை 

3 மாத காலப்பகுதிக்குள் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 
இதன் அங்கத்தவர்களாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சுக், முன்னாள் உபவேந்தரான நாரத வர்ணசூரிய, பேராசிரியர் சங்கைக்குரிய மாகம்மன பஞ்ஞானந்த தேரர், கலாநிதி வணக்கத்திற்கு பெனட் சாந்த அடிகளார், கலாநிதி சந்திரா அம்புல்தெனிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ்  செயற்பட உள்ளனர்.  இதன் அமைப்பாளரும் செயலாளருமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உபதலைவர் திருமதி ஜனிதா லியனகே செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

Results: Open Competitive Examination for Recruitment to Grade III of the Executive Service Category (Post of Statistician) of the Department of Census and Statistics - 2018 - 2019

January 18, 2020


Examination department  
Open Competitive Examination for Recruitment to Grade III of the Executive Service Category (Post of Statistician) of the Department of Census and Statistics - 2018 - 2019
Click the link below for results


Results: Open Competitive Examination for Recruitment to Grade III of the Executive Service Category (Post of Statistician) of the Department of Census and Statistics - 2018 - 2019 Results:  Open Competitive Examination for Recruitment to Grade III of the Executive Service Category (Post of Statistician) of the Department of Census and Statistics - 2018 - 2019 Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5
Powered by Blogger.