க.பொ.த. (உ/த) பொருளியல்: இலகு முறையில்...

April 03, 2020

க.பொ.த. (உ/த) பாடத்திட்டத்தின்படி பொருளியல் (Economics) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. பயிற்சி வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ/த) பொருளியல்: இலகு முறையில்... க.பொ.த. (உ/த) பொருளியல்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 03, 2020 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

April 01, 2020


அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமாகி, இரண்டு வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
இன்று (1) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(அ.த.தி)

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

2020 க.பொ.த. (உ.தர) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக...

April 01, 2020


2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள தினத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட்வில்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 

நடைபெறவுள்ள இந்த பரீட்சை ஒத்திவைக்கப்படும் என ஒரு சில சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
(அ.த.தி)
2020 க.பொ.த. (உ.தர) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக... 2020 க.பொ.த. (உ.தர) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக... Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

தனிமைப்படுத்தலுக்காக 2913 பேர் பதிவு

April 01, 2020


இன்று நண்பகல் வரையில் கொரோனா தொற்று தனிமைப்படுத்தலுக்காக,  2913 பேர் பதிவு செய்திருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள இன்று (01) நண்பகல் வரை பாதுகாப்பு பிரிவினாரால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 
இதற்கமைய இவர்கள் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படும் வரை இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அவர் தெரிவித்தார். 
இதேவேளை தனிமைப்படுத்தலில் இருந்து இடைவிலகியோர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருகை தந்தவர்களை பதிவு செய்வதற்கு இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததோடு பதிவு செய்யாதவர்கள் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி.)

தனிமைப்படுத்தலுக்காக 2913 பேர் பதிவு தனிமைப்படுத்தலுக்காக  2913 பேர் பதிவு Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு

April 01, 2020


கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து  நாட்டிற்குள் வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான இறுதி தினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
இவர்கள் 1933 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 
(அ.த.தி)
பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

காணொளி முறை மூலம் மருத்துவ சேவை

April 01, 2020


வைத்தியசாலைகளில் (கிளினிக்- Clinic ) மருத்துவ சேவையை காணொளி (Video) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று (31) ஆரம்பமானது. இதன் மூலம் 

தற்போதைய கொரோனா நோய் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. 0770773333 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் oDoc app கையடக் தொலைபேசி யில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இதுதொடர்பான தகவல்களை அறியலாம். 
(அ.த.தி.)
காணொளி முறை மூலம் மருத்துவ சேவை காணொளி முறை மூலம் மருத்துவ சேவை Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண்.

March 30, 2020


உலகில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா-வைரஸிற்குப் பலியான முதல் சம்பவம் பதிவாகியுள்ளது. ஸ்பெயின் இளவரசி மரியா தெரேஸாவே இவ்வாறு கொரோனா-வைரஸ் தொற்றி உயிரிழந்துள்ளார். இறக்கும்போது இளவரசிக்கு 86 வயது. இதுவரை இறப்பு எண்ணிக்கையில் 2ம் இடத்தில் ஸ்பெய்னும் முதலிடத்தில் இத்தாலியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண். கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண். Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு... நோய் உறுதிசெய்யப்பட்டதும் இன்றுதான்...

March 30, 2020


Covid-19 (கொரோனா வைரசு தொற்று) நோயாளர்கள் மத்தியில் இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதிசெய்துள்ளார். இவருக்கு 64 வயது. ஆண் நோயாளி. கொச்சிக்கடை பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர். 
இன்றைய தினம் தனியார் வைத்தியசாலையில் இருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இந்த நோயாளி கொரோனா வைரசு தொற்று நோயாளர் என்பது இன்றைய தினமே உறுதிசெய்யப்பட்டது. இதுமாத்திரமன்றி இவர் இருதய நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர் என்றும் நீண்டகாலமாக சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி.)

இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு... நோய் உறுதிசெய்யப்பட்டதும் இன்றுதான்... இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு... நோய் உறுதிசெய்யப்பட்டதும் இன்றுதான்... Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை

March 30, 2020


பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா வைரசு தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை தொடர்பாக அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 

அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு 
 ஊடக அறிக்கை 

2020.03.29
நாலக கலுவேவ அவர்கள்,
பணிப்பாளர் நாயகம்,
அரசாங்க தகவல் திணைக்களம்

 தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா வைரசு தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு இணைத்துக் கொள்ளல் 

 தற்போது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் சேவைக்காக சமூகமளித்துள்ள பதிவுசெய்துள்ள பட்டதாரி பயிற்சியாளர்களில் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு மே மாதம் வரையில் தாமதம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய கொரோனா வைரசு நோய் தொற்று நிலையை கட்டுப்படுத்துவதில் இவர்களின் ஒத்துழைப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இந்த காரியாலயங்களுக்கு தற்காலிகமாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதினால் இவர்களுக்கு சேவைக்கு சமூகமளிப்பதற்கு சிரமம் என்பதினால் நாளைய (2020.03.30) தினத்தில் சுகாதார வைத்திய அதிகாரி ஃ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல என்பதுடன் இது தொடர்பில் குறிப்பிட்ட காலத்தில் அறிவிக்கப்படும்.

எஸ். ஹெட்டியாராச்சி 
செயலாளர் 
அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு

(அ.த.தி.)

கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

2019 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்...

March 30, 2020


2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் 

30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்சமயம் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 
பெறுபேறுகளை கணனி மயப்படுத்துவதற்காக அதிகாரிகளை கொண்டு வருவதில் சிரமம் காணப்படுகிறது. எனினும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
2019 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்... 2019 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்... Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு

March 28, 2020


கொரோனா வைரஸ் காரணமாக IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா வைரசு தொற்று நோயாளி ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். 
உயிரிழந்த இந்த நோயாளி 60 வயதான ஆண் ஆவார். இவர் மாரவில பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர். சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு இவர் உட்பட்டிருந்தார். அத்தோடு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் அவதிப்பட்ட நோயாளியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.
இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு Reviewed by irumbuthirai on March 28, 2020 Rating: 5

கொரோனாவுக்காக புது விடையத்தை உருவாக்கிய இலங்கை கடற்படை

March 28, 2020


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படை ஒரு கிருமிநாசினி அறையை உருவாக்கியுள்ளது. கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரிவின் கடற்படையினர் கிருமி நீக்கம் செய்வதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். 
கிருமி நீக்கம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த வடிவமைப்பு முழு உடலையும் ஒரே நேரத்தில் 

கிருமி நீக்கம் செய்ய உதவுகிறது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த கண்டுபிடிப்பு தற்போது பல கடற்படை முகாம்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அவற்றில் ஒன்று கடற்படை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது. 
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, கடற்படை வீரர்கள் சிறப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக முகாம்களுக்கு வெளியே தங்களுடைய கடமைகலை ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சோதனை நேரத்தில் கடற்படையின் ஆரோக்கியமான மனித வளத்தை பராமரிக்க முகாமில் ஒரு ஆரோக்கியமான சூழலை பராமரிப்பது கட்டாயமாக இருப்பதால் அவர்கள் வெளியே பணிகள் முடித்து முகாமுக்குள் திரும்பி வருகின்ற போது கிருமி நீக்கம் செய்யப்படுவது முக்கியமானதாகும்.
அ.த.தி.
கொரோனாவுக்காக புது விடையத்தை உருவாக்கிய இலங்கை கடற்படை கொரோனாவுக்காக புது விடையத்தை உருவாக்கிய இலங்கை கடற்படை Reviewed by irumbuthirai on March 28, 2020 Rating: 5

தயாராகிறது Voice of America கட்டிடம்...

March 28, 2020

சுகாதார அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா வன்னிஆராச்சி ,பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோர் பல அதிகாரிகளுடன் இணைந்து வியாழக்கிழமை 26 ஆம் திகதி மாலை சிலாபம், இரனவிலயிலுள்ள அரசுக்கு சொந்தமான வொய்ஷ் ஒப் அமேரிக்கா கட்டிடத்தை கோவிட்-19 நோயாளர்களை தனிமைப்படுத்தி வைத்து மருத்துவம் செய்வதற்கான களங்களாக பாவிப்பதற்காக பரிசீலனை செய்தனர். இதுவரை பயன்படுத்தப்படாத 

இந்த கட்டிடத்தில் தனிமைப்படுத்தல் மருத்துவ பரிசோதனைக்காக 50 படுக்கைகள் இடமளிக்க முடியும். லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், லெப்டினன் கேணல் ஆசிறி முஹந்திரம்கே அவர்களின் மேற்பார்வையின் கீழ் 1 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் படையினர் 5 நாட்களுக்குள் முழு கட்டிடத்தையும் மேம்படுத்தி திருத்தியமைக்கும் பணியை பொறுப்பெடுத்துள்ளனர். 
இந்த பரிசீலனையின் போது, சுகாதாரம், சமையல் வசதிகள் போன்றவற்றுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் இருக்கும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
அ.த.தி.
தயாராகிறது Voice of America கட்டிடம்... தயாராகிறது Voice of America கட்டிடம்... Reviewed by irumbuthirai on March 28, 2020 Rating: 5
Powered by Blogger.