மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கான திட்டம்

April 16, 2020


கொரோனா வைரஸ் பிரச்சினை உலகலாவிய ரீதியில் தீவிரமடையும் இவ்வேளையில்  மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒன்றிணைந்துள்ளன. இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:



(அ.த.தி) 

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கான திட்டம் மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கான திட்டம் Reviewed by irumbuthirai on April 16, 2020 Rating: 5

G.C.E. (A/L) MODEL PAPERS FOR ENGLISH MEDIUM (11 SUBJECTS)

April 16, 2020


G.C.E. (A/L) 
MODEL PAPERS FOR ENGLISH MEDIUM 
(11 SUBJECTS) 
Accounting 
Agriculture 
Biology 
Business Studies 
Chemistry 
Combined Maths 
Economics 
Physics 
ICT 
Sinhala Language & Literature 
Tamil Language & Literature 

Click the link below for all Model Papers


Model Papers

G.C.E. (A/L) MODEL PAPERS FOR ENGLISH MEDIUM (11 SUBJECTS) G.C.E. (A/L) MODEL PAPERS FOR ENGLISH MEDIUM (11 SUBJECTS) Reviewed by irumbuthirai on April 16, 2020 Rating: 5

09-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

April 15, 2020


09-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


09-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 09-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on April 15, 2020 Rating: 5

ரூ: 5000 கொடுப்பணவைப் பெறவிருக்கும் சாரதிகள்

April 15, 2020


ரூ. 5000 கொடுப்பணவை மேலும் இரு தரப்பினர் பெறவுள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றி இருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை 

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேபோன்று பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
ரூ: 5000 கொடுப்பணவைப் பெறவிருக்கும் சாரதிகள் ரூ: 5000 கொடுப்பணவைப் பெறவிருக்கும் சாரதிகள் Reviewed by irumbuthirai on April 15, 2020 Rating: 5

பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை:

April 15, 2020



பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் அல்லது வேன் உரிமையாளர்கள், பெற்றோர்களிடம் மாதாந்தக் கட்டணத்தை அறவிடுவது குற்றமாகும் என 

அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பஸ் மற்றும் வேன் உரிமையாளர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
தற்போது நாடு  எதிர்கொண்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு பெற்றோரிடம் கட்டணம் அறவிட்டு, அவர்களை இக்கட்டான நிலைமைக்கு தள்ள வேண்டாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)


பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை: பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை: Reviewed by irumbuthirai on April 15, 2020 Rating: 5

ஆரம்பப் கல்விக்குரிய சிறுவர் பாடல்கள்

April 15, 2020


ஆரம்பப் கல்விக்குரிய (Primary Education) சிறுவர் பாடல்கள் சிலவற்றை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு சிறுவர் பாடல்களும் எழுத்து வடிவிலும் இசை வடிவிலும் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


ஆரம்பப் கல்விக்குரிய சிறுவர் பாடல்கள் ஆரம்பப் கல்விக்குரிய சிறுவர் பாடல்கள் Reviewed by irumbuthirai on April 15, 2020 Rating: 5

வீடுகளுக்கு வரும் திரி போஷா

April 14, 2020

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா, விட்டமின் வகைளையும் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது 
  குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களை  072 280 95 77 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன அறிவித்துள்ளார்.
(அ.த.தி)

வீடுகளுக்கு வரும் திரி போஷா வீடுகளுக்கு வரும் திரி போஷா Reviewed by irumbuthirai on April 14, 2020 Rating: 5

வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் மீண்டும் நீடிப்பு

April 13, 2020


அரச, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் மீண்டும் ஏப்ரல் 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி.)

வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் மீண்டும் நீடிப்பு வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் மீண்டும் நீடிப்பு Reviewed by irumbuthirai on April 13, 2020 Rating: 5

கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்தல்: வெளியானது வர்த்தமானி:

April 12, 2020


Covid-19 தொற்று நோயினால் மரணிப்பவரின் பூதவுடல் ,தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பில், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர். பவித்ரா வன்னியாரச்சியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ.த.தி)

கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்தல்: வெளியானது வர்த்தமானி: கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்தல்: வெளியானது வர்த்தமானி: Reviewed by irumbuthirai on April 12, 2020 Rating: 5

3 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகங்கள்

April 12, 2020


பல்கலைக்கழகங்களை (Universities) 3 கட்டங்களில் திறப்பதற்கு தீர்மானிக்ப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்.
1ஆவது கட்டம் : 
2020 மே மாதம் 4ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவது கல்வி மற்றும் கல்விசார் பணியாளர் சபைக்காக மாத்திரம் இதில், அழைக்கப்பட வேண்டிய பணியாளர் சபை குறித்து தீர்மானிப்பதற்கு அதிகாரம் முழுமையாக அந்தந்த பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு அளிக்கப்படும். 
2ஆவது கட்டம் : 
2020 மே மாதம் 11ஆம் திகதி அந்தந்த கற்கை நெறிகளுக்கான இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகங்களை திறத்தல். இதற்கமைவாக, வைத்திய பீட கற்கைநெறியில் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், விசேட பட்டக் கற்கை நெறியில் 4ஆவது ஆண்டு மாணவர்களுக்கும் பொதுவான பட்டக் கற்கைநெறியில் மூன்றாவது வருட மாணவர்களுக்கும் என்ற ரீதியில் அந்தந்த கற்கை நெறிகளுக்கான இறுதி வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். 
3ஆவது கட்டம் : 
2020 மே மாதம் 18ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்காக பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். இந்த வகையில் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் பொழுது கொரோனா வைரசு தொற்று நிலமையில் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்து கூடிய விரைவில் சுற்றரிக்கையொன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.
(அ.த.தி)

3 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகங்கள் 3 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகங்கள் Reviewed by irumbuthirai on April 12, 2020 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள்

April 12, 2020


தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய மாதிரி வினாத்தாள்களை (Model Papers) இங்கு தருகிறோம். இதில், 

பகுதி 1 மற்றும் பகுதி-11 வினாப்பத்திரங்களும் அதற்குரிய விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன. 
புள்ளி வழங்கும் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் Reviewed by irumbuthirai on April 12, 2020 Rating: 5

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

April 11, 2020


2020 இல் பாடசாலை இரண்டாம் தவணை மே 11, திங்கள் ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாடசாலை இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 20, திங்கள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக இவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்கள் 

தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொலை கல்வி வசதிகளை முடியுமானளவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 
இதேவேளை பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower

April 11, 2020


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் இன்று (11) பிற்பகல் 6.45க்கு தாமரை கோபுரம் ஒளியூட்டப்பட்டு கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு தமது உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராது முன்னின்று செயற்பட்டு வரும் அனைவருக்கும் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.  
சவாலான சந்தர்ப்பத்தில் அனைத்து மக்கள் மத்தியிலும் தைரியத்தை ஏற்படுத்தி, முழு உலகிற்கும் முன்னுதாரணமாக மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்து பாதுகாப்பு தரப்பினர், அரச நிர்வாக பொறிமுறைக்குட்பட்ட அனைத்து அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பல ஊழியர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 

பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அனைவருக்கும் மக்களினதும் நாட்டினதும் கௌரவம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5
Powered by Blogger.