ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை...

April 19, 2020


மீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 
அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிப்பது கட்டாயமானதாகும். பஸ் வண்டிகள், வேன் அல்லது புகையிரதங்களில் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உற்படுத்த வேண்டும். 
இந்த நிபந்தனைகளின் கீழ் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
(அ.த.தி.)

ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை... ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை

April 19, 2020


தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
(அ.த.தி)

ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை

April 19, 2020


ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும். 
கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். 
ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். 
ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும். 
அலுவலகங்களை திறந்து நடத்திச் செல்லுகின்ற போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.
(அ.த.தி)

ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு

April 18, 2020


ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அரசாங்கம் இன்று (18) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு கல்வி  நிறுவனங்கள்,  திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை...

April 18, 2020


நாளை மறுதினம் திங்கள் (20) முதல் அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் (Curfew) அமுல்படுத்தப்படுதல் மற்றும் தளர்த்தப்படுதல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும். 

01. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் மீண்டும் அறிவிக்கும் வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும். 

02 கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவதுகொடை, அகுரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இம்மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். 

03. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பின்வரும் பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 22 புதன் முதல் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். 

04. ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகள் வருமாறு, 
கொழும்பு மாவட்டம் : 
கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், பம்பலபிட்டிய, வாழைத்தோட்டம், மரதானை, கொதடுவ, முல்லேரியாவ, வெல்லம்பிடிய, கல்கிஸ்ஸ, தெஹிவலை மற்றும் கொஹுவலை. 
கம்பஹா மாவட்டம்: 
ஜாஎல, கொச்சிக்கடை மற்றும் சீதுவை 
புத்தளம் மாவட்டம்: 
புத்தளம், மாரவிலை மற்றும் வென்னப்புவை 
களுத்துறை மாவட்டம்: 
பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கமை.

 இந்த வகையில் கொட்டாஞசேனை, கிரேண்ட்பாஸ், பம்பலபிட்டிய, வாழைச்சேனை, மரதானை, கொதடுவை, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை, கொஹுவலை, ஜாஎலை, கொச்சிக்கடை, சீதுவை, புத்தளம், மாரவிலை, வென்னப்புவை, பண்டாரகமை, பயாகலை, பேருவளை, அளுத்கமை, வரகாபொல, அகுரணை, அலவதுகொடை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் அமுலில் இருக்கும். 
 ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது. 
ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும். ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரதான வீதிகளினூடாக பயணம் செய்யமுடியும். 
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் பிரதான வீதிகளை தொழிலுக்காக சென்று வருதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். மாவட்டங்களுக்கிடையிலான பயணம் தொழில் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை... ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை... Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம்

April 18, 2020


தனது உள்ளகப் பணிகளை தபால் திணைக்களம்  ஆரம்பித்துள்ளது. ஒரு மாத காலம் கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.  3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும் மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகைபிரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. கடிதங்கள் வகைபிரிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படவுள்ளன. மருந்துப் பொருட்களை வீட்டிற்கே விநியோகிக்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)

உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம் உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம் Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான தமிழ்மொழி: இலகு முறையில்...

April 18, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான தமிழ்மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான தமிழ்மொழிக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

தரம் 5ற்கான தமிழ்மொழிக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 4 மற்றும் 5 ற்கான தமிழ்மொழி: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான தமிழ்மொழி: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

கிராம சேவையாளர்களின் விலகல் முடிவுக்கு வந்தது

April 18, 2020


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதிக்குள்ளான குடும்பங்களுக்கு ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் எடுத்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இத்தீர்மானம் காணப்பட்டுள்ளது. 
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் இப்பணியை நிறைவேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் தாம் தயாரித்து வழங்கிய பெயர்ப்பட்டியல் கருத்திற்கொள்ளப்படாமை போன்ற காரணங்களால் மேற்படி பணியிலிருந்து விலக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிராம சேவையாளர்களின் விலகல் முடிவுக்கு வந்தது கிராம சேவையாளர்களின் விலகல் முடிவுக்கு வந்தது Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

வீட்டுத்தோட்டம் செய்ய ரூ. 40000 வரை கடன்

April 17, 2020


நவ சபிரி கிராமிய கடன் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டமொன்றை அமைக்க ஆகக்கூடிய தொகையாக ரூபா 40 ஆயிரம் வரையான கடனுதவியை 4%வட்டியில் அரச வங்கிகள் ஊடாக கடனாக வழங்க மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடனை மீளச் செலுத்தும் காலம் ஒன்பது மாதங்கள். என அறிவிக்கப்பட்டுள்ளது. 
நெல், மிளகாய், வெங்காயம், கௌபி, பாசிப்பயறு, உழுந்து, சோயா, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, உருளைக்கிழங்கு, வற்றாளை, மரவள்ளி, பால்கிழங்கு, மரக்கறி, கத்தரிக்காய், வெண்டிக்காய், பீட்ரூட், போஞ்சி கோவா, கரட் கறி மிளகாய், தக்காளி, லீக்ஸ், ராபு, நோகோல், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கை, இஞ்சி, கரும்பு முதுவானவற்றை இந்த கடன் திட்டத்தின் கீழ் உற்பத்திச் செய்ய முடியும்.
(அ.த.தி)

வீட்டுத்தோட்டம் செய்ய ரூ. 40000 வரை கடன் வீட்டுத்தோட்டம் செய்ய ரூ.  40000 வரை கடன் Reviewed by irumbuthirai on April 17, 2020 Rating: 5

கடன் மீளச்செலுத்தலை பிற்போடுவதற்காக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்

April 17, 2020


கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று காரணமாக வங்கி மற்றும் நிறுவனங்களுக்கு கடனை மீளச்செலுத்தலை பிற்போடுதல் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்:

வங்கி மேற்பார்வைத் திணைக்களம் 
0112 477133 
0112 477134 
0112 477360 
0112 477659 
0112 398743 
0112 398746 
0112 398790 
0112 398815 
0112 398820 
0112 398824

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்
0112 477500
0112 477504
0112 477258
0112 477562
0112 477573
0112 398786
0112 398806
0112 477380
0112 477340
0112 477495
0112 398774
0112 477026
(அ.த.தி)

கடன் மீளச்செலுத்தலை பிற்போடுவதற்காக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் கடன் மீளச்செலுத்தலை பிற்போடுவதற்காக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் Reviewed by irumbuthirai on April 17, 2020 Rating: 5

க.பொ.த. (உ/த): 36 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள்

April 17, 2020


க.பொ.த. (உ/தரம்):
கடந்தகால வினாப்பத்திரங்கள்
இதில்,


36 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. உயிரியல்
இரசாயணவியல்
பௌதீகவியல்
இணைந்த கணிதம்
உயிர் வளத் தொழினுட்பவியல்
விவசாய விஞ்ஞானம்
கணக்கீடு
விவசாய தொழினுட்பவியல்
வணிகக் கல்வி
வணிகப் புள்ளிவிபரவியல்
குடிசார் தொழினுட்பவியல் தொடர்பாடல்,ஊடகக்கற்கை
மனைப் பொருளியல்
தகவல்,தொடர்பாடல் தொழினுட்பவியல் உட்பட 36 பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Past Papers
க.பொ.த. (உ/த): 36 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள் க.பொ.த. (உ/த): 36 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள் Reviewed by irumbuthirai on April 17, 2020 Rating: 5

ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் தீர்மானம்?

April 17, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதிக்குள்ளான குடும்பங்களுக்கு ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் இத்தீர்மானத்தை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் இப்பணியை நிறைவேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் தாம் தயாரித்து வழங்கிய பெயர்ப்பட்டியல் கருத்திற்கொள்ளப்படாமை என்பவற்றாலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் தீர்மானம்? ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் தீர்மானம்? Reviewed by irumbuthirai on April 17, 2020 Rating: 5

COVID-19.... Minister Gifts New Drone Camera to the Army...

April 17, 2020


Minister Wimal Weerawansha during a cordial meet that took place at the Army Headquarters on Wednesday (15) gifted a new drone to Lieutenant General Shavendra Silva, Chief of Defence Staff and Commander of the Army and Head at the National Operation Centre for Prevention of COVID-19 Outbreak (NOCPCO) for use in ongoing Army COVID-19 control. 
Commander of the Army intends to establish a surveillance unit using this donated drone in future. He emphasized the importance of it and thanked the timely donation of these equipment particularly in the prevention of COVID-19- affected villages for observation of the movements. 
(DGI)

COVID-19.... Minister Gifts New Drone Camera to the Army... COVID-19.... Minister Gifts New Drone Camera to the Army... Reviewed by irumbuthirai on April 17, 2020 Rating: 5
Powered by Blogger.