கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு..

May 05, 2020

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை அரசு தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. எதிர்வரும் மே 15 வரை இதற்கான கால எல்லை வழங்கப்படுகிறது. ஏராளமான வணிகர்கள் தமது வணிகம் தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றனர். Online முறையில் இந்த தகவல்களை வழங்கலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் வணிகம் தொடர்பான தகவல்களை பதிவு செயய்யலாம்.


கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு.. கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 04, 2020

29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்..

May 04, 2020

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்தில் மாத்திரமே ஆகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (3) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்கு இது எந்த வகையிலும் பொருத்தமாகாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதேவேளை ஏதேனும் பிரதேசமொன்று அல்லது கிராமமொன்று அல்லது ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்டிருக்குமாயின் அவ்வாறான வலயங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்.. ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்.. Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை...

May 04, 2020

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறை திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம் சித்ரானந்த கருத்து தெரிவிக்கையில், 
இந்த விடயம் தொடர்பில் தெற்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாண கல்வி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருப்பதாக தெரிவித்தார். ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த செயலாளர் அதன் பின்னர் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றார். முதல் கட்டத்தில் தரம் 10 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 

கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து தரம் 13; வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பி திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை... பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை... Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்....

May 03, 2020


கொரோனாவுக்காக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களில் இடம்பெற்ற விற்பனையில் சீனி மற்றும் ஈஸ்ட் ஆகக்கூடுதலாக விற்பனையாகியிருப்பதாக கலால் பிரிவினர் மற்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 
இது சாராயம் முதலியவற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மது பான தயாரிப்புக்காக சீனி மற்றும் 

ஈஸ்ட் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரதுங்க தெரிவித்துள்ளார். இக்காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களில் பழுப்பு சீனி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
இதேவேளை சட்ட விரோத மதுபான உற்பத்தியை முற்றுகையிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1022 முற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்.... ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்.... Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5

பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை

May 03, 2020

இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய சேவையொன்றை ஆரம்பித்துள்ளது. அதாவது, Online முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேற்றை (Verification of Results) வழங்கும் நடைமுறையை கடந்த 28-04-2020 முதல் ஆரம்பித்துள்ளது. 
இதன் முதற்கட்டமாக 2001 முதல் இதுவரை இடம்பெற்ற 

சா.தர மற்றும் உ.தர பரீட்சை பெறுபேறுகளை உறுதிப்படுத்தி பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேறு தேவைப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகம், வெளிநாட்டு நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது குறித்த விண்ணப்பதாரிக்கு Online முறையில் அனுப்பிவைக்கப்படும்.
தபால் நிலையத்தில் இதற்கான கட்டணம் செலத்தியதும் கையடக்க தொலைபேசிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு Pin இலக்கமொன்று அனுப்பப்படும். அந்த இலக்கத்தை பரீட்சை திணைக்கள இணையத்தளத்தின் குறித்த லிங்கிற்கு சென்று பதிவு செய்து Online இல் விண்ணப்பிக்க வேண்டும்.
குறித்த விடயத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5

கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை...

May 03, 2020

எதிர்வரும் 4ஆம் திகதியிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் அந்த சேவையாளர்கள் குறித்த நிறுவன பிரதானியிடமிருந்து 

கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் மாத்திரமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்களில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும். ரயில்களில் பயணிப்பதற்காக இந்த SMS தகவலை பாதுகாப்பு பிரிவினரிடம் காட்சிப்படுத்த வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)

கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை... கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை... Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5

ஊரடங்கு மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பான புதிய அறிவிப்பு

May 02, 2020


ஊரடங்கு மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பான புதிய அறிவிப்புக்கள் இதோ...

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் ஆரம்பமாகும்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 06, புதன் வரை அமுல்படுத்தப்படுவது முன்னர் போன்று இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையாகும். இம்மாவட்டங்களில் மே 06, புதன் இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.


திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு யாரை அழைப்பது என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் காலை 10.00 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அநாவசியமாக வீதிகளுக்கு வருதல் மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும்.

போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும்.

பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
(அ.த.தி)




ஊரடங்கு மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பான புதிய அறிவிப்பு ஊரடங்கு மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பான புதிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on May 02, 2020 Rating: 5

மேல்மாகாணத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்...

May 02, 2020

கொரோனா (கொவிட் 19) நிலைமை மேல்மாகாணத்தில்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தற்பொழுது மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பீசீஆர் (PCR) பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது வரையில் பல்வேறு நோய் அனர்த்த குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும் நிலைமை மேலும் 100 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்க முடியாது. இந்த கட்டுப்பாடு எமது கையிலிருந்து நழுவிச் செல்லவில்லை என்பதுடன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும். 
எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரையில், திங்கட்கிழமையளவில் நாட்டு நிலைமையை 

வழமையான நிலமைக்கு கொண்டு வரமுடிகின்றமை அல்லது இல்லாமை தொடர்பில் எதிர்வுகூற முடியாது. இருப்பினும் வெசாக் காலப்பகுதி வரை இந்த கடுங்கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார். 
இதன் பின்னர் மேலும் சில காலம் செல்லும் வரையில் சுகாதரர ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக நாளாந்த கடமைகளை மேற்கொள்வது கட்டாயமாகும். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்... மேல்மாகாணத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்... Reviewed by irumbuthirai on May 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Economics (in 2 Languages)

April 29, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.
Subject: Economics
Language: English & Sinhala
Click the link below for English medium scheme


English medium scheme
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium scheme

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Economics (in 2 Languages) G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Economics (in 2 Languages) Reviewed by irumbuthirai on April 29, 2020 Rating: 5

Marking Schemes G.C.E.(A/L) - 2019 (New Syllabus): Information & Communication Technology (ICT)

April 29, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Information & Communication Technology 
Language: Sinhala
Click the link below for Sinhala medium scheme


Sinhala Scheme

Marking Schemes G.C.E.(A/L) - 2019 (New Syllabus): Information & Communication Technology (ICT) Marking Schemes G.C.E.(A/L) - 2019 (New Syllabus): Information & Communication Technology (ICT) Reviewed by irumbuthirai on April 29, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Schemes - 2019 (New Syllabus): Bio-Resource Technology (in 2 languages)

April 29, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Bio-Resource Technology 
 Language: Tamil & Sinhala

Click the link below for Tamil scheme

Click the link below for Sinhala scheme


Sinhala Scheme




G.C.E.(A/L) Marking Schemes - 2019 (New Syllabus): Bio-Resource Technology (in 2 languages) G.C.E.(A/L) Marking Schemes - 2019 (New Syllabus): Bio-Resource Technology (in 2 languages) Reviewed by irumbuthirai on April 29, 2020 Rating: 5

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Electrical , Eletronic and Information Technology

April 29, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) 
Marking Schemes. 
Subject: Electrical , Eletronic and Information Technology 
Language: Sinhala 
Click the link below for marking scheme:


Marking Scheme

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Electrical , Eletronic and Information Technology G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Electrical , Eletronic and Information Technology Reviewed by irumbuthirai on April 29, 2020 Rating: 5
Powered by Blogger.