வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை

May 07, 2020

நேற்று புதன்கிழமையன்று தென் கொரிய நாடாளுமன்ற குழுவிடம் பேசியுள்ளார் அந்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவர் சுன் ஹுன். அப்போது வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியான வதந்திகளில் உண்மை இருப்பதுபோல தெரியவில்லை என்று அவர் கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருடம் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 முறை கிம் ஜாங் உன் பொது வெளியில் காணப்பட்டதும் தெரிய வந்துள்ளது. வழக்கமாக இந்த நேரத்திற்கு அவர் 50 முறை 

வெளியில் காணப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி கூட்டங்கள், ராணுவப்படைகள் போன்ற உள்நாட்டு விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் கிம் ஜாங் உன் கவனம் செலுத்தி வந்தார். கொரோனா தொற்று பரவல் குறித்த கவலை எழுந்துள்ளதால், அவர் வெளியில் வருவதை குறைத்திருக்கலாம்" என நாடாளுமன்ற கமிட்டியின் உறுப்பினர் கிம் ப்யுங் கீ தெரிவித்தார்.
கிம் ஏற்கனவே இறந்துவிட்டார் என செய்திகள் பரவியதும் ஆனால் சில தினங்களுக்கு முன் கிம் வடகொரிய உரத் தொழிற்சாலையொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை...

May 07, 2020

இலங்கை கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடற்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 


இலங்கை கடற்படை தலைமையகம் 
கொழும்பு 
2020.05.06 

செய்தி பணிப்பாளர் அலைவரிசை பிரதானி 
ஊடக அறிக்கை 

 1. கடற்படை கொவிட் 19 தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்கள் மூலமும் செய்தி இணையதளங்கள் சில வற்றிலும் உண்மைக்குப புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய பொறிமுறைக்குள் கடற்படையினால் மேற்கொள்ளப்படும் எந்தவித பணிகளிலிருந்தும் கடற்படை விலகிக் கொள்ளவில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளிலும் கடற்படை ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கி செயல்படுவதை இதன் மூலம் வலியுறுத்துகின்றோம். 

2. இதேபோன்று இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

டப்ளியு.எம்.ஐ.ஆர்.எல்.சூரியபண்டார 
லெப்டினன் கமாண்டர் 
ஊடக இணைப்பு அதிகாரி கடற்படை தளபதிக்கு பதிலாக 

பிரதி:- கொவிட் 19 தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி 
             அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் 
              இராணுவ இணைப்பு அதிகாரி, பாதுகாப்பு அமைச்சு 
             பணிப்பாளர் ஊடகம் பாதுகாப்பு அமைச்சு

(அ.த.தி)

பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை... பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை... Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை

May 06, 2020

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை வைப்பது தொடர்பாக 06-05-2020 அன்று அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு: 
தென் ஆபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவச் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு கொழும்பு மாநர சபை நூல்நிலைய வளவிற்குட்பட்ட காணியில் இடவசதியைப் பெற்றுக் கொடுத்தல். இதற்காக அரசாங்கம் மானியத்தை ஒதுக்கீடு செய்யாது. 
இதே போன்று எதிர்வரும் தேசிய வீரர்கள் மற்றும் பாராட்டப்பட வேண்டியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உருவச்சிலைகள் நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பு செய்வதற்கு பதிலாக ஒரு விசேட இடத்தில் இவற்றை நிர்மாணித்து அஞ்சலி செலுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
(அ.த.தி)

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்..

May 06, 2020

வாடகைக்கு கட்டிடங்களை வழங்கிய அதன் உரிமையாளர்களிடம் அரசு விஷேட வேண்டுகோளை விடுத்துள்ளது. 
அதாவது கொழும்பில் கட்டிடங்களுக்கு அறவிடப்படும் வாடகை தொடர்பிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. 
இது தொடர்பில் 06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 

"பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவன மாணவர்ளைப் போன்று தொழிற்துறையினரும் கொழும்பு நகரப்பகுதிகளில் விடுதிகளில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கின்றனர். விடுதி உரிமையாளர்களிடமும் வர்த்தக நிலையங்கள் முதலானவற்றை வாடகைக்கு வளங்கிளவர்களிடமும் இந்த கொவிட் 19 காலப்பகுதியில் மாதாந்த வாடகையில் அரைப்பங்கை மாத்திரம் அறவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது."
(அ.த.தி)

வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்.. வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்.. Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு

May 06, 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணியில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு வழங்க அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு சுமார் 74 இலட்சம் பேருக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிரமமான காலப்பகுதிக்குள் இந்த நிவாரணத்தை வழங்கும் நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்பு செய்த கிராம குழுக்களின் அங்கத்தவர்களான அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 06, 2020

06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம்

May 06, 2020

இங்கிலாந்து MCC கிரிக்கற் கழகத்தின் தலைவர் பதவியிலிருக்கும் குமார் சங்ககார மேலும் 1 வருடம் அப்பதவியில் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
கொரோனா அசாதாரண நிலை காரணமாக இந்த பதவி நீடிப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2019 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் தலைவர் பதவியிருக்கும் சங்ககார 2021 செப்தம்பர் 30 வரை தொடர்வார் என தெரிவிக்கப்படுகிறது. 
MCC கழகத்தின் தலைவர் பதவியிலிருக்கும் முதல் வெளிநாட்டவர் சங்ககார என்பது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம் Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்...

May 06, 2020

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள், சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்கள், சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்காக துரிதமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவான (Guidelines) சம்மந்தப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்ட பின்னர் மாத்திரம் இந்த நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
அழகு நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் விரைவாக வெளியிடப்படவுள்ளது. அது வெளியிடப்பட்ட பின்னர் அழகு நிலையங்கள் சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்களை நடத்தும் நபர்கள் தமது நிலையம் அமைந்துள்ள பிரதேசத்திற்குட்பட்ட 

சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலக எல்லைப் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கமைவாக தமது நிலையத்தில் சேவையை வழங்கக்கூடிய வகையில் கட்டமைப்பு மற்றும் வசதிகளை செய்ய வேண்டும். இந்த வசதிகள் மற்றும் கட்டமைப்பு பூர்த்தி செய்யப்பட்டமை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் நிலையம் மற்றும் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது மக்கள் சுகாதார சேவை பரிசோதகர்கள் அழகு நிலையங்கள் / சிகை அலங்கார நிலையங்களுக்கு விஜயம் செய்வர்.
அந்த இடங்களை பரிசோதனை செய்து பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் தமது சிபாரிசுகளை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்குவார்கள். இந்த சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு அழகு நிலையங்கள் / தலைமயிர் வெட்டும் இடங்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கும் சான்றிதழ் சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கப்படும். இந்த சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வரையில் நாட்டில் எந்தவொரு அழகு நிலையங்கள் சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு முயற்சிக்கக்கூடாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்... சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்... Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது..

May 06, 2020

ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் சில கட்டங்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படுவதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் 

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் ,அதிபர், ஆசிரியர் மற்றும் ஏனைய பணியாளர் குழுவினரை மே 11 ஆம் திகதி சேவைக்கு வருகை தருமாறும், முதலில் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்காக ஜூன் 01 ஆம் திகதி அளவில் அனைத்து தரங்களில் உள்ள மாணவர்களுக்காவும் பாடசாலைகரள ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. 
கல்வி அமைச்சின் செயலாளர் எந்த ஒரு மாகாண கல்வி பொறுப்பாளருக்கோ அல்லது வேறு கல்வி நிறுவன தலைவருக்கோ அவ்விதம் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை. மீண்டும் பாடசாலை திறக்கப்படுதல் மற்றும் திறக்கப்படும் விதமானது சுகாதார அமைச்சின் அறிவுரை மற்றும் அரசினால் மேற்கொள்ளப்படும் கொள்கை நடைமுறைக்கு அமைவாக தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி செயலாளரினால் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது மாகாண வலய மற்றும் கல்வித் துறையின் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களை அறியச் செய்யப்பட்டே எனவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்விச் செயலாளர் தெளிவுபடுத்தினார். நாடு என்ற வகையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் அனைவரும் மிகவும் தீர்மானமிக்கதும் சவால் மிக்க பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ள இந்த தருணத்தில் ஒழுக்கத்துக்கு புறம்பானதும் பக்கச் சார்பான விதமானதும் குறுகிய நோக்கத்தை அடைந்து கொள்ளும் எண்ணத்தில் ஊடகத்தை பயன்படுத்தும் சில ஊடகங்கள் மற்றும் இணையத்தள செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சு கடும் வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.. வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.. Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: History of India (இந்திய வரலாறு)
Language: Tamil. 
Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Logic and Scientific Method 
 Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019 (New Syllabus in 3 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Political Science 
Language: Tamil, English & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019 (New Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019  (New Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Geography 
Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages) G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5
Powered by Blogger.