தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு!

June 01, 2020


மறைந்த அமைச்சர் தொண்டமான் வகித்த அமைச்சுப் பதவியான சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சு பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பெடுத்துக் கொண்டார்.

தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு! தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு! Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை

June 01, 2020


இன்று (01) முதல் நாட்டிற்குள் நுழையும் சகலருக்கும் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 
வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அதற்குரிய வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(நிவ்ஸ்வய)
இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்...

May 31, 2020


கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமை புரிந்துவந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதேவேளை விடுமுறையில் வீடு வந்த அவர் கடந்த 26 ஆம் திகதி ஹொரணையில் அமைந்துள்ள நான்கு வியாபார நிலையங்களுக்கு சென்று வந்துள்ளதாகவும் எனவே அந்த வியாபார நிலையங்கள் இனங்காணப்பட்டு அதில் கடமை புரிந்த 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(நிவ்ஸ்வய)

விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்... விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்... Reviewed by irumbuthirai on May 31, 2020 Rating: 5

இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல்

May 31, 2020


02 அரசாங்க இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு நேற்று  அதிகாலை (மே,30) இலக்காகியுள்ளன. பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதை இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது. 
இது குறித்து மேலதிக விசாரணைகளை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) மேற்கொண்டு வருகிறது. 
 பாதுகாப்பு அமைச்சு

அ.த.தி.

இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் Reviewed by irumbuthirai on May 31, 2020 Rating: 5

பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் .

May 30, 2020


தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் பாடங்களை எவ்வாறு நிறைவுசெய்வது என்பது தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன. 

1. ஒவ்வொரு நாளும் பி.ப. 03.00 மணிவரை பாடசாலைகளை நடத்துவது. 

2. வாரத்தில் ஏழு நாட்களும் பாடசாலைகளை நடத்துவது. ஆனால் நேரசூசியில் பல மாற்றங்களை செய்வது அதாவது ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் நான்கு நாட்கள் மாத்திரம் பாடசாலைக்கு வந்தால் போதும் என்ற நிலையில் நேரசூசியில் மாற்றங்களை ஏற்படுத்துவது. 

3. ஆகஸ்ட் விடுமுறையை இல்லாமல் செய்வது. 

எனவே இதில் எது பொருத்தமாக இருக்குமோ அது நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
முகநூல் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர்

May 30, 2020


தற்போதைய நிலைமையில் உயர்தரப் பரீட்சை எவ்வாறு நடத்தப்படும் என்பது தொடர்பாகவே அனேகமானவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்காக இரண்டு முறைகள் பின்பற்றப்படலாம். 
ஒன்று, நிறைவுசெய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடத்துவது மற்றையது பரீட்சையை பிற்போடுவது ஆகும். 
நிறைவு செய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடாத்தப்படும் பொழுது, 

இந்த உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் முறையாக தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே முழு பாடத்தையும் படித்து முடித்திருப்பார்கள். அதேபோன்று உயிரியல் போன்ற சில பாடங்களுக்கு உள்ள பாட அலகுகளில் கடைசியாக இருக்கின்ற அலகுகளுக்கு இலகுவாக புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பதாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அப்படியும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. 
அந்த அடிப்படையில் எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாத முறையிலேயே இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
தனியார் இணைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
அமைச்சரின் கூற்றை பார்க்கும் பொழுது முதலாவது தீர்வு சாத்தியமில்லாத விடயமாக இருப்பதாக இருந்தால் இரண்டாவது தீர்வுக்கே செல்ல வேண்டியதாக இருக்கும் என்பது இங்கே புலனாகின்றது. அதாவது பரீட்சை பெரும்பாலும் பிற்போடப்படலாம்.

உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள்

May 29, 2020


அரச துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக பல இலவசமாக கற்கை நெறிகள் அரச ஈ கற்பித்தல் GeLP கட்டமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இலங்கை அரச அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
இணையதளத்தினூடாக இந்த கற்கை நெறிகளுக்காக பதிவு செய்ய முடியும். இதுவரையில் 2000 இற்கும் மேற்பட்ட 

அரச அதிகாரிகள் இந்த கற்கை நெறி கட்டமைப்புக்குள் பதிவு செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் GeLP மூலம் வழங்கப்படும் கற்கைநெறியை இலவசமாக தொடர முடியும். 
மேலதிக விபரங்களை www.gelp.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
(அ.த.தி)


அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 29, 2020


27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைத்தல்... 
உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு

May 29, 2020


கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் உறுப்புரிமையை இரத்து செய்வதாக இன்று இடம்பெற்ற ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி யாப்பை மீறி வேறு கட்சி சார்பாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தமையே இதற்கான காரணமாகும்.

ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020)

May 29, 2020


இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏற்கனவே அறிவித்தபடி நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திற்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா...

May 28, 2020


கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்து கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
இதனையடுத்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த சுமார் 200 கடற்படை வீரர்களை அங்கேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(நிவ்ஸ்வய)
புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020)

May 28, 2020


ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 
ஜூன் 1 திங்கள் தொடக்கம் ஜூன் 3 புதன் வரை எல்லா மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும். 
ஜூன் 4, 5 ஆகிய இரு தினங்களிலும் நாடுபூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 
ஜூன் 6 சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும். 
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி உண்டு. 

(நிவ்ஸ்வய)
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்..

May 28, 2020

2020 / 2021 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைகழகங்களுக்கு இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் 2020 ஜூன் 2 ஆம் திகதி முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்.. பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்.. Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.