த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு

June 05, 2020


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் (7) த பினான்ஸ் நிறுவனத்தின் (The Finance Company) வைப்பாளர்களுக்கு பணத்தை செலுத்தும் நடவடிக்கையை நாடு முழுவதிலுமுள்ள 60 மக்கள் வங்கி கிளைகள் மூலம் மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
அதாவது த பினான்ஸ் கிளை அமைந்துள்ள நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் மக்கள் வங்கி கிளைகள் மூலம் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த

June 05, 2020


நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (7) பரீட்சார்த்த தேர்தல் ஒன்று நடத்தப்பட இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்பு ஒழுங்கு விதிகளுக்கு அமைய இம்முறை தேர்தல் இடம்பெற இருக்கிறது. எனவே அதனை பரீட்சார்த்தமாக பார்க்கும் விதத்தில் நாளை மறுதினம் குறித்த ஒரு இடத்தில் அந்த நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நிவ்ஸ்வய)
நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

எந்தவிதமான 'தன்சலுக்கும்' இம்முறை அனுமதி இல்லை

June 05, 2020


பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் எந்த விதமான தன்சலுக்கும் இம்முறை அனுமதி இல்லை என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தன்சல் வழங்குவதற்கோ அல்லது உலர் உணவுப் பொதிகளை தன்சலாக வழங்குவதற்கோ இம்முறை எவ்வித அனுமதியும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அவர்களின் கையொப்பத்துடன் வெளியான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான 'தன்சலுக்கும்' இம்முறை அனுமதி இல்லை எந்தவிதமான 'தன்சலுக்கும்' இம்முறை  அனுமதி இல்லை Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள்....

June 05, 2020


பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்தியா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பேக்லே தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். 
அதாவது உணவு பாதுகாப்பு, மருந்து மற்றும் விவசாய உற்பத்தி, எரிபொருள் சுத்திகரிப்பு உள்ளடங்களான பல துறைகளில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் கூறினார். 
இதேவேளை வடக்கில் புதிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தவதற்கும் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கும் 25 கோடி ரூபாய் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது. இதில் மடு யாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னர் 144 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு 30 கோடி ரூபாய் வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை அடையும் போது சுற்றுலா துறைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க இதன் போது தெரிவித்தார்.
(அ.த.தி)

இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள்.... இலங்கையில்  இந்தியாவின் முதலீடுகள்.... Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

வெட்டுக்கிளிகளை கண்டால்....

June 05, 2020


இலங்கையின் பல பிரதேசங்களில் பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகள் காணப்படும் பகுதிகள் குறித்த தகவல்களை 1920 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என்று விவசாய தினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாசிதி எம்.டப்ளியு .எம். வீரக்கோன் தெரிவித்துள்ளார். 
இந்த தகவல்களுக்கு அமைவாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
(அ.த.தி)

வெட்டுக்கிளிகளை கண்டால்.... வெட்டுக்கிளிகளை கண்டால்.... Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை

June 04, 2020


அண்மையில் ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பல்வேறு போராட்டங்கள் இப்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் முக்கிய கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 
வன்முறைக்கு வழி வகுக்காமல் அமைதி காக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதேவேளை நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஜோர்ஜ் பிளாய்ட்டின் மனைவி கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இனி எனது மகளோடு கைகோர்த்து நடக்க அவர் வரப்போவதில்லை எனது மகள் பட்ட படிப்பை முடிப்பதைப் பார்க்க அவர் வரப் போவதில்லை என கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை ஜோர்ஜ் பிளாய்ட்  குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை Reviewed by irumbuthirai on June 04, 2020 Rating: 5

வரலாற்றில் முதற் தடவையாக இந்த தேர்தலில்....

June 03, 2020

இவ்வருடம் (2020) ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை தீர்மானிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் அன்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்
இன்று(3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பாக தெரிவிக்கையில், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டி அறிவுறுத்தல்; குறித்து மாவட்ட உதவி தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றார். வரலாற்றில் முதல் முறையாக இம்முறை தேர்தல் நடைபெறும் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுளளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்;
(அ.த.தி)

வரலாற்றில் முதற் தடவையாக இந்த தேர்தலில்.... வரலாற்றில் முதற் தடவையாக இந்த தேர்தலில்.... Reviewed by irumbuthirai on June 03, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Bio-Resource Technology (உயிர் வளத் தொழிநுட்பவியல்) - 2019 (New/Old Syllabus in 2 Languages)

June 02, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Bio-Resource Technology (உயிர் வளத் தொழிநுட்பவியல்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Tamil medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Bio-Resource Technology (உயிர் வளத் தொழிநுட்பவியல்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Bio-Resource Technology (உயிர் வளத் தொழிநுட்பவியல்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Agro Technology - 2019 (New/Old Syllabus)

June 02, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Agro Technology
Language: Sinhala. 

 Click the link below for the scheme


Agro Technology

G.C.E.(A/L) Marking Scheme for Agro Technology - 2019 (New/Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Agro Technology - 2019 (New/Old Syllabus) Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Food Technology (உணவுத் தொழிநுட்பவியல்) - 2019 (New & Old Syllabus)

June 02, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New & Old Syllabus) Marking Schemes. 
Subject: Food Technology (உணவுத் தொழிநுட்பவியல்) 
Language: Tamil. 

Click the link below for the scheme


Food Technology

G.C.E.(A/L) Marking Scheme for Food Technology (உணவுத் தொழிநுட்பவியல்) - 2019 (New & Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Food Technology (உணவுத் தொழிநுட்பவியல்) - 2019 (New & Old Syllabus) Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Electrical , Eletronic and Information Technology - 2019 (New & Old Syllabus)

June 02, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New & Old Syllabus) Marking Schemes. 
Subject: Electrical , Eletronic and Information Technology 
Language: Sinhala. 

Click the link below for the scheme


Scheme

G.C.E.(A/L) Marking Scheme for Electrical , Eletronic and Information Technology - 2019 (New & Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Electrical , Eletronic and Information Technology - 2019 (New & Old Syllabus) Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு

June 02, 2020

தென் ஆசியாவிலேயே மிக குறைந்த விலையில் எரிபொருளை வழங்கும் நாடாக பாகிஸ்தான் வந்துள்ளது. நேற்று முன்தினம் (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானால் மேற்கொள்ளப்பட்ட விலை மறுசீரமைப்புக்கு அமைய இந்த சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது. 
அந்த வகையில் பெட்ரோல் லீட்டர் ரூ. 7.06, மண்ணெண்ணெய் லீட்டர் ரூ. 11.88 ஆலும் குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்ரான்கான் தனது ட்விட்டர் செய்தியில் தென் ஆசியாவிலேயே மிக குறைந்த விலையில் எரிபொருளை வழங்கும் நாடாக பாகிஸ்தான் உருவாகியுள்ளதாகவுஇந்தியாவில் 2 மடங்கும் பங்களாதேஸ், இலங்கை,  நேபாளம் போன்ற நாடுகளில் 50-75% விலை அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்?

June 01, 2020


முக நூலிற்கான App ஐ அந்நிறுவனம் கருப்பு நிறமாக மாற்றியுள்ளது. இதற்கான காரணத்தை அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் மார்க் தெரிவிக்கும் பொழுது, கறுப்பினத்தவர்களின் வாழ்வதற்கான உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு கருப்பு நிறமாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் இந்நாட்களில் அமெரிக்காவில் தொடங்கி உலகில் பல நாடுகளிலும் நடக்கும் இவ்வாறான போராட்டத்திற்கு முகநூல் நிறுவனமும் இவ்வாறு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(நிவ்ஸ்வய)

முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்? முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்? Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5
Powered by Blogger.