ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும்

June 09, 2020


இன்று அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி அதிகாரிகளிடம் எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முன்னணி சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கை அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு தடையுத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றில் இலங்கை போலீசார் நேற்று பெற்றிருந்தனர். 
ஆனால் இன்று திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடந்தபொழுது அதன் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இன்னும் சிலர் 

லிப்டன் சுற்றுவட்டாரத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அதன் போதும் போலீசாருடன் அமைதியின்மையான நிலைமை ஏற்பட்டவுடன் அதிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். 
இந்தக் கைதுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. 
இதேவேளை இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி எந்தவித அதிகாரிகளுக்கும் தாம் கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. 
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 53 பேர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
தொண்டமானின் மரணத்தில் செயல்படுத்தப்படாத சட்டம், அமெரிக்க அதிகாரி இலங்கை வரும்பொழுது விமான நிலையத்தில் செயல்படுத்தப்படாத சட்டம் நியாயமான கோரிக்கை ஒன்றுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பொழுது மட்டுமா செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்து சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்

June 09, 2020


இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றுக்கான திகதிகளும் அது தொடர்பான ஏனைய விடயங்களும் கூறப்பட்டன. 
அந்த வகையில் உயர்தரப்பரீட்சை செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரையும் புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதியும் இடம்பெறும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவிக்கையில் , இம்முறை கணக்கீடு உட்பட 5 பாடங்களுக்கு சாதாரண கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இன்னும் சில பாடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் சாதாரண தரப் பரீட்சைக்கு கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்தார். 
 அத்துடன் பரீட்சை நடத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்பொழுது அதாவது வழமையாக பின்பற்றப்படும் முறையானது சமூக இடைவெளிக்குப் போதுமானது என அவர்கள் தெரிவித்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்  2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்..

June 09, 2020


இந்தியாவில் லொக்டவுன் (Lockdown) காலப்பகுதியில் ரயில்வே நிலையத்தின் மேடையில் இறந்த தாயின் குழந்தையை பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார். 
தனது தாய் இறந்தது தெரியாமல் தாயை எழுப்பும் குழந்தையின் இந்த வீடியோ உலகம் பூராவும் பரவி அனைவரின் மனதையும் உருக வைத்தது.
இந்த விடயம் நடிகர் ஷாருக்கானுக்கு தெரியவர அவர் இந்த குழந்தையை பொறுப்பெடுத்துள்ளார். ஷாரூக்கானின் 'மீர்' அமைப்பு இதற்குரிய ஏற்பாடை செய்துள்ளது. இது தொடர்பில் நடிகர் ஷாருக்கான் செய்த டுவிட்டை கீழே பார்க்கலாம்

 
(நிவ்ஸ்வய)

ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை...

June 09, 2020


பொது போக்குவரத்தின் போது பயணசீட்டுக்காக பணத்தை செலுத்துவதற்கு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் முறை எதிர்வரும் ஜூலை இறுதி முதல் பாவனைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ளது.
பயணச்சீட்டுக்கான பணத்தை பயன்படுத்தும் பொழுது அதில் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதனால் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முற்கொடுப்பனவு ஸ்மார்ட் அட்டையை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்யும்படி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரயில் மற்றும் அரச, தனியார் பேருந்துகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதேவேளை தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பணவொன்றை வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஆணைக்குழுவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம்

June 09, 2020


கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். அதில் பாடசாலை 04 கட்டங்களாக ஆரம்பிக்கப்படும் முறையும் அதற்கான திகதிகளும்  அதேபோன்று உயர்தர பரீட்சைக்கான திகதி மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி மற்றும் ஒவ்வொரு தரங்களுக்குமான பாடசாலை நேர மாற்றம்  போன்ற பல விடயங்கள் தொடர்பாக அறிவித்தார். அந்த வகையில் பாடசாலை நேர மாற்றம் பின்வருமாறு இடம்பெறும்.... 

தரம் 3, 4: காலை  7:30 - மு.ப. 11.30  
தரம் 5: காலை 7:30 - நண்பகல் 12.00 
தரம் 6 - 9: காலை  7:30 - பி.ப. 1.30 
தரம் 10 - 13: காலை 7:30 - பி.ப. 3.30 

புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு:

June 09, 2020


பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் கட்டங்களையும் அதற்கான திகதிகளையும் நடைமுறைகளையும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று அறிவித்துள்ளார். அந்தவகையில் பாடசாலைகள் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறன. 
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
பாடசாலைகள் இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது நான்கு கட்டங்களில் ஆரம்பிக்கப்படும். அவை பின்வருமாறு இடம்பெறும்.... 


1. முதலாம் கட்டம் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரை  ஆகும். இதில் அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் மாத்திரம்  வரவேண்டும். இந்த முதல் வாரத்தில் பாடசாலைகள் சுத்தப்படுத்துதல், கிருமி தொற்று நீக்கம், அதேபோன்று நேரசூசி மாற்றம் போன்ற பல ஏற்பாடுகளை செய்யவேண்டும். 

2. இரண்டாம் கட்டம் ஆரம்பமாவது ஜூலை 6ம் திகதி ஆகும். ஜூலை 6 தொடக்கம் தரம் 5, தரம் 11, தரம் 13 ஆகிய மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வரவேண்டும். இந்த இரண்டாம் கட்டம் ஜூலை 6 தொடக்கம் ஜூலை 17 வரையான இரு வாரங்கள் ஆகும். 

3. மூன்றாம் கட்டம் ஆரம்பமாவது ஜூலை 20ஆம் திகதி ஆகும். எனவே இத்தினம் முதல் தரம் 10 தரம் 12 ஆகிய மாணவர்களும் சேர்ந்து வரவேண்டும். இந்த மூன்றாம் கட்டம் ஜூலை 20 தொடக்கம் 24 வரையாகும். 

4. நான்காம் கட்டம் ஜூலை 27 ஆகும். இத்தினம் தொடக்கம் தரம் 3, 4, 6, 7, 8, 9 ஆகிய மாணவர்களும் பாடசாலைக்கு வரவேண்டும். 

தரம் 1 மற்றும் 2 மாணவர்கள் எப்போது பாடசாலைக்கு வரவேண்டுமென்ற திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு: பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு

June 09, 2020

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் முதல் முறையாக தொழில்நுட்ப பீடமொன்று ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இந்த தொழில்நுட்ப பீடம் ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா வைபவத்தில் உயர் கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகதுறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Bachelor of Engineering Technology, Bachelor of Bio-Systems Technology, Bachelor of Information and Communication Technology போன்ற மூன்று திணைக்களங்களை உள்ளடக்கியதாகவும் சுமார் 300 மாணவர்கள் கற்க கூடிய வசதிகளை கொண்டதாகவும்   இந்த பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு...

June 09, 2020

கொரோனா இல்லாத நாடாக நியூஸிலாந்து தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்தில் சுகாதார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
கொவிட் நோயாளிகள் எவரும் நியூசிலாந்தில் தற்போது இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்  குணமடைந்து வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நியூசிலாந்தில் ஆயிரத்து 154 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். எனினும் கடந்த 17 நாட்களாக எந்த ஒரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை. 
இதன் காரணமாக திருமண நிகழ்வுகள் மரணச்சடங்கு பொது நிகழ்வுகள் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் இன்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய நாடுகளுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு... கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை...

June 09, 2020

கொவிட் தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .
அலிசாகிர் மௌலானாவின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். 
இதன் மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அலி சாகிர் மௌலானா நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தனர்.
ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன?

June 09, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த கூட்டம் நேற்று(8) காலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. 
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, தொழிற் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். பொதுத்தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தி கூட்டத்தை விட்டு செல்லும் வேளை, தொழிற்சங்க தலைவர்களால் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பிரச்சினைகள் தொடர்பாக  முன்வைக்கப்பட்டன. 
இதன்போது அவர்களிடம் இருந்து வெளியேற முயற்சித்த வேளை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பாலித ரங்கே பண்டார அமைதிப்படுத்த முயற்சித்துள்ளார். 
இதேவேளை இந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று பிற்பகல் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து 'சமகி ஜனபலவேகய' தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

June 08, 2020

இன்று (8) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  
1. பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்.  
2. வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் நாளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்படும்.  
3. தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகளை வர்த்தமானியில் பிரசுரிக்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரை கோரல்.
4. தேர்தலுக்கான நிதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளல்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus)

June 08, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: History of India (இந்திய வரலாறு) 
Language: Tamil. 

Click the link below for scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 08, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5
Powered by Blogger.