தரம்: 09 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 24, 2020


தரம்: 09 பாடத்திட்டத்தின்படி இஸ்லாம் (Islam) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம்: 09 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 09 இஸ்லாம்  (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 24, 2020 Rating: 5

க.பொ.த. (சா.த): 15 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்...

June 24, 2020


க.பொ.த. (சா.தர) பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை இங்கு தருகிறோம்.  
இதில், 

15 பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள். 
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்கள்.. 
செய்முறை ரீதியான பரீட்சைக்கான அதாவது பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், நாடகமும் அரங்கியலும் போன்ற பாடங்களுக்கான வினாப்பத்திரங்களும் இணைப்பு.... 
புள்ளித்திட்டம் மற்றும் விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
சகல வினாத்தாள்களையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (சா.த): 15 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்... க.பொ.த. (சா.த): 15 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்... Reviewed by irumbuthirai on June 24, 2020 Rating: 5

இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு..

June 23, 2020


வெளி சமூகத்திலிருந்து எந்தவொரு கொரோனா தொற்று நோயாளியும் பதிவாகாத நிலையில் ஐம்பதாவது நாள் கடந்திருப்பதாக இராணுவ தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடற்படையினர் மத்தியில் கொத்து அடிப்படையிலான கொரோனா வைரசு தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.

இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு.. இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு.. Reviewed by irumbuthirai on June 23, 2020 Rating: 5

சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்..

June 23, 2020


இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், அமுலுக்கு வரும் வகையில் மாணவர்களுக்கான. சுரக்ஷா காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைவாக காப்புறுதி பயன்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அல்லது நாடு முழுவதுமுள்ள அதன் கிளைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.   
அனைத்து பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த சுரக்ஷா மாணவர் காப்பீட்டு திட்டம், இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதோடு, அது தொடர்பான பிரதிபலன்களையும் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கும் எனவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை (011 2357357) தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது , 011 2319015, 011 2319016, 011 2319017 ஆகிய சுரக்ஷா சேவை தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவே தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அ.த.தி.

சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்.. சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on June 23, 2020 Rating: 5

வெளிவாரி பட்டப்படிப்பிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை...

June 22, 2020

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கல்வி முறையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பயிலும் பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெறுவது என்பது இலகுவான காரியமல்ல. 
எனவே தொழிற்சந்தைக்கு தேவையான விதத்தில் பல்கலைகழகங்களிலிருந்து படித்தவர்கள் உருவாவதும் இல்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக புதிய கல்விக் கொள்கைக்கு அமைய இலட்ரோனிக் தொழில்நுட்பம் உட்பட தொழில்நுட்ப பாடங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.
வெளிவாரி பட்டப்படிப்பிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை... வெளிவாரி பட்டப்படிப்பிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை... Reviewed by irumbuthirai on June 22, 2020 Rating: 5

ரூ. 5000 ஐ பிரதமருக்கு அனுப்பிவைத்தவருக்கு கிடைத்த சந்தர்ப்பம்..

June 20, 2020


மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி.ஹேவாஹெட்ட (வயது – 86) அண்மையில் அலரி மாளிகைக்கு ஐயாயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதமொன்றை அனுப்பி வைத்தார். ஒரு மூத்த குடிமகனாக சமூக பொறுப்பை ஏற்று குறித்த பணத்தை அனுப்பி வைத்த திரு.ஹேவாஹெட்டவின் தாராள மனப்பான்மையை கௌரவிக்க வேண்டுமென கருதிய பிரதமர் அவர்கள், ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்களுக்கு அறிவுறுத்தினார். 
அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளான இன்று மிரிசவெட்டிய புனித பூமியில் இடம் பெற்ற தானம் வழங்கும் நிகழ்வின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில், ஹேவாஹெட்ட அவர்கள் குறித்த நிதியை கொவிட்-19 நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன்போது, ஹேவாஹெட்ட அவர்களின் குடும்பத்தாரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.

ரூ. 5000 ஐ பிரதமருக்கு அனுப்பிவைத்தவருக்கு கிடைத்த சந்தர்ப்பம்.. ரூ. 5000 ஐ பிரதமருக்கு அனுப்பிவைத்தவருக்கு கிடைத்த சந்தர்ப்பம்.. Reviewed by irumbuthirai on June 20, 2020 Rating: 5

க.பொ.த. (சா.த): 28 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள்...

June 20, 2020


க.பொ.த. (சா.தர) பரீட்சைக்கான கடந்தகால வினாத்தாள்களை இங்கு தருகிறோம். 
இதில், 

28 பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள். 
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்கள்.. 
புள்ளித்திட்டம் மற்றும் விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
சகல வினாத்தாள்களையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (சா.த): 28 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள்... க.பொ.த. (சா.த): 28 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள்... Reviewed by irumbuthirai on June 20, 2020 Rating: 5

ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்கப்பட்டதா?

June 19, 2020


ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால்  வருடாந்தம் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்குவதற்கான எந்தவித பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லையென்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்  நாலக கலுவெவ தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக 4,337 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதுடன் அவற்றுள் சுமார் 3,500 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பி;ல் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஊடக அடையாள அட்டை தகவல் திணைக்களத்தினால் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றது. அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இந்த அடையாள அட்டை வழங்கப்படுகின்றது என்றும் கூறினார். 
இந்த அடையாள அட்டைக்கு நம்பிக்கை மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மையிருப்பதைப் போன்று இந்த அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் தொழில் ரீதியிலான ஊடகவியலாளராக அரசாங்கத்தினால் விசேடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகும். 
இந்த அடையாள அட்டையை விநியோகிக்கும் அதிகாரத்தைக்கொண்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளரால் இந்த அடையாள அட்டை வழங்கப்படுவது ஊடகவியலாளர் தொழில் ரீதியில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டபின்னரேயாகும். என்றும் தெரிவித்தார். 
இதேவேளை கொரோனா தொற்றின் காரணமாக விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்த அவர் ,இதற்கமைவாக 2020 ஜுன் மாதம் 20ஆம் திகதி வரையில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் ,2020 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்குள் இந்த வருடத்திற்கான அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியை பூர்த்தி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். 
2019 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை 2020ஆம் ஆண்டில் ஜுலை மாதம் 15ஆம் திகதிவரையில் செல்லுபடியாகும் பதிவுசெய்யப்பட்ட செய்தி இணையதளங்களுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கும் பொழுது சில பிரச்சினைகள் இருப்பதாகவும் இந்த செய்தி இணையதளங்கள் பொறுப்புடன் செயல்படுவதாக உறுதிசெய்யப்பட்டப்பின்னர் அவர்களுக்கான ஊடக அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.

ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்கப்பட்டதா? ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்கப்பட்டதா? Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

17-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 19, 2020


17-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

17-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 17-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா...

June 19, 2020

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும், பாதுகாப்பு பேரவை தான் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. 
இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. இதற்கான உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில், தற்போது காலியாக இருந்த 5 நாடுகளுக்கான உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (17) நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் போட்டியிடாத நிலையில், இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும். 193 உறுப்பினர்களை கொண்ட சபையில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. எட்டாவது முறையாக ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக, உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.

போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா... போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா... Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

க.பொ.த. (உ.த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்...

June 19, 2020


க.பொ.த. (உ.தர) பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை இங்கு தருகிறோம்.  
இதில், 

உ.தரத்திற்கான சகல பாடத் துறைகளுக்குமான வினாப்பத்திரங்கள்.. 
31 பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள். 
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்கள்.. 
புள்ளித்திட்டம் மற்றும் விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
சகல வினாத்தாள்களையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்... க.பொ.த. (உ.த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்... Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா?

June 19, 2020


தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் தலைமையில் தோட்ட முதலாளிமார் சம்மேளம் இ.தொ.கா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான ரூபா 700க்கு மேலதிகமாக விற்பனை பங்கு ((Price share Supplement) உற்பத்திக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு (Productivity Incentive) மற்றும் வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவு (Attendance Incentive) அடங்களாக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜூவன் தொண்டமான் தோட்ட முதலாளிமார் சம்மேளத்திடம் கோரிக்கையை முன்;வைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.த.தி.

எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா? எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா? Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

45000 தபால் பொதிகளை ஊழியர்கள் கையாடியுள்ளனரா?

June 18, 2020


இணையதளங்கள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தமது பொருட்கள் தமக்கு தபால் மூலம் கிடைக்காததன் அடிப்படையில் பல்வேறு தரப்பினரால் தபால் திணைக்களத்திடம் அடிக்கடி விசாரித்து வருகின்றனர். மார்ச் மாத இறுதி வாரம் தொடக்கம் இது வரையில் சர்வதேச விமானங்கள் முறையான வகையில் சேவையில் ஈடுபடாத அடிப்படையில் பெரும்பாலான நாடுகளிலிருந்து கிடைக்க வேண்டிய தபால் மூலமான பொருட்கள் இலங்கைக்கு கிடைக்காமை இந்த தாமதத்திற்கு காரணமாகும். 
இருப்பினும் பெரும்பாலான இணையதளங்களில் தபால் ஊழியர்களினால் இந்த பொருட்கள் திருடப்படுவதாக குற்றம் சுமத்தி குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம். இணையதளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களினால் பொருட்களை விநியோகிப்பதற்காக சம்பந்தப்பட்ட பொருட்கள் விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதையடுத்து அவர்களது இணையதளங்களில் அந்தப் பொருட்கள் குறிப்பிட்ட இலக்குகளில் ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட போதும் அந்த பொருட்கள் விமான நிறுவனங்களில் இருப்பதுடன் இந்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இலங்கை பாவணையாளர்களினால் (நு-ஊழஅஅநசஉந) ஈ - வர்த்தக மூலம் பல்வேறு இணையதளங்கள் ஊடாக கொள்வனவு (ழுசனநச) செய்யப்பட்டுள்ள தபால் மூலமான பொருட்களைக் கொண்ட கொள்கலன் ஒன்று மலேஷிய தபால் நிர்வாக்தினால் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆவது வாரத்தில் இலங்கை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
இந்த கொள்கலன் மூலம் பொதுவான தபால் மூலம் சேர்க்கப்பட்ட சிறியளவிலான சுமார் 45000 பொதிகள் உள்ளடங்கியிருப்பதுடன் கொவிட் 19 தொற்று பரவுவதற்கு முன்னர் இவை மலேஷிய தபால் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும் விமான சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் 2020 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய காலப்பகுதியில் கடல் மார்க்கமாக இலங்கை தபால் நிர்வாகத்திடம் சேர்க்கப்பட்டுள்ளது. 3 மாத காலத்திற்கு (03) மேற்பட்ட காலம் தாமதத்துடன் இந்நாட்டுக்கு கிடைக்கும் பொழுது பொருட்களின் முகவரிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் குறைபாட்டினால் அந்த முகவரிகளை வாசிக்க முடீயாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பொருட்களில் முகவரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 5000 பொருட்கள் தெரிவுசெய்யப்பட்டு இலக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பொருட்களை விநியோகிப்பதற்கு அதில் அடங்கியுள்ள பார் கோட் இலக்கத்தைப் பயன்படுத்தி முகவரியை வழங்குமாறு மலேஷிய தபால் நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதுடன் இந்த முயற்சி தோல்வியடையுமாயின் இந்த பொருட்களை மலேஷிய தபால் நிர்வாகத்திடம் ஒப்படைத்து உரிய முகவரிகளுடன் மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலுக்கு அமைவாக ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். 
இந்த நிலைமைக்கு மத்தியில் ஏற்படும் தாமதம் இலங்கை தபால் திணைக்களத்தின் நிர்வாகத்திற்கு அப்பாலான விடயமாகும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த தபால் மூலமான பொருட்களின் உரிமையாளர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் செயல்படுமாறு மலேஷிய தபால் நிர்வாகத்தை நாம் கோரியுள்ளோம் என தபால் மா அதிபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
அ.த.தி.

45000 தபால் பொதிகளை ஊழியர்கள் கையாடியுள்ளனரா? 45000 தபால் பொதிகளை ஊழியர்கள் கையாடியுள்ளனரா? Reviewed by irumbuthirai on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.