Degree Programmes (with facility for free laptop): Sir John Kotalawela University

August 30, 2020

Degree Programmes in the Sir John Kotalawela University.
Bank loan facility for free laptop.
Closing date: 25-09-2020.
See the full details below:


Degree Programmes (with facility for free laptop): Sir John Kotalawela University Degree Programmes (with facility for free laptop): Sir John Kotalawela University Reviewed by irumbuthirai on August 30, 2020 Rating: 5

இலங்கையில் சிதைந்த இந்தியாவின் துறைமுகக் கனவு: அடுத்த திட்டம் ஜெயிக்குமா?

August 30, 2020


கடந்த பொதுத் தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கையில் இலங்கையின் அரசியல் புலத்தில் சூடு பிடித்த விவகாரம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான பிரச்சினை. 
கடந்த நல்லாட்சி அரசில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை, இந்தியா, ஜப்பான் கூட்டு வர்த்தக முயற்சியாக முன்னெடுக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையே சிக்கலுக்கான மூல காரணம். கொழும்பு துறைமுகம் பன்னெடுங்காலமாகவே கப்பல் போக்குவரத்திற்கு புகழ் பெற்றதாக காணப்பட்டது. இதன் ஆதிக்கத்திற்காக ஒரு காலம் ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் சண்டையிட்டுக் கொண்டன. காலனித்துவ யுகத்தின் பின்னர் இத்துறைமுகம் தேசிய மயப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தன. 
ஒரு காலம் உலகில் கொள்கலன் கையாள்கையில் உலகின் 7 ஆம் இடத்தில் இத்துறைமுகம் இருந்தது. காலப் போக்கில் பிராந்திய பொருளாதார நிலைமை மாற்றங்கள் இந்த நிலையில் மாற்றங்களைக் கொண்டு வந்த போதிலும் கொழும்பு துறைமுகமானது உலக அளவில் மிக முக்கிய துறைமுகமாக உள்ளது. கொள்கலன் கையாள்கையில் அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தின் அளவு விசாலமானதாக உள்ளது. ஜப்பானின் டோக்கியோ, இந்தியாவின் மும்பை துறைமுகங்களை விட அதிக கொள்கலன்களைக் கையாள்கிறது. 

#சீனாவின் ஆதிக்கம்# 
இவ்வாறான நிலையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் கேந்திர ஸ்தானத்தில் இருக்கும் இலங்கையின் அமைவிடம் காரணமாக பல்வேறு சர்வதேச சக்திகள் இலங்கை துறைமுகங்களை இலக்கு வைத்து காய் நகர்த்தி வருகின்றன. 
அவ்வகையில் சீன அரசு இலங்கையின் ஹம்பாந்தோட்டையை மையப்படுத்தி துறைமுகம் ஒன்றை அமைக்க கடன் வழங்கியதுடன், அந்த கடனை மீள செலுத்துவதில் உள்ள சிரமத்தை கருத்திற் கோண்டு, அதை 99 வருட குத்தகைக்கும் எடுத்துள்ளது. அத்துடன் கொழும்பு தெற்கு முனையத்தையும் குத்தகைக்கு பெற்றுக் கொண்டுள்ளது. 

#கிழக்கு முனையத்திற்காக இந்திய முயற்சி# 
இந்நிலையிலேயே இந்தியா கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கையகப்படுத்த கடும் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இணங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் துறைமுகத்திற்கு உரிமை கோர முடியாது. அதற்காக பிரிதொரு


ஒப்பந்தம் அவசியம் என்ற போதிலும் இராஜதந்திர அழுத்தங்கள் வாயிலாக அதனை அடைந்து கொள்ள இந்தியா பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்கிறது. 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செல்லப் பிள்ளையான அதானி குழுமமே இதன் உரிமையை பெற முயன்றது. ஏற்கனவே, பல இந்திய உற்பத்திகள் கூட இலங்கையின் துறைமுகங்கள் வாயிலாகவே சர்வதேச சந்தைக்கு செல்லும் நிலையில் இந்திய அரசு இவ்வாறான ஒன்றுக்கு முயற்சிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 
இந்தப் பின்னணியிலேயே துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இரட்சத பழு தூக்கிகள் மூன்றும் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்தன. துறைமுக ஊழியரின் கடும் எதிர்ப்பினால் அது தரையிறக்கப்பட்டது. 
அதன் பின்னர் அப்போதைய துறைமுகங்கள் அமைச்சர் திரு. ஜொன்ஸ்டன் பெர்னான்டோவினால் துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு வழங்கி துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் கடன்களை நீக்க வேண்டும் என்று ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, மீண்டும் துறைமுக ஊழியர்கள் சத்தியாக்கிரகம் இருக்கும் நிலை வரை சென்றது. 
இவ்வாறு பல வழிகளில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கையகப்படுத்த முயன்ற இந்தியா அது சாத்தியமில்லாமல் போகும் நிலை உருவாகி வருவதை உணர்ந்துள்ளது. 

#இந்தியாவின் பிரமாண்ட மாற்றுத் திட்டம்# 
இந்நிலையில் இந்தியா அதன் மாற்றுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அதுவும் மிகப் பிரமாண்டமாக. இந்தியாவுக்கு சொந்தமான நிகோபார் தீவுகளில் பிரமாண்டமான துறைமுகம் ஒன்றை சுமார் 10 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். 
பழைய பட்டுப் பாதை வர்த்தகத்தை மீளமைத்தல், கடல் வழி பட்டுப் பாதை, இணைக்கப்பட்ட முத்துமாலை என்ற பெயர்களில் கப்பல், வர்த்தக ஏகாதிபத்தியத்தை பிராந்தியத்தில் நிலை நிறுத்தும் சீனாவின் திட்டத்திற்கு இது பாரிய சவாலாக மாறலாம் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 
இந்தியாவின் புதிய திட்டத்தின் அடிப்படையில் நிக்கோபார் தீவுகளில் தீர்வையற்ற சுதந்திர களஞ்சியசாலை வசதிகளுடன் கூடிய துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

#வங்கக்கடலில் இந்திய சீனப் பலப் பரீட்சை# 
உருவாகும் இந்த துறைமுகமானது கிழக்கு, மேற்கு கப்பல் போக்குவரத்தில் முக்கிய துறைமுகங்களாகக் காணப்படும் உலகின் மிகப் பெரிய துறைமுகமாக ஷங்ஹாய் போன்றவற்றிற்கு பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாத போதும் இலங்கையின் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு கடும் போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, 
ஏற்கனவே, சீனா இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளில் துறைமுகங்களை உருவாக்கி வங்காளவிரி குடாவில் இந்தியாவின் செல்வாக்கையும், அதிகாரத்தையும் ஒடுக்க முயற்சிக்கும் நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவின் மேற்படி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவத்தை பெருமளவு குறைக்கலாம் என்றே சொல்லப்படுகிறது. 
உலக சனத்தொகையில் 36% ஐத் தன்னகத்தே கொண்ட மேற்படி இருநாடுகளுக்கும் இடையே இராணுவ, பொருளாதார ரீதியாக பல முரண்பாடுகள் உள்ளன. 
சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லையில் சீன இராணுவ பிரவேசம் நிகழ்ந்ததாக தெரிவித்த இந்தியா பதில் தாக்குதல்களையும் நடாத்தி இருந்தது. அவ்வாறே சீனாவின் பல மென்பொருள்களுக்கு இந்தியாவில் தடையும் விதிக்கப்பட்டது. 
இவ்வாறான நிலையில் வளைகுடாவில் அதிகரித்து வரும் சீன செல்வாக்கை கட்டுப்படுத்துவது, இலங்கையில் துறைமுகங்களில் சீனா மேற்கொண்டுள்ள பொருளாதார முதலீடுகளை பலனற்றதாக ஆக்குவது, துறைமுகத்தை தர மறுக்கும் இலங்கையை தமது பிடிக்குள் கொண்டு வருவது அல்லது துறைமுகத்திற்கு உணரக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற பாரிய திட்டங்களுடன் இந்தியா இந்த பிரமண்டமான திட்டத்திற்கு தயாராகி வருகிறது. 
இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா? அது வங்காளவிரி குடா கடலில் இராணுவ சமநிலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?, இலங்கையின் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற விடயங்களுக்கு காலம் பதில் சொல்லும். 
- fபயாஸ் MA fபரீட்.

இலங்கையில் சிதைந்த இந்தியாவின் துறைமுகக் கனவு: அடுத்த திட்டம் ஜெயிக்குமா? இலங்கையில் சிதைந்த இந்தியாவின் துறைமுகக் கனவு: அடுத்த திட்டம் ஜெயிக்குமா? Reviewed by irumbuthirai on August 30, 2020 Rating: 5

செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி

August 29, 2020


02-09-2020 முதல் திசம்பர் வரையான காலப்பகுதிக்கான பாடசாலை நாட்காட்டியை இங்கு தருகிறோம்.

தவணை விடுமுறை, பரீட்சை திகதிகள் போன்றவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி Reviewed by irumbuthirai on August 29, 2020 Rating: 5

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு:

August 28, 2020


ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். 
இம்முறை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
இதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கி மீண்டும் ஜனவரி 4 ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: 2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 28, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை..

August 27, 2020


சகல அரச பாடசாலைகளிலும் தரம் 1 மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டிற்காக விநியோகிக்கப்படும் சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலததை செப்தம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
ஏற்கனவே இந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2020.08.31ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. நாட்டில் நிலவிய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மாணவர்களுக்கான இந்த வவுச்சர்கள் மூலம் சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இதற்கான கால எல்லையை மேலும் நீடிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு   ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை.. நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை.. Reviewed by irumbuthirai on August 27, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு:

August 27, 2020


தொழிலற்ற பட்டதாரிகளுக்கு மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 16-8-2020 வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கு மேலதிகமாக திருத்தியமைக்கப்பட்ட புதிய பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
மாவட்ட ரீதியாக திருத்தியமைக்கப்பட்ட பெயர் பட்டியல், அதற்கான காரணம், நிராகரிக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட எண்ணிக்கை போன்ற விடயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. 
இதுதொடர்பாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

 


புதிய பெயர் பட்டியல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Name list
பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு: பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 27, 2020 Rating: 5

அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..?

August 26, 2020


அமெரிக்க தேர்தல்:  
கொவிட் 19 கொள்ளை நோய்க்கிடையே எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. 
அமெரிக்க யாப்பின் படி ஜனாதிபதி தேர்தல் தினம் நிச்சயிக்கப்பட்டதாகும். தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் திகதியும் நிச்சயிக்கப்பட்டது. இம்முறையும் வழமை போன்று குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது. அமெரிக்க தேர்தல் முறை கொஞ்சம் சிக்கலானது. விளக்குவது கடினம். ஜனாதிபதியுடன் உப ஜனாதிபதி தேர்வும் நடைபெறும். 
 குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவருடைய துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். 
 ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும் போது அவரின் துணை ஜனாதிபதியாக இருந்தவர். பைடனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் ஒரு பெண். இது அமெரிக்க வரலாற்றில் விஷேட நிகழ்வாகும். பைடன் நவம்பரில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக அவர் தெரிவாவார். 

#வரலாற்றில் இடம்பிடிக்கும் கமலா ஹரீஸ்.
முதலாவது ஆசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரீஸ் அவர் 55 வயதுடைய கமலா ஹாரிஸ் எனும் ஜமெய்க்கா மற்றும் 

ஆசிய வம்சாவளி கொண்ட பெண்ணாவார். கலிஃபோனியா செனடரான இவர் ஒரு சட்டத்தரணி. முதலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் உடன் போட்டியிட்டார். போட்டியில் பின் வாங்க ஆரம்பித்ததும் போட்டியில் இருந்து விலகி பைடனுக்கு ஆதரவளித்தார். தற்போது ஜோ பைடனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்கிறார். இவர் அமெரிக்க சென்ட் க்கு தெரிவான முதலாவது ஆசிய வம்சாவளி பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
கமலா ஹரிசின் தாய் இந்தியாவை அதுவும் தமிழ் நாட்டை சேர்ந்தவர். அவரின் குடும்பத்தவர்கள் இன்றும் தமிழ் நாட்டில் வசிக்கின்றனர். புகழ் பெற்ற ஜோசியராக புது டில்லியில் வசிக்கும் பாலச்சந்தர கோபாலன் கமலாவின் மாமனார் ஆவார். 

 #இலங்கை வம்சாவளி ரோஹிணி:  
கமலா ஹரிஸ் தனது அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதராக ரோஹிணி லக்ஷ்மி எனும் இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணை நியமித்துள்ளார். அவ்வாறான பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆசிய வம்சாவளிப் பெண்ணாக அவர் உள்ளார். இவர் இலங்கையின் வடபுலத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகளாக பிறந்தவர். வைத்தியரான இவரது தந்தை 1980 களில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர். 
அத்துடன் மிச்சிகன் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் மிச்சிகன் செனடர் டெபி இன் அலுவலக பணியாளராகவும், பின்னர் கொளராடோ செனடர் மைக்கல் பெனட் இன் சுகாதார ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். 
அக்காலப்பகுதியில் கமலா ஹாரிசின் அறிமுகம் ரோஹிணிக்கு கிடைத்தது. இருவரும் தமிழ் என்பதால் ஒட்டுறவு அதிகமாக இருந்தது. அதன் பின்னர் உதவி அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதராக கமலாவுடன் இணைத்து கொண்டார். தற்போது அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதர் பதவிக்கு மேலதிகமாக கமலாவின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியையும் அவர் வகித்து வருகிறார். 

 #கொரோனா பின்னணியில் அமெரிக்க தேர்தல்:  
கொரோணா கட்டுப்பாடு மிக மோசமான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். நாட்டின் தலைவர் என்ற ரீதியில் டொனால்ட் டிரம்ப் ஒரு சிறு பிள்ளை போன்றே ஆட்சி செய்கிறார். 
குறிப்பாக தனக்கு கொரோணா என்று வேடிக்கையாக சொல்லித் திரிந்தமை, வெட்டியாக சீனாவுடன் முரண்பாட்டுக் கொண்டு நின்றமை, ஜோர்ஜ் ப்ளோயிட் கொலைக்கு பின் நடந்து கொண்ட முறை என்பன அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. 
கிளிண்டன், ஜோர்ஜ் W புஷ், பரக் ஒபாமா ஆகிய மூவரும் தொடர்ச்சியாக தமது இரு பதவிக் காலங்களிலும் ஜனாதிபதியாக இருந்த பின்னர் ஓய்வு பெற்றனர். ஆனால் டிரம்ப் அண்மைக்கால ஜனாதிபதிகளில் தோல்வி கண்டு ஒதுங்கும் தலைவராக மாறலாம் என்றே எதிர்வு கூறப்படுகிறது. என்ற போதிலும் கொரோனா பாதிப்பினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட அமெரிக்க பொது மக்களிற்காக அரசு பெரும் தொகையை செலவு செய்கிறது. மூன்றாம் மண்டல நாடுகள் போன்று இந்த நலன்புரிகள் ஆட்சியை தீர்மானிக்குமா என்பதை நவம்பர் 3 ஆம் திகதியே அறிந்து கொள்ளலாம். 

#இலங்கை தமிழர் பிரச்சினையும், அமெரிக்க தேர்தலும்:  
மறுபுறம் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அமெரிக்க அரசின் அதிகாரம் மிக்க இரு பதவிகளுக்கு தமிழர்கள் வரப் போகிறார்கள். இது இலங்கையின் தமிழர் பிரச்சினை குறித்த அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்று எதிர்வு கூறலாம். குறிப்பாக தமிழ் டையஸ்போராவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹிணி போன்றவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெளிவில்லை. இந்நிலையில் இலங்கை குறித்த அமெரிக்காவின்  கொள்கையில் எவ்வாறான மாற்றங்கள் வரும் என்ற கேள்விக்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும். சில வேளை அந்த பதில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளலாம்.... 
fபயாஸ் M fபரீட்.
அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..? அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..? Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura

August 26, 2020

M.Sc in Computer Science:
University of Sri Jayawardanapura
Closing date: 15-09-2020.


M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

MBA: University of Jaffna & University of Moratuwa

August 26, 2020
Master of Business Administration (MBA)
University of Jaffna & University of Moratuwa.


MBA: University of Jaffna & University of Moratuwa MBA: University of Jaffna & University of Moratuwa Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka

August 26, 2020


Vacancy in the Insurance Regulatory Commission of Sri Lanka.
Closing date: 31-08-2020.



Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Sri Lanka State Trading (General) Corporation Ltd.

August 26, 2020

Vacancy in Sri Lanka State Trading (General) Corporation Ltd.
Closing date: 30-08-2020.


Vacancy: Sri Lanka State Trading (General) Corporation Ltd. Vacancy: Sri Lanka State Trading (General)  Corporation Ltd. Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Ministry of Health

August 26, 2020

Vacancy in the Ministry of Health.
Closing date: 30-08-2020.


Vacancy: Ministry of Health Vacancy: Ministry of Health Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: State Printing Corporation

August 26, 2020

Vacancy in the State Printing Corporation
Closing date: 31-08-2020.



Vacancy: State Printing Corporation Vacancy: State Printing Corporation Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5
Powered by Blogger.