பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை

September 16, 2020


பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை
Ministry of Education
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 
அதாவது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்றி பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளின் முக்கியஸ்தர்களுக்கும் அறிவித்துள்ளது. 
அந்த வகையில் பாடசாலை சுற்றாடலை கிருமி தொற்று நீக்குதல், கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், நபர்களுக்கு இடையிலான இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றொர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை சமூகத்தினரும் தற்பொழுது முழுமையாக கவனம் செலுத்துவதில்லை என்று சில பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இதனால் விசேடமாக பாடசாலை போக்குவரத்து சேவையை வழங்குதல், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பாடசாலை மாணவர்கள் நேரடியாக தொடர்புபடும் போது இவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்வது பாடசாலை அதிகாரிகள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரிற்கு பொறுப்பானதாகும். 
அதேவேளை  மாணவர்களின் சுகவீனம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி சுகாதார பாதுகாப்பு தொடர்பில் ஆக கூடிய வகையில் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

(அ.த.தி)
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை Reviewed by irumbuthirai on September 16, 2020 Rating: 5

11-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 15, 2020

11-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள்,
போட்டிப் பரீட்சைகள் உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
11-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 11-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 15, 2020 Rating: 5

பட்டதாரிகளுக்கான பயிற்சிநெறி 51 இராணுவ முகாம்களில்

September 14, 2020


ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 இராணுவ நிலையங்களில் இன்று திங்கள்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது. 
 ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும். ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் வீதம் ஐந்து மாதங்களுக்குள் 50,000 பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்பட்டு, முழுமையான ஆற்றல்மிக்க பணியாளர்களாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பயனுள்ள பங்களிப்பை உறுதி செய்வதற்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பில் ஏழு பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒருங்கிணைப்பில் இராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 
 ஒவ்வொரு கட்டமும் 10,000 

பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அரச துறையின் முழு திறனை ஒரே நேரத்தில் அடைவதற்கு 'தலைமைத்துவம் மற்றும் குழு செயற்பாட்டு பயிற்சி, முகாமைத்துவ பயிற்சி, தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவன பயிற்சி, திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. 'ஒத்திசைவு மற்றும் நெகிழ்வுத் தன்மை திறமையான பொதுத்துறை ஊழியரை வளர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. 
அதே வேளை மோசமான உற்பத்தித்திறனைக் குறைக்கும். இந்த பயிற்சியில் நிர்வாக திறன்கள், அரசாங்க பொறிமுறையின் குறிக்கோள்கள், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, புதுமை, நெகிழ்வுத்தன்மை, காட்சிப்படுத்தல், சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள முடியும். மாவட்டங்களின் படி பங்கேற்கும் பட்டதாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படுவதன் ஊடாக அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆட்சேர்ப்பு முதல் ஓய்வு பெறும் வரை அரசத்துறை ஊழியர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முக்கியமான தேவையை மையமாகக் கொண்டு இராணுவப் பயிற்சியின் ஊடாக நீண்ட கால மற்றும் குறுங்கால இலக்குகளில் திறம்பட மற்றும் விளைத்திறனாக பணியாற்றுவதற்கான தலைமைத்துவம், நிர்வாக திறன், இலக்கு மீதான கவனம், தன்நம்பிக்கை மற்றும் அரச பொறி முறையின் நோக்கங்களை புரிதல் என்பவற்றை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த குறுகிய கால முயற்சியின் குறிக்கோளானது தலைமைத்துவ திறன்கள் மற்றும் பண்புகள், குழு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் அனைத்து பொதுமக்களுக்கும் உயர்தர பொதுத்துறை சேவையை வழங்கக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க, இலக்கு சார், ஒழுக்கமான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதாகும். 
நீண்டகால நோக்கங்களை ஐந்தாண்டுகளுக்குள் அடையக்கூடிய வகையில் பொதுத்துறை ஊழியர் படையை திறமையான வழிமுறைகள், அணுகுமுறைகள் சமூகத்திற்கு உழைக்கும் கலாச்சார வளர்ச்சி, பொதுத்துறை சேவை அங்கிகாரம், மதிப்பு, அடையாளம் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பீடு செய்தல் எனும் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அதன்படி இராணுவப் பயிற்சித் திட்டம் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிக்கள பயிற்சி நடவடிக்கைகள், குழு கட்டமைத்தல் நடவடிக்கைகள், ஆய்வு சுற்றுப்பயணங்கள், திறன் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் ஐந்து சுயாதீனமான ஒன்றோடொன்று தொடர்புடைய தொகுதிகளின் கீழ் தொடங்கப்படும், இது பொதுத்துறையின் பங்களிப்பை ஆற்றல்மிக்கதாக மாற்றும். வழி. இராணுவ பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் சில அரச நிறுவனங்கள் இத் திட்டத்திற்கா செயல்படவுள்ளன. 
 இந்த ஐந்து மாத முழுவதும் பட்டதாரி பயிற்சி திட்டத்தின் மூலோபாய கருத்துருவாக்கத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் வழிகாட்டல்களில் இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகம் முன்னெடுக்கின்றது.

(அ.த.தி)
பட்டதாரிகளுக்கான பயிற்சிநெறி 51 இராணுவ முகாம்களில் பட்டதாரிகளுக்கான பயிற்சிநெறி 51 இராணுவ முகாம்களில் Reviewed by irumbuthirai on September 14, 2020 Rating: 5

மேல் மாகாணத்தில் இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டம்

September 14, 2020

மேல் மாகாணத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் இன்று (14) முதல் அமுல்படுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதன்பிரகாரம் மேல்மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (பொலிஸ் போக்குவரத்து) வழிகாட்டலின் கீழ் வீதி ஒழுங்கை சட்டம் இன்று 14 முதல் 16 ஆம் திகதி வரை கலை 06.00 மணிமுதல் 10.00 மணிவரையான காலப்பகுதியில் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த திட்டம் கீழ்குறிப்பிடப்படும் நான்கு வீதிகளுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளது. 
 • ஸ்ரீ ஜயவர்த்தன மாவத்த, பொல்துவ சந்தி முதல் ஹர்டன் பிளேஸ் வரை 
 • பேஸ்லைன் வீதி, கலணி பாலம் முதல் ஹை லெவல் வீதி வரை 
 • ஹை லெவல் வீதி, அனுலா கல்லூரி முதல் ஸ்ரீ சம்புதத்வ ஜயந்தி மாவத்த, தும்முள்ள சுற்றுவட்டாரம், தேஸ்டன் வீதி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்த, நூலக சந்தி, ஆனந்த குமாரசாமி மாவத்த, மல்பரா சந்தி மற்றும் பித்தல சந்தி வரை 
 • காலி வீதி, வில்லியம் சந்தி முதல் காலிமுகத்திடல் சுற்றுவட்டாரம் மற்றும் என்எஸ்ஏ சுற்றுவட்டாரம் வரை 
 வீதி ஒழுங்கை சட்டத்தை பின்பற்றுமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(அ.த.தி.)
மேல் மாகாணத்தில் இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டம் மேல் மாகாணத்தில் இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டம் Reviewed by irumbuthirai on September 14, 2020 Rating: 5

20 ஆவது திருத்தமும் மாற்றப்படலாம்: பிரதமரினால் குழு நியமனம்:

September 14, 2020


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 
குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பெயர் விபரம் வருமாறு, 

1. கௌரவ அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 
2. கௌரவ அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில 
3. கௌரவ அமைச்சர் மொஹமட் அலி சப்ரி 
4. கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 
5. கௌரவ அமைச்சர் விமல் வீரவன்ச 
6. கௌரவ இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 
7. கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் 
8. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா 
9. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த. 
செப்டம்பர் 15ஆம் திகதி இக்குழுவின் அறிக்கை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
20 ஆவது திருத்தமும் மாற்றப்படலாம்: பிரதமரினால் குழு நியமனம்: 20 ஆவது திருத்தமும் மாற்றப்படலாம்: பிரதமரினால் குழு நியமனம்: Reviewed by irumbuthirai on September 14, 2020 Rating: 5

Vacancy: Telecommunications Regulatory Commission of Sri Lanka

September 13, 2020


Vacancy in the Telecommunications Regulatory Commission of Sri Lanka.
Closing date: 25-09-2020.
See the details below:


Vacancy: Telecommunications Regulatory Commission of Sri Lanka Vacancy: Telecommunications Regulatory Commission of Sri Lanka Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

Vacancy: Katunayake Airport

September 13, 2020


Vacancy in the Katunayake Airport.
Closing date: 17-09-2020.
See the details below:


Vacancy: Katunayake Airport Vacancy: Katunayake Airport Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

Vacancy: Tea Research Board

September 13, 2020

Vacancy in the Tea Research Board.
Closing date: 21-09-2020.
See the details below:

Vacancy: Tea Research Board Vacancy: Tea Research Board Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

Vacancy: Securities and Exchange Commission of Sri Lanka.

September 13, 2020

Vacancy: Securities and Exchange Commission of Sri Lanka.
Closing date:17-09-2020.
See the details below:

Vacancy: Securities and Exchange Commission of Sri Lanka. Vacancy: Securities and Exchange Commission of Sri Lanka. Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

Vacancies: National Livestock Development Board

September 13, 2020


Vacancies in the National Livestock Development Board.
Closing date: 24-09-2020.
See the details below:


Vacancies: National Livestock Development Board Vacancies: National Livestock Development Board Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

Vacancies: University Hospital (Nursing Sisters & Nursing Officers)

September 13, 2020


Vacancies in the University Hospital of John Kotalawela Defence University.
Posts: Nursing Sisters & Nursing Officers.
Closing date: 21-09-2020.
See the details below:


Vacancies: University Hospital (Nursing Sisters & Nursing Officers) Vacancies: University Hospital (Nursing Sisters & Nursing Officers) Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

Vacancy: National Institute of Fundamental Studies (Research Assistant)

September 13, 2020


Vacancy in the National Institute of Fundamental Studies. 
Post: Research Assistant.
Closing date: 27-09-2020.
See the details below:


Vacancy: National Institute of Fundamental Studies (Research Assistant) Vacancy: National Institute of Fundamental Studies (Research Assistant) Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

Vacancy: Sri Lanka Medical Council

September 13, 2020


Vacancy in the Sri Lanka Medical Council.
Closings date: 16-09-2020.
See the details below:


Vacancy: Sri Lanka Medical Council Vacancy: Sri Lanka Medical Council Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5
Powered by Blogger.