Covid-19 காரணமாக வெளிநாடுகளில் தொழில்வாப்புக்களை இழந்தவர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு..

September 21, 2020

Covid - 19 தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ள இலங்கை பணியாளர்களுக்கு வேறு இடங்களில் தொழில்வாய்ப்பு வழங்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாப்பு பணியத்தின் தலைவர் கமல் ரத்வத்தையினால் சுற்றறிக்கை மூலம் வெளிநாட்டு வேலைவாப்பு முகவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தொழில் தொடர்பான உடன்படிக்கை கால எல்லை முடிந்த பின்னர் நாடு திரும்ப முடியாதுள்ள பணியாளர்களுக்கு தற்போதுள்ள நாட்டில் வேறு தொழில்வாப்புகளை பெறுவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதற்கு தேவையான அனுமதி மற்றும் பாதுகாப்பு முத்திரையிடப்பட்ட கடவு சீட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடைவடிக்கை பணியாளர்கள் இருக்கும் இலங்கை தூதரக அலுவலகத்தின் தொழிலாளர் சேமநால நிதியத்தின் மூலம் மேற்கொள்ள முடியும். 
தேவையான ஆவணங்களை நாட்டிலுள்ள தொழில் முகவர்கள் மூலம் பணியாளர்கள் தொழில் செய்ய எதிர்பார்த்துள்ள இடத்தின் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
(அ.த.தி)
Covid-19 காரணமாக வெளிநாடுகளில் தொழில்வாப்புக்களை இழந்தவர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. Covid-19 காரணமாக வெளிநாடுகளில் தொழில்வாப்புக்களை இழந்தவர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. Reviewed by irumbuthirai on September 21, 2020 Rating: 5

மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை

September 21, 2020

 


இலங்கை அடுத்த வருடம் மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது. 
1500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் தற்சமயம் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது இதனால் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 22,500 மெற்றிக்தொன் மஞ்சள் அறுவடையாக கிடைக்கும் என்று ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை Reviewed by irumbuthirai on September 21, 2020 Rating: 5

பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்..

September 20, 2020

 


நாட்டிலுள்ள பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 
உயர்கல்வி அமைச்சில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் பேராசிரி ஜீ.எல். பீரிஸ் நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். 
பேராதனை, யாழப்பாணம், ருஹூணு, மொரட்டுவை, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்.. பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்.. Reviewed by irumbuthirai on September 20, 2020 Rating: 5

புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள்

September 18, 2020

 


எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கு வெளிநாடு செல்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
திறமையான 10 வீர - வீராங்கனைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்குடன் போட்டிகளுக்கான செலவினத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு விழாவில் 30 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள் புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள் Reviewed by irumbuthirai on September 18, 2020 Rating: 5

18-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 18, 2020

 


18-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். Official gazette released on 18-09-2020 (In three languages) 
இதில், 
அரச பதவி வெற்றிடங்கள், 
போட்டிப் பரீட்சைகள் உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. Click the link below for Tami Gazette.
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. Click the link below for English Gazette.
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. Click the link below for Sinhala Gazette.

18-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 18-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 18, 2020 Rating: 5

பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தலாம்: பின்பற்றவேண்டிய முறை இதோ!

September 18, 2020

 


Covid-19 தொற்றுக்கு மத்தியில் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் விசேட ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒன்றிணைந்து இந்த ஆலோசனைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
கொரோனா தொற்றுக்கு மத்தியில் எற்பட்டுள்ள அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு 4 பிரிவுகளின் கீழ் இந்த ஆலோசனைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது விளையாட்டு நடவடிக்கையின் போது கைகளை கழுவுதல் மற்றும் சுகாதார முறைப்படி உணவு உட்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை முன்னெடுத்தல் போன்ற அடிப்படை ஆலோசனைகளுக்கு மேலதிகமாக விளையாட்டு மைதானங்களில் பிரவேசிப்போருக்கு போதுமான சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு இடம்பெறும் சுற்றாடலில் உணவு விற்பனை மற்றும் உணவை விநியோகிக்கும் பணியாளர்களின் சகாதார பாதுகாப்பு விடயங்களை உரிய முறையில் முன்னெடுத்தல் உள்ளிட்;டன இந்த ஆலோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அதிபர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு தெளிவுபடுத்துவதற்கு தற்பொழுது அனைத்து மகாண கல்வி அதிகாரிகள் விளையாட்டு சங்கங்களின் முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தலாம்: பின்பற்றவேண்டிய முறை இதோ! பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தலாம்: பின்பற்றவேண்டிய முறை இதோ! Reviewed by irumbuthirai on September 18, 2020 Rating: 5

ஒரு வருடமாக சிகிச்சையளித்து வந்த போலி பெண் வைத்தியர்: சருமத்தை வெள்ளை நிறமாக்கும் சிகிச்சையில் மாட்டிக்கொண்டார்:

September 18, 2020

 


வேறு ஒரு வைத்தியரின் பதிவு இலக்கத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ முத்திரையுடன் சுமார் ஒரு வருடமாக மருந்து விநியோகித்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளதாக மெட்ரோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
கம்பஹா மாவட்டத்தில் திக்வலை பிரதேசத்தில் 32 வயதான பெண்ணையே போலீசார் இவ்வாறு கைது செய்துள்ளனர். இவர் காய்ச்சல் சளி போன்ற நோய்களுக்காக சிகிச்சை அளித்து வந்துள்ளார். 
அதேவேளை சருமத்தை வெள்ளை நிறமாக மாற்றுதல் தொடர்பான சிகிச்சை தொடர்பில் இணையதளத்தில் இவரின் விளம்பரத்தைப் பார்த்து விட்டு புத்தளத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்து ஒவ்வாமையை ஏற்படுத்த உடம்பில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. 
பின்னர் குறித்த வைத்தியர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அது தொடர்பில் ஆராய்ந்த போது அவர் போலி வைத்தியர் என்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து மீகஹவத்த பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் காரணமாக பொலிசாரினால் குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்டு போலி பெண் வைத்தியர் கைது செய்யப்பட்டார். 
இவரிடமிருந்து போலி முத்திரைகள் ஆவணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு வருடமாக சிகிச்சையளித்து வந்த போலி பெண் வைத்தியர்: சருமத்தை வெள்ளை நிறமாக்கும் சிகிச்சையில் மாட்டிக்கொண்டார்: ஒரு வருடமாக சிகிச்சையளித்து வந்த போலி பெண் வைத்தியர்: சருமத்தை வெள்ளை நிறமாக்கும் சிகிச்சையில் மாட்டிக்கொண்டார்: Reviewed by irumbuthirai on September 18, 2020 Rating: 5

16-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 17, 2020

16-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
16-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 16-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 17, 2020 Rating: 5

வெளிநாடுகளில் பட்டம் பெற்றோர்க்கு ஆசிரியர் நியமனம் உட்பட ஏனைய அரச வேலைவாய்ப்புகள்

September 17, 2020

 


வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களை இங்கு அரச சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
இவ்வாறான பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு பின்தங்கிய பிரதேசங்களில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பித்தல் மற்றும் தேவைப்படும் ஏனைய தொழில்களுக்கும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் செயலாளர் தெரிவித்தார். 
இதுவரை இவ்வாறான 4100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாகவும் இந்த அடிப்படையில் வெளிநாடுகளில் கல்வி கற்றவர்களின் சேவையை உள்நாட்டில் பெரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பட்டம் பெற்றோர்க்கு ஆசிரியர் நியமனம் உட்பட ஏனைய அரச வேலைவாய்ப்புகள் வெளிநாடுகளில் பட்டம் பெற்றோர்க்கு ஆசிரியர் நியமனம் உட்பட ஏனைய அரச வேலைவாய்ப்புகள் Reviewed by irumbuthirai on September 17, 2020 Rating: 5

அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்:

September 17, 2020

 


ஜனாதிபதி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர், பிரதமரின் காரியாலய அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் வேண்டுகோள் அல்லது கட்டளை என்ற பெயரில் கடிதத்தோடு வருகின்ற மாணவர்களின் அனுமதியை செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
சில வேளைகளில் அரச அதிகாரிகளும் இவ்வாறான கடிதங்களை அனுப்புவதாக தெரியவந்துள்ளது. மாணவர் அனுமதி தொடர்பாக உள்ள நியதிகள், நடைமுறைகள் மாத்திரமே பின்பற்றப்பட வேண்டும் மாறாக கடிதங்களுக்கு மாணவர் அனுமதி மேற்கொள்ளக்கூடாது 
இவ்வாறு நடக்கும் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலாளர் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.
​00000
அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்: அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்: Reviewed by irumbuthirai on September 17, 2020 Rating: 5

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை

September 16, 2020


பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை
Ministry of Education
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 
அதாவது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்றி பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளின் முக்கியஸ்தர்களுக்கும் அறிவித்துள்ளது. 
அந்த வகையில் பாடசாலை சுற்றாடலை கிருமி தொற்று நீக்குதல், கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், நபர்களுக்கு இடையிலான இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றொர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை சமூகத்தினரும் தற்பொழுது முழுமையாக கவனம் செலுத்துவதில்லை என்று சில பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இதனால் விசேடமாக பாடசாலை போக்குவரத்து சேவையை வழங்குதல், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பாடசாலை மாணவர்கள் நேரடியாக தொடர்புபடும் போது இவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்வது பாடசாலை அதிகாரிகள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரிற்கு பொறுப்பானதாகும். 
அதேவேளை  மாணவர்களின் சுகவீனம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி சுகாதார பாதுகாப்பு தொடர்பில் ஆக கூடிய வகையில் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

(அ.த.தி)
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை Reviewed by irumbuthirai on September 16, 2020 Rating: 5

11-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 15, 2020

11-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள்,
போட்டிப் பரீட்சைகள் உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
11-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 11-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 15, 2020 Rating: 5

பட்டதாரிகளுக்கான பயிற்சிநெறி 51 இராணுவ முகாம்களில்

September 14, 2020


ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 இராணுவ நிலையங்களில் இன்று திங்கள்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது. 
 ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும். ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் வீதம் ஐந்து மாதங்களுக்குள் 50,000 பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்பட்டு, முழுமையான ஆற்றல்மிக்க பணியாளர்களாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பயனுள்ள பங்களிப்பை உறுதி செய்வதற்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பில் ஏழு பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒருங்கிணைப்பில் இராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 
 ஒவ்வொரு கட்டமும் 10,000 

பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அரச துறையின் முழு திறனை ஒரே நேரத்தில் அடைவதற்கு 'தலைமைத்துவம் மற்றும் குழு செயற்பாட்டு பயிற்சி, முகாமைத்துவ பயிற்சி, தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவன பயிற்சி, திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. 'ஒத்திசைவு மற்றும் நெகிழ்வுத் தன்மை திறமையான பொதுத்துறை ஊழியரை வளர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. 
அதே வேளை மோசமான உற்பத்தித்திறனைக் குறைக்கும். இந்த பயிற்சியில் நிர்வாக திறன்கள், அரசாங்க பொறிமுறையின் குறிக்கோள்கள், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, புதுமை, நெகிழ்வுத்தன்மை, காட்சிப்படுத்தல், சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள முடியும். மாவட்டங்களின் படி பங்கேற்கும் பட்டதாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படுவதன் ஊடாக அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆட்சேர்ப்பு முதல் ஓய்வு பெறும் வரை அரசத்துறை ஊழியர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முக்கியமான தேவையை மையமாகக் கொண்டு இராணுவப் பயிற்சியின் ஊடாக நீண்ட கால மற்றும் குறுங்கால இலக்குகளில் திறம்பட மற்றும் விளைத்திறனாக பணியாற்றுவதற்கான தலைமைத்துவம், நிர்வாக திறன், இலக்கு மீதான கவனம், தன்நம்பிக்கை மற்றும் அரச பொறி முறையின் நோக்கங்களை புரிதல் என்பவற்றை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த குறுகிய கால முயற்சியின் குறிக்கோளானது தலைமைத்துவ திறன்கள் மற்றும் பண்புகள், குழு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் அனைத்து பொதுமக்களுக்கும் உயர்தர பொதுத்துறை சேவையை வழங்கக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க, இலக்கு சார், ஒழுக்கமான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதாகும். 
நீண்டகால நோக்கங்களை ஐந்தாண்டுகளுக்குள் அடையக்கூடிய வகையில் பொதுத்துறை ஊழியர் படையை திறமையான வழிமுறைகள், அணுகுமுறைகள் சமூகத்திற்கு உழைக்கும் கலாச்சார வளர்ச்சி, பொதுத்துறை சேவை அங்கிகாரம், மதிப்பு, அடையாளம் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பீடு செய்தல் எனும் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அதன்படி இராணுவப் பயிற்சித் திட்டம் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிக்கள பயிற்சி நடவடிக்கைகள், குழு கட்டமைத்தல் நடவடிக்கைகள், ஆய்வு சுற்றுப்பயணங்கள், திறன் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் ஐந்து சுயாதீனமான ஒன்றோடொன்று தொடர்புடைய தொகுதிகளின் கீழ் தொடங்கப்படும், இது பொதுத்துறையின் பங்களிப்பை ஆற்றல்மிக்கதாக மாற்றும். வழி. இராணுவ பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் சில அரச நிறுவனங்கள் இத் திட்டத்திற்கா செயல்படவுள்ளன. 
 இந்த ஐந்து மாத முழுவதும் பட்டதாரி பயிற்சி திட்டத்தின் மூலோபாய கருத்துருவாக்கத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் வழிகாட்டல்களில் இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகம் முன்னெடுக்கின்றது.

(அ.த.தி)
பட்டதாரிகளுக்கான பயிற்சிநெறி 51 இராணுவ முகாம்களில் பட்டதாரிகளுக்கான பயிற்சிநெறி 51 இராணுவ முகாம்களில் Reviewed by irumbuthirai on September 14, 2020 Rating: 5
Powered by Blogger.