பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா?

October 16, 2020

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணை பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரியின் கணவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என திணைக்களம் நேற்று (15) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
குறித்த அதிகாரியின் கணவருக்கு செய்யப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா? பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்?

October 16, 2020

2019 இல் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
 தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் 
இந்த வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தாமதமாகும். இருப்பினும் அதை எப்போது வெளியிடுவது என இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். 
கொரோனா நிலைமைகளினால் வெட்டுப்புள்ளிகளை தயாரிப்பது தாமதமானதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்? பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை...

October 16, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 10ம் நாள் அதாவது புதன்கிழமை (14) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 135 பேர் கைது.37 வாகனங்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • தங்குமிட விடுதிகளில் இருந்து பணிக்கு செல்பவர்கள் அங்குள்ள ஏனையவர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவன பிரதானிகளுக்கு அறிவிக்க வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரல். 
  • கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு போதியளவு வைத்தியசாலை வசதி உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவிப்பு. 
  • கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மத்துகம பகுதியை சேர்ந்த தாதிக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. 

  • கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஒவ்வொரு கிளினிக் பிரிவிற்குமான தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு அறிவித்தலை வெளியிட்டது. நோயாளர்கள் குறித்த இலக்கத்துடன் தொடர்புகொண்டு உரிய முறையில் சேவையைப் பெறலாம். 
  • கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நாளை (15) காலை 5 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு. 
  • சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருமான உத்தரவு பத்திர விநியோகம் நாளை (15) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 130 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அறிவிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

October 16, 2020

கொரோனா வைரஸ் பரவலை (Covid-19) தடுப்பதற்குரிய ஒழுங்கு விதிகள், சட்ட திட்டங்கள் என்பன அடங்கிய விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. 
ஒவ்வொரு சந்தர்ப்பங்கள், இடங்களிலும் எவ்வாறான ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் மற்றும் அதை மீறும் பட்சத்தில் எத்தகைய தண்டனை வழங்கப்படும் போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
தமிழில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல்.

October 15, 2020

காலத்திற்கு காலம் உலகில் வல்லரசுகள் தோன்றி தன் ஆதிக்கத்தின் கீழ் ஏனைய நாடுகளை அடிமையாக்கி வைத்திருப்பது வாடிக்கை. 
மத்திய காலத்தின் பின்னர் உருவான காலனித்துவ யுகத்தில் ஸ்பெயின், போர்த்துக்கல் என ஆரம்பித்து பின்னர் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக பிரித்தானியா உருவானது வரலாறு. அமெரிக்க புரட்சியின் பின்னர் வீறுகொண்டெழுந்த அமெரிக்கா முதல் உலக யுத்தம் நிறைவடையும் போது பிரித்தானியாவுக்கு சமனான வல்லரசாய் மாறி இருந்தது. 
முதல் உலக யுத்தத்தில் பயங்கர அடி வாங்கி யுத்தத்தில் இருந்து விலகி, புரட்சி மூலம் சோஷலிச ராஜ்யமான உருவான சோவியத் ரஷ்யா 2ம் உலக உலக யுத்தம் நிறைவடையும் போது அமெரிக்காவுக்கு சமனான வல்லரசாய் பரிணாமம் கண்டது. ஆயுதம் , பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, விளையாட்டு என எல்லாத்துறையிலும் இரு நாடுகளும் சமபலத்துடன் திகழ்ந்து, 
1980 ஆம் தசாப்தத்தின் பிற்பகுதி, 90 களின் ஆரம்பத்தில் சோவியத் பல நாடுகளாக உடைந்த தகர்ந்து போனதுடன் அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாய் உருவெடுத்தது. 
1990 களில் ஆட்சியில் கமியூனிசத்தை வைத்துக் கொண்டு, பொருளாதாரத்தில் லிபரல் கொள்கையும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்த சீனா அடுத்து வந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு வல்லரசாக உருவாகி உள்ளது. 
 
#சீனாவின் உத்தி# 
அமெரிக்கா தனது நலன்களுக்காக உலகம் பூராக இராணுவத் தளங்களை பேணி வருகிறது. CIA மூலம் பல்வேறு நாடுகளில் அரசியல் செய்தும் வருகிறது. அதன் மூலம் உலக அரங்கில் எல்லா நாடுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்கிறது. 
ஆனால் சீனா சற்று வித்தியாசமாக 
இதே செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா போன்று யுத்தம் மூட்டல், தலைவர்களை கொலை செய்தல், உள்நாட்டு சதிகளை உருவாக்கி தன் சொல் கேட்கும் பொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கல் போன்றவாராக இல்லாமல் பொருளாதார நலன்களைக் கொண்டு நாடுகளை தம் வசப்படுத்தும் கொள்கையை கடைபிடித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்காக மூலதனப் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு அதிக வட்டியில் கடன் வழங்கி, கடன் சுமையில் சிக்க வைத்து, தன்னுடைய இலக்குகளை அடைந்து கொள்ளும் ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறது. 

 #இந்திய சீன முரண்பாடு# 
சீனாவை பொறுத்தவரை ஆசியாவில் சீனாவின் சவால் இந்தியா. சீனாவிற்கு நிகரான தொழிற்படையுடன் இருக்கும் உலகின் ஒரே நாடு. ஏற்கனவே, எல்லைப் பிரச்சினை காரணமாக இரு நாடுகளும் யுத்தம் செய்தும் உள்ளன. மறுபுறம் திபெத் மீது சீனா உரிமை கொண்டாடுவதால் சீனாவை எதிர்க்கும் திபெத் மதகுரு தலாய்லாமா உட்பட பெரும் எண்ணிக்கையானோருக்கு இந்தியா அடைக்களம் வழங்கியும் உள்ளது. 
தெற்காசியா வலயத்தில் இந்தியா எப்போதும் பெரியண்ணன்தான். அதன் நலன்களுக்கு எப்போதெல்லாம் சிக்கல் வருமோ அப்போதெல்லாம் குட்டி வைக்க இந்த அண்ணன் பின்வாங்கியதில்லை. இலங்கையின் அமெரிக்க சார்பு கொள்கை காரணமாக குட்டிய பெரிய குட்டே இலங்கையின் உள்நாட்டு போரை தூண்டி விட்டமை. 
எனினும், இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் நிரந்தர எதிரி. ஒருபுறம் சீனாவும், இன்னொரு புறம் பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்க வலயத்தின் சண்டியனான இந்தியாவின் தெற்காசிய பலத்திற்கு சவாலாகவும், இந்து சமுத்திரத்தின் இந்திய நலன்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் சீனா வியூகம் அமைக்க ஆரம்பித்தது. 
ஏற்கனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் பாகிஸ்தானுடன் தேன்நிலவு கொண்டாடிக் கொண்டிருந்த சீனாவுக்கு, அபிவிருத்திக்கான மூலதன பற்றாக்குறையுடன் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்று உண்டியல் ஏந்தித் திரிந்த ஷேக் ஹசினாவும், மஹிந்த ராஜபக்ஷவும் நண்பர்களாகி போயினர். விளைவு பங்களாதேஷ், இலங்கை என்று இந்தியாவை சுற்றி தனது அரசியல், பொருளாதார, யுத்த மூலோபாய நலன்களை உருவாக்க ஆரம்பித்தது சீனா. 
எங்கே இலங்கையுடன் முரண்பட்டால் மேலும் சீனா பக்கம் இலங்கை சென்று விடுமோ என்று அஞ்சிய இந்தியா ஏட்டிக்குப் போட்டியாக முதலீடு செய்தும் பார்த்தது. ஆட்சி மாற்றத்திற்கு திரைக்கு பின்னால் இயங்கியும் பார்த்தது. சீனாவின் காய் நகர்த்தலுக்கு மத்தியில் எல்லாமே புஷ்வாணமாய் போனது. 

 #மூக்குடைபட்ட அமெரிக்கா# 
மறுபுறம் உலக அரங்கிலும் சீனா தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. டிரம்ப் போன்ற முன்யோசனை அற்ற தலைவர்கள் அதை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட சிறுப்பிள்ளைத்தனமான நடத்தைகள் சீனாவை பாதிக்கவில்லை. 
இப்பின்னணியில் அத்திலாந்திக் கரையின் இருமுனைகளை இணைத்து ரஷ்யாவை கட்டுப்படுத்த நேட்டோவை உருவாக்கியது போல இந்துமாக் கடலின் இரு முனைகளை இணைத்து ஒரு இராணுவக் கூட்டை உருவாக்கி சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்தியப் பெருங்கடலின் இந்தியாவும், பசுபிக் எல்லையின் அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் இணைந்து ஏனைய நாடுகளை இணைத்துக் கொண்டு முன்னெடுக்க இந்த திட்டம் தீட்டப்பட்டது. 
இதன் முதல் கூட்டம் கடந்த டிசம்பரில் புதுடில்லியில் மேற்படி 3 நாடுகளோடு அமெரிக்கவினதும் வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சர்கள் பங்குபற்றும் கூட்டமாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்தியா சற்று பின்வாங்கியது. 
சீனாவில் ஆரம்பித்த கோவிட் 19 கொரோணா சீன பொருளாதாரத்தை சுழற்றிப் போடும் என்று இந்தியா கற்பனை பண்ணி இருக்கலாம். எனினும் மார்ச் ஆகும் போது கோவிட் 19 ஐ வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது சீனா. குறிப்பாக வுஹான் நகர் தவிர வேறு இடங்களில் பாரிய தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்க எல்லாம் செய்து கொண்டது சீனா. 
மறுபுறம் கோவிட் 19 இனால் சீனாவின் பொருளாதாரம் சீரழியும் வரை காத்த இந்தியா, அமெரிக்காவின் நிலை படுமோசமானது. ஏற்கனவே, 1964 ல் சீனாவுடன் யுத்தம் செய்து மூக்குடைபட்ட இந்தியா லடாக்கில் மீண்டும் அவமானப்பட்டது. எனினும், கடும் பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் வலுவாக உள்ள சீனாவுடன் மேலும் பகைக்க இந்தியா கொஞ்சம் தயக்கம் காட்டியது. 
 இன்னொரு புறம் அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா, சீனாவுடன் மிக நெருங்கிய வர்த்தக தொடர்புகள் உண்டு. அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக உருவாகும் கூட்டு ஒன்றின் மூலம் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு தன்னுடைய இறைச்சி, பால் மற்றும் கனிம வளங்களுக்கான சந்தையை இழக்க அவுஸ்திரேலியா தயாராக இல்லை. 
ஜப்பானின் நிலையும் அதுவே. ஏனென்றால் உயர் தொழில்நுட்ப உற்பத்திகள் தொடர்பில் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. 
இந்நிலையிலேயே குவார்ட் என்று அறியப்பட்ட மேற்படி நான்கு நாடுகளின் கூட்டம் டோக்கியோவில் நடைபெற்றது. பாதுகாப்பு ஒத்துழைப்பு என்று சொல்லிக் கொண்ட போதிலும் 4 நாடுகளினதும் வெளியுறவுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மட்டுமே பங்குபற்றினர். கூட்டத்தின் முடிவில் ஒரு கூட்டு அறிக்கை கூட வெளியிட இவர்களால் முடியவில்லை. தனித்தனியான அறிக்கைகள் வெளிப்பட்டிருந்தன. 
 இன்னொரு பக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்தை விட குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், டிரம்ப் தோற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஒத்துழைப்புக்களை விட பொருளாதார அழுத்தங்கள் மூலம் சீனாவை கட்டுப்படுத்தும் கொள்கையை செயற்படுத்தலாம் என்பதால் அவசரப்பட்டு இராணுவ கூட்டு ஒன்றுக்கு செல்வதை தவிர்ப்பதே நலம் என அந்த மூன்று நாடுகளும் கணக்குப் பண்ணி இருக்கலாம். அந்த அடிப்படையில் சீனாவுக்கு எதிராக பிராந்தியத்தின் 3 பெரிய பொருளாதார வல்லரசுகளையும் கொம்பு சீவி விட டிரம்ப் அரசு முயன்று தோல்வி கண்டுள்ளது என்றும் சொல்லலாம். 
எனினும், நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வென்றால் இதே திட்டத்தை மீண்டும் தூசு தட்டி எடுக்கும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை. 

#இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்
இக்கூட்டம் நடந்த நேரத்திலேயே சீனாவின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தார். அது சர்வதேச அரங்கில் முக்கிய நிகழ்வாக நோக்கப்பட்டது. அவ்வாறே அந்த விஜயத்தின் பின்னர் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை ரூஹுனு மாகம்புற துறைமுகத்தில் அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 
அதன் பின்னர் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பொம்பியோ முன்னர் திட்டமிடப்படாத ஒரு பயணமாக இலங்கைக்கும் வருவார் என்ற தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, சீனா இலங்கைக்கு கடன் உதவி என்ற பெயரில் ஏமாற்றி வருகிறது என்ற அர்த்தம் தொனிக்கும் கருத்து ஒன்றை அமெரிக்க உயர் ஸ்தானிகர் கூறியும் இருந்தார். 
 கோவிட் 19 க்கு மருந்துகள் எதுவும் கண்டு பிடிக்க தாமதமாகும் ஒவ்வொரு கணமும் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் அதே வேளை, கோவிட் 19 ஐ வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள சீனா வளர்ச்சி இல்லாத போதிலும் நிலையாக நிற்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக அமெரிக்க, சீன அரசியல் வலுச் சமநிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். அத்தோடு கோவிட் 19 இந்திய பொருளாதாரத்தை அழிக்கலாம். 
ஆசிய அரசியல் அரங்கில் குறிப்பாக இந்து சமுத்திர அரசியலில் இந்தியாவை இலகுவாக விஞ்சும் சக்தியை சீனாவுக்கு வழங்கலாம். மேற்படி பின்னணியில் இலங்கையில் பாத்திரம் உலக அளவில் வலுவாக உணரப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் சீன-இந்திய-அமெரிக்க போட்டியில் உதைக்கப்படும் Football இலங்கை... 
-  fபயாஸ் MA fபரீட்
குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல். குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல். Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி

October 15, 2020

IPL போட்டியில் 10 முறை 100 ஓட்டங்கள் எடுத்த கூட்டணி அமைத்த முதல் ஜோடி என்கிற பெருமையை பெங்களூர் அணியைச் சேர்ந்த கோலி - டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்கள். 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இது நிகழ்ந்துள்ளது. 
இதுமாத்திரமன்றி
 IPL போட்டியில் கூட்டணி அமைத்து 3000 ஓட்டங்கள் எடுத்த முதல் ஜோடி என்கிற பெருமையையும் கோலி - டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்கள். கோலி - கெய்ல் கூட்டணி இதற்கு அடுத்ததாக 2,782 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 
ஐபிஎல் போட்டியில் அதிக 100 ஓட்டங்கள் கூட்டணி அமைத்தவர்கள். 
10 முறை - கோலி - டி வில்லியர்ஸ். 
9 முறை - கோலி - கெய்ல் 
6 முறை - தவன் - வார்னர் 
5 முறை - பேர்ஸ்டோவ் - வார்னர் 
5 முறை  - கம்பீர் - உத்தப்பா
10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி 10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்...

October 15, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. 
அதாவது சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த 3ம் வருட மாணவர்கள் 4 பேருக்குக்கு 
ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவுக்குப் பரிந்துரை செய்துள்ளது. 
அத்துடன் குற்றத்தின் பாரதூரத் தன்மை கருதி மாணவி ஒருவருக்குக் கடும் எச்சரிக்கையுடனான விலக்களிப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபடுபவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்... கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்... Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்:

October 15, 2020

கம்பஹா மற்றும் கொழும்பில் இரு வெவ்வேறு பரீட்சை மோசடிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலையில் பரீட்சார்த்தி ஒருவர் பரீட்சையின் போது Smart Watch பயன்படுத்தியுள்ளார். 
இதைக் கண்ட மேற்பார்வையாளர் அதை பறிமுதல் செய்ததோடு 
மீண்டும் பரீட்சை எழுத அனுமதித்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை பொலிஸில் பதிவு செய்துள்ளதாகவும் அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
மற்றுமொரு சம்பவத்தில் கொழும்பில் பரீட்சார்த்தி ஒருவர் தனது Smart Phone மூலம் தனது வினாத்தாளை படம்பிடித்து இன்னொருவருக்கு அனுப்பும் பொழுது பிடிபட்டுள்ளார். 
 இந்த தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்: கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்: Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்...

October 14, 2020

பாடசாலை மாணவர்களின் ஊடகத்துறை கல்வியை மேம்படுத்துவதற்காக மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு 25 வெகுஜன ஊடக பாடசாலைகள் நாடு முழுவதிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி. சாரா ஹல்டன் (Sarah Hulton) மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்றது. 
இதன் போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 
பாடசாலைக் கல்வியின் போது மாணவர்களுக்கு 
வெகுஜன ஊடகம் தொடர்பான தெளிவு மற்றும் ஊடக நெறிமுறைகள் தொடர்பாக உரிய கல்வியை வழங்க வேண்டும் என்றும் இதற்காக மாவட்ட மட்டத்தில் ஊடக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். 
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கை கேந்திரமாகக் கொண்டு யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக கல்வி அறிவை மேம்படுத்துவதை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
மேலும் அரசாங்க தகவல் திணைக்களம் குறுஞ்செய்தி சேவையைப் போன்று சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கு மேலதிகமாக ஏனைய ஊடக நிறுவனங்களை தொடர்புபடுத்தி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அ.த.தி.
நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்... நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை...

October 14, 2020

 


அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் மத்துகம - கொழும்பு பஸ் வண்டியின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் அதன் உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் ஜி. டி. லயனல் தெரிவித்துள்ளார். 
இவர்கள் மூவரும் தாமாகவே முன்வந்து நாகொட வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
அதேபோன்று இந்த பஸ் வண்டியில் பயணித்த 
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் தாதி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அதேபோன்று நடத்துனரின் மனைவி கடமை புரியும் மத்துகமையில் அமைந்துள்ள தனியார் வங்கி தனது சுய விருப்பில் இன்று (14) கொடுக்கல்-வாங்கல்களுக்காக மூடப்பட்டது.
அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை... அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை:

October 14, 2020

Online முறையில் பொது மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை எடுத்துள்ளார். 
தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தனது அமைச்சுக்கு வருவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 
திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொது மக்கள் சந்திப்புக்காக பொதுமக்கள் தமது பிரச்சினையை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி ஆகும் பொழுது குறித்த ஒன் லைன் முறையில் தெரிவிக்க வேண்டும். 
இதற்காக கீழே உள்ள லிங்கை பயன்படுத்தலாம்.
Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை: Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை: Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு

October 14, 2020

2019ம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை நேற்று (13) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது. 
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்னவினால் குறித்த காசோலை பிரதமரிடம் வழங்கிவைக்கப்பட்டது. 
2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5,993 பிள்ளைகளுக்காக முதல் கட்டமாக புலமைப்பரிசில் வழங்குவதற்காக இந்நிதி மக்கள் வங்கிக்கு வழங்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொழில் அமைச்சராக விளங்கிய 1994ஆம் ஆண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 
அதற்கேற்ப 1994ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டுவரும் வேலைத்திட்டத்திற்கு அமைய ஆண்டுதோறும் 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகள் 9 ஆயிரம் பேருக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
 இந்த வேலைத்திட்டமானது மக்கள் வங்கியினூடாக 
செயற்படுத்தப்படுவதுடன், மக்கள் வங்கியினால் புலமைப்பரில் பெறும் பிள்ளைகளுக்காக குறித்த நிதி சிசு உதான சேமிப்பு கணக்கில் வைப்பிலிடப்படும். புலமைப்பரிசில் பெறும் அனைத்து பிள்ளைகளுக்கும் கணக்கு திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் வங்கியினால் மலலசேகர சிங்கள ஃ ஆங்கில அகராதியொன்று பரிசளிக்கப்படுவதுடன், சிசு உதான கணக்கிற்கு வழங்கப்படும் சாதாரண வட்டி விகிதத்தினை விட அதிக சதவீதம் இந்த கணக்குகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படும். 
இந்த நிகழ்வில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்ன மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ உள்ளிட்ட ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் மற்றும் மக்கள் வங்கியின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையறையின்றி ஒத்திவைப்பு...

October 14, 2020

அண்மையில் நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான பத்திரிகை செய்தியை இங்கு தருகிறோம்.

-காலைக்கதிர் 14-10-2020.
பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையறையின்றி ஒத்திவைப்பு... பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையறையின்றி ஒத்திவைப்பு... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5
Powered by Blogger.