Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist

October 18, 2020

Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist. 
Wijayakumarathunga Memorial Hospital. 
 See the details below.
Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்...

October 18, 2020

13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 
கடந்த 12 ஆம் திகதி 
இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். 
குறித்த பெண் அப்பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் அண்மையில் கொண்டுள்ள நிலையில் அங்கிருந்த 4 பேருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால் இவர் மீதும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்... 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்:

October 18, 2020

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொவிட் கொத்தனி உருவாகியமை தொடர்பில் ஆராய்வதற்கு அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் இதற்கு பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதிப்பொலிஸ் மா அதிபர் சட்டத்ரணி அஜித் ரோஹண தெரிவித்தார். 
சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்: மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்: Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-10-2020 நடந்தவை...

October 18, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 12ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் கொரோனா தொற்றாள் பாதிக்கப்பட்டது எவ்வாறு எனப்தனை இனம் காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய வெளிநாட்டவர் ஒருவரால் குறித்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி நாடு முழுவதும் பரவி வருவதாகவும் அத்துடன் அரசாங்கத்தின் அலட்சியமே கொரொனா  தொற்று ஏற்படக் காரணம் எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு. 
  • கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திற்கு அருகாமையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு. 

  • கொவிட் 19 பரவல் நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன திணைக்களம் மீண்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு. 
  • கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை எந்தவொரு மாற்றமும் இன்றி நடத்திச்செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு. 
  • கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. அத்துடன் நாளொன்றில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமையான தினசரி நடவடிக்கைகளை நிறைவேற்ற வருகை தரும் பொது மக்களுக்கு புதிய வழிகாட்டி விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்டு பிராந்திய அலுவலகங்களினூடாக நிறைவேற்றிக்கொள்ளுமாறு திணைக்களத்தின் கட்டுபாட்டு பிரிவு கேட்டுக்கொண்டது. 
  • இலங்கை முழுவதும் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும், மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பின்பற்ற வேண்டும் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 
  • கொழும்பு மாநகர சபையின் சகல உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம். நகரசபை அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவிப்பு. 
  • பொலன்னறுவை, திம்புலாகல, போகஸ்வெவ கிராமத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் கடந்த 11ம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தொண்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
  • கேகாலை மாவட்டத்தின் ஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரம்புக்கனை பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் 110 பேருக்கு கொவிட் 19 உறுதியாகியுள்ளது. இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,899 ஆக அதிகரிப்பு. இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 180 வரையில் அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies in Sri Lanka Government Universities

October 17, 2020

Vacancies in Sri Lanka Government Universities . 
See the details below.







Vacancies in Sri Lanka Government Universities Vacancies in Sri Lanka Government Universities Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

Vacancies in NAITA (National Apprentice & Industrial Training Authority)

October 17, 2020

Vacancies in NAITA (National Apprentice & Industrial Training Authority) 
Age limit: 22- 45. 
Closing date: 26-10-2020. 
See the details below



Vacancies in NAITA (National Apprentice & Industrial Training Authority) Vacancies in NAITA (National Apprentice & Industrial Training Authority) Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI)

October 17, 2020

Vacancies in the Tea Research Institute of Sri Lanka (TRI) 
Closing date: 26-10-2020. 
See details below.



Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI) Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI) Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

23 வரை மூடப்படும் திணைக்களம்...

October 17, 2020

கொரோனா பரவல் காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் ஒக்டோபர்  23 ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களுக்காக 0115226126/ 011 5226115 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
23 வரை மூடப்படும் திணைக்களம்... 23 வரை மூடப்படும் திணைக்களம்... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

ஸஹ்ரான் பயன்படுத்திய வாகனம்: மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்பு:

October 17, 2020

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள முகமது ஹனீபா முகமது அக்ரம் பயன்படுத்தி வந்த கார் ஒன்றை காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (16) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மீட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. கடந்தவரும் ஏப்ரல் 25 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்ட முகமது கனிபா முகமது அக்கிரம் மெனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: adaderana.
ஸஹ்ரான் பயன்படுத்திய வாகனம்: மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்பு: ஸஹ்ரான் பயன்படுத்திய வாகனம்: மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்பு: Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

கொரோனாவுக்கு மத்தியில் வழமைக்கு திரும்பும் சேவை...

October 17, 2020

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) முதல் 
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மீண்டும் வழமை போல் இடம்பெறவுள்ளன. 
 கொவிட்-19 வைரசு தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த 07ஆம் திகதி (07.10.2020) முதல் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர மற்றும் கம்பஹாவிலுள்ள திணைக்கள கிளைகளில்; மேற்கொள்ளப்பட்டு வந்த சேவைகள்; தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நேற்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


(அ.த.தி)

கொரோனாவுக்கு மத்தியில் வழமைக்கு திரும்பும் சேவை... கொரோனாவுக்கு மத்தியில்  வழமைக்கு திரும்பும் சேவை... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

மேலும் 06 கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு...

October 17, 2020

கேகாலை மாவட்டத்தின் ஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
ரம்புக்கனை பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் 06 கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு... மேலும் 06 கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

கொழும்பு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு....

October 17, 2020

கொழும்பு மாநகர சபையின் சேவைகளை பெறுவதற்காக கையளிக்கப்படவேண்டிய அனைத்து விண்ணப்பங்களும் கொழும்பு மாநாகர சபையின் பிரதான கட்டடத்துக்கு அருகாமையில் உள்ள 'சப்பிரி' பியஷ கரும பீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மாநகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக விடேச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மாநகர சபை சேவைகளுக்காக பிரதான அலுவலகத்திற்குள் 
பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 ஓக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த சேவை தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறும். மதிப்பிட்டு வரியை கொழும்பு நகரத்தின் வங்கிக்கிளை ஒன்றின் ஊடாக மேற்கொள்ள முடியும். வரி மற்றும் வாடகை ஆகியவற்றை இணையவழி ஊடாக மேற்கொள்ள முடியும். இணையத்தளத்தின் ஊடாக செலுத்தும் பொழுது ஏதேனும் பிச்சினைகள் எதிர்நோக்கப்படுமாயின் 011 567636 / 077399825 / 0718234717 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என்று கொழும்பு மாநாகர சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு.... கொழும்பு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு.... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா?

October 16, 2020

கடந்த 13 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் இன்று (16) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கை பின்வருமாறு: 
 2020 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று காலை 9.30 க்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதாரப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதன் காரணமாக, அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களின் தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் தற்பொழுது சம்பந்தப்பட்ட சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, தேவையேற்பட்டால், சம்பந்தப்பட்ட சுகாதார ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சுகாதாரப் பிரிவினால் இந்த உடகவியலாளர்களுக்கு விரைவாக அறிவிக்கப்படும். 
இருப்பினும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளர் தொடர்பில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் சுகாதார பரிசோதனையின் பெறுபேறு கிடைக்கும் வரையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களும் வெளி சமூக தொடர்புகளை தவித்துக்கொள்ளல் வேண்டும். பாதுகாப்பாக வீடுகளில்; இருக்குமாறு ஆலோசனை வழங்கி சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக உங்களது நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஊடகயிலாளர்களுக்கு தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். 
 இதற்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா? ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5
Powered by Blogger.