Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management

October 22, 2020

Courses from Sri Lanka Institute of Tourism & Hotel Management. 
Closing date: 29-10-2020. 
See the details below.


Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

General Convocation Postponed

October 22, 2020

20th general convocation of Rajarata university postponed. 
See the details below.
Source: Sunday Observer (18.10.2020)

General Convocation Postponed General Convocation Postponed Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

Courses: Sri Lanka Government Universities.

October 22, 2020

Courses from Sri Lanka Government Universities. 
Source: Sunday observer (18.10.2020) 
See the details below.




Courses: Sri Lanka Government Universities. Courses: Sri Lanka Government Universities. Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

Master of Energy Management: The Open University of Sri Lanka

October 22, 2020

Master of Energy Management at the Open University of Sri Lanka. 
Closing date for online application: 17-11-2020. 
See the details below.


Master of Energy Management: The Open University of Sri Lanka Master of Energy Management: The Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை...

October 22, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 16ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் முன்னெடுப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை திறப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரிப்பு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 

  • யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஷன் தெரிவிப்பு. 
  • கொழும்பு - கப்பல் தளத்தில் கடமையாற்றும் மற்றுமொரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி. அந்த வகையில் இதுவரையில் கொழும்பு - கப்பல் தளத்தில் மாத்திரம் 21 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது குழந்தை மற்றும் தாய் தந்தை ஆகியோருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிப்பு. 
  • கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா. அதன்படி, கட்டுநாயக்க முதலீட்டு வர்த்தக வலயத்தில் இதுவரையில் மொத்தமாக 268 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • உடனடியாக அமுலாகும் வகையில் குளியாபிட்டி, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய, நாரம்மல ஆகிய காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டது. 
  • கொழும்பு - கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
  • அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி சுகாதார விதிமுறைகள் பாராளுமன்றத்தில் பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றம் பொது இடம் அல்ல என்றார். இதன் பின்னர் இருவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. 
  • தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 120 பேர் மினுவாங்கொடை பிரேண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர்

October 21, 2020

 


கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி Covid அறிகுறிகள் காரணமாக பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை

October 21, 2020

ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டையை பெற்று கொள்வதற்காக நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் தங்களுடைய விண்ணப்பங்களை கிராம சேவகர்களிடம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள அடையாள அட்டை பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர  அறிக்கை Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக...

October 21, 2020
P

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 
இது தொடர்பான பயிற்சி செயலமர்வு கடந்த 17ஆம் திகதி 20 ம் திகதிகளில் நடைபெற்றது. நாளை ஆரம்பமாகும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 
27 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாபிட்டிய கல்வி வலயம் தவிர்ந்த நாட்டின் 39 நிலையங்களில் 391 மதிப்பீட்டு அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. 
 மேலதிக விபரங்களுக்கு 0112785231 / 0112785216 / 0112784037 என்ற இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்...

October 20, 2020

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தார். 
இதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் 'பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான கோரிக்கை சட்ட ரீதியில் முன்வைக்கப்படுமாயின் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்' என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 
நேற்று காலை தெஹிவலையில் வைத்து குற்ற புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பா.உ. ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 
27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதன்போது ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்தி வைத்தது. 
2019 ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்காளர்களை வாக்களிப்பதற்காக அரச பேருந்துகளில் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்... ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

ரயில் சேவைகளில் மாற்றம்...

October 20, 2020

தற்போதைய கொரோனா நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று (20) தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இதற்கமைவாக கொழும்பு கோட்டை - கண்டிக்கிடையிலும், 
மருதானை மற்றும் வெளியத்தைக்கு இடையிலும் சேவையில் ஈடுப்படும் நகரங்களுக்கிடையிலான ரயில் இன்று தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் சேவையில் ஈடுப்படாது. 
இதேபோன்று கல்கிசை மற்றும் காங்கேசன்துறைக்கிடையில் சேவையில் ஈடுப்படும் நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை தினத்திலும் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வணிக பிரிவு முகாமையாளர் பண்டார சந்திரசேன தெரிவித்தார். 
 கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரையில் சேவையில் ஈடுபடும் கடுகதி ரயில் சேவை தினத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கொழும்பு கோட்டை மற்றும் பொலன்னறுவைக்கிடையில் சேவையில் ஈடுப்பட்ட புலத்திசி என்ற நகரங்களுக்கிடையிலான ரயில் அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அவுகண ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுப்படும்.
அ.த.தி.
ரயில் சேவைகளில் மாற்றம்... ரயில் சேவைகளில் மாற்றம்... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்?

October 20, 2020

இணைய வழியில் (Online) பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் மேற்கொண்டு கற்கைநெறிகளின் தரத்தை பாதுகாக்கும் வகையில் இந் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அ.த.தி.
Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்? Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்? Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை...

October 20, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 15ம் நாள் அதாவது திங்கட்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1988 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வாரம் நாட்டில் தீர்மானமிக்க வாரமாக மாறவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிப்பு. 

  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (20) காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • புறக்கோட்டையில் நான்காம் குறுக்கு தெருவில் மொத்த வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி என அறிவிப்பு. 
  • ஒவ்வொரு வாரமும் செய்வாய்க்கிழமைகளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடல் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு நாளை (20) இணைய (Online) வழியில் அதாவது Zoom முறையில் நடத்துதப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது. 
  • கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதனால் இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சியின் பிரதான ஒருகிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு. சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். 
  • உயர்தரப் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக அந்த நிலையங்களுக்கு ரூபா 15 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு. 
  • யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை சுமூகமாக காணப்படுகின்றது எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்..

October 20, 2020

எதிர்வரும் 23ஆம் திகதி மலையக உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் 
மத்திய மாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 
நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நிரந்தர நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கணபதி கனகராஜ் ஆகியோர் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அ.த.தி.
நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்.. நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்.. Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5
Powered by Blogger.