முஷாரஃப் MP கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாரா?

October 24, 2020


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இருந்து முஷரப் (பா.உ) அவர்கள் வெளியேற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் S.M.M. மரிக்கார் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். 

இதேவேளை கூட்டத்தில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களைத் தொடர்ந்து தான் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக பா.உ. முஷர்ரப் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




முஷாரஃப் MP கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாரா? முஷாரஃப் MP கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாரா? Reviewed by irumbuthirai on October 24, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை...

October 24, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 18ம் நாள் அதாவது வியாழக்கிழமை (22) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சம் அதிகரித்து வருவதால் கொழும்பு-மெனிங் சந்தை நடவடிக்கைகளை இன்று (22) காலை 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • கஹவத்தை-மாதம்பே பகுதியில் உள்ள மீன்சந்தை ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டது. 
  • உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 26ம் திகதி காலை 5 மணி வரை மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல் வெல்லம்பிட்டி மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பொலிஸ் வலயங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக COVID 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவிப்பு. 

  • ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள், கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு பணிக்குழாமினருக்கு போக்குவரத்துக்கான வாய்ப்பு காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • வெவ்வேறு நாடுகளுக்கிடையிலான துதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வெளிவிவகார அமைச்சு தீர்மானத்துள்ளதாக தெரிவிப்பு. 
  • பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் 4 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டனர். 
  • இலங்கை சுங்கத்திணைக்களத்தில் கடமையாற்றும் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இதனால் கொழும்பு துறைமுகத்தின் பொருள் கொள்வனவு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கபிரிவின் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரட்ன இதனை தெரிவிப்பு. 
  • கொட்டாஞ்சேனை காவற்துறை அதிகார பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் அமுல். 
  • 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த அரச சேவையின் நாடாளாவிய சேவைக்கான செயல்திறன் தடைதாண்டல் பரீட்சை covid-19 வைரஸ் தொற்று பரவும் தொற்று நிலைமையினால் மறு அறிவித்தல் வரையில் ஒத்திவைப்பு. 
  • பேலியகொடை பொது மீன் சந்தைக்குச் சென்றவர்கள் உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளை சந்தித்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு. 
  • இலங்கையில் 14வது கொரோனா மரணம் பதிவானது. 50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
  • கேகாலை மாவட்டத்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலை வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கேகாலை வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கு கடந்த தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் ஒரு வைத்தியரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரின் மகனுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது. குறித்த வைத்தியரின் மகளுக்கு மற்றும் பணிப்பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
  • காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே இதன்படி நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கால பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்கள், திகதி அடிப்படையில் மேலும் 3 மாத காலங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக கொட்டாவை நகர சபைக்குட்பட்ட மீன் சந்தையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
  • வழக்கு நிறைவடைந்த பின்னர் பானந்துறை நீதவான் நீதிமன்றில் ஒரே போத்தலில் பாணந்துறை - தெற்கு காவற்துறை சார்ஜன்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியின் அதிகாரி ஆகியோர் நீர் அருந்தியுள்ளனர். இந்தநிலையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவதற்கு பாணந்துறை நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார். 
  • இன்றைய தினம் 309 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 24, 2020 Rating: 5

19-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 23, 2020


19-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 

இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.  இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet decision

19-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 19-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 23, 2020 Rating: 5

இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்..

October 23, 2020

ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக ஆசிரிய உதவியாளர்கள் சிலருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (23) கண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்றது. 
419 ஆசிரியர்களுக்கு 
நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்றன. கொரோன வைரஸ் தாக்கத்தின் காரணாமாக ஒன்றுகூடல்களை தவிர்க்கும் அரசாங்கத்தின் கட்டளைக்குகேற்ப்ப முதற்கட்டமாக இவ்வாறு சிலருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 
ஏனையோருக்கான கடிதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.. இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.. Reviewed by irumbuthirai on October 23, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-10-2020 நடந்தவை...

October 23, 2020


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 17ம் நாள் அதாவது புதன்கிழமை (21) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 

  • கோட்டை காவல்நிலையத்தின் இரண்டாம் மாடியில் உள்ள மேல் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் (20) கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் இன்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டது. 
  • புலமைப் பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கம்பஹா மாவட்டத்திலும், குளியாப்பிட்டி கல்வி வலையத்திலும், விடைத்தாள் திருத்தப்பணிகள் இடம்பெறாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு. 

  • பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை தொடர்ந்து அந்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. 
  • இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல். 
  • மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொவிட் 19 தொற்றுறுதி. இதன்காரணமாக அந்த வர்த்தக நிலையம் உள்ளிட்ட மேலும் ஒரு வர்த்தக நிலையமும் மூடல். 
  • எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் கொவிட் 19 சவால்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை மேற்கொள்ள இன்று பாராளுமன்றத்தில் தீர்மானம். 
  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் அதற்குரிய ஆவணங்களை ஊரடங்கிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவிப்பு. 
  • அகலவத்தைய பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை, தாபிலிகொட, கெக்குலந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவின் பெல்லன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • நாட்டில் இன்றைய தினம் 167 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,978 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 23, 2020 Rating: 5

Vacancies: ICTA (Information Communication Technology Agency of Sri Lanka)

October 22, 2020


Vacancies in the ICTA (Information Communication Technology Agency of Sri Lanka) 
Closing date: 14 days from 18-10-2020. 

See the details below.

Source: Sunday Observer (18.10.2020)


Vacancies: ICTA (Information Communication Technology Agency of Sri Lanka) Vacancies: ICTA (Information Communication Technology Agency of Sri Lanka) Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அவசர இலக்கங்கள்..

October 22, 2020


பொலிஸ் தலைமையகம் கடந்த 19-10-2020 வெளியிட்டுள்ள அவசர இலக்கங்களை இங்கு தருகிறோம். 

இதில் 119 ற்கு மேலதிகமாக தேவைப்படும் பல்வேறு துரித இலக்கங்களும் அதற்கான விடயங்களும் தரப்பட்டுள்ளன.






பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அவசர இலக்கங்கள்.. பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அவசர இலக்கங்கள்.. Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management

October 22, 2020

Courses from Sri Lanka Institute of Tourism & Hotel Management. 
Closing date: 29-10-2020. 
See the details below.


Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

General Convocation Postponed

October 22, 2020

20th general convocation of Rajarata university postponed. 
See the details below.
Source: Sunday Observer (18.10.2020)

General Convocation Postponed General Convocation Postponed Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

Courses: Sri Lanka Government Universities.

October 22, 2020

Courses from Sri Lanka Government Universities. 
Source: Sunday observer (18.10.2020) 
See the details below.




Courses: Sri Lanka Government Universities. Courses: Sri Lanka Government Universities. Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

Master of Energy Management: The Open University of Sri Lanka

October 22, 2020

Master of Energy Management at the Open University of Sri Lanka. 
Closing date for online application: 17-11-2020. 
See the details below.


Master of Energy Management: The Open University of Sri Lanka Master of Energy Management: The Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை...

October 22, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 16ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் முன்னெடுப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை திறப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரிப்பு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 

  • யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஷன் தெரிவிப்பு. 
  • கொழும்பு - கப்பல் தளத்தில் கடமையாற்றும் மற்றுமொரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி. அந்த வகையில் இதுவரையில் கொழும்பு - கப்பல் தளத்தில் மாத்திரம் 21 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது குழந்தை மற்றும் தாய் தந்தை ஆகியோருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிப்பு. 
  • கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா. அதன்படி, கட்டுநாயக்க முதலீட்டு வர்த்தக வலயத்தில் இதுவரையில் மொத்தமாக 268 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • உடனடியாக அமுலாகும் வகையில் குளியாபிட்டி, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய, நாரம்மல ஆகிய காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டது. 
  • கொழும்பு - கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
  • அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி சுகாதார விதிமுறைகள் பாராளுமன்றத்தில் பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றம் பொது இடம் அல்ல என்றார். இதன் பின்னர் இருவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. 
  • தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 120 பேர் மினுவாங்கொடை பிரேண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர்

October 21, 2020

 


கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி Covid அறிகுறிகள் காரணமாக பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5
Powered by Blogger.