பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு
irumbuthirai
November 16, 2020
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இன்று (16) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பின்வருமாறு தெரிவித்தார்.
அதாவது, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார துறையை சார்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.
3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. ஆனால் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு பின்னர் தாமதித்து பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதாவது நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிப்பதாக நாம் அறிவித்தோம்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் ஆகியோரின் ஆலோசனைகளும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களது கருத்துக்களும் இது தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படும். இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு
Reviewed by irumbuthirai
on
November 16, 2020
Rating: