கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்...

November 26, 2020

ஒருகொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் அண்மையில் சென்று வந்த வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கடந்த செவ்வாய் கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் இம்மாணவர் நேற்று (25) பாடசாலைக்குச் சென்றுள்ளார். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார். 
இந்நிலையில் இன்று குறித்த பாடசாலை வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்... கொரோனாவுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்... Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 26, 2020

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 20-11-2020 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.

20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 20-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 26, 2020

13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 13-11-2020 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 13-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

November 26, 2020

06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 06-11-2020 (In three languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 06-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

November 26, 2020

29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 29-10-2020 (In three languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 29-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு

November 26, 2020

தொற்றா நோய் கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற விஷேட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
அதாவது மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்க்கொள்வோருக்கு வசதியாக அரச ஒசுசல மருந்தகங்கள் 24 மணித்தியாலயமும்; செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். 
பொது மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த சூழ்நிலையில் நாம் இணையத்தளம், தொலைபேசி மூலமாக இலக்கங்களை வெளியிட்டு வருகின்றோம். இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மருந்து பட்டியலை WhatsApp, Viber மூலமாக அனுப்பி வைத்தால் நாம் தேவையான மருந்துகளை ஒசுசல மருந்தகத்தில் தயார் செய்து உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். 
கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் தற்போது சேவைகளை முன்னெடுத்துள்ளோம். இருப்பினும், இதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களை மீண்டும் எதிர்வரும் சில தினங்களில் நாம் அறிவிப்போம். எமது மருந்தக கூட்டுத்தாபன இணையத்தளத்தில் தொலைபேசி இலக்கங்கள் உண்டு. 
 நீங்கள் தொற்றாநோய்க்கு உள்ளானவர்கள் என்றால் அதற்கான மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டாம். கொரோனா தொற்றினால் உங்களுக்கு ஆபத்து ஏற்படுவதையும் பார்க்க தொற்றா நோய்க்கு மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு கிளினிக் மருந்துகளை பெற 'ஒசுசல'வில் விஷேட ஏற்பாடு  Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை...

November 25, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 51ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை காணப்பட்ட போதிலும் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,688 வழக்குகள் சட்டமா அதிபரால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 4,019 வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயயப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்தார். 
  • கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த நபருக்கு கொரோனா தொற்று காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 
  • நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) வரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இன்று (24) தெரிவிப்பு.
  • இதுவரை காலமும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே அமுலானது. இது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது. வைரஸ் தொற்று பரவும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் நாட்டு நலன் கருதி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் என டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். 
  • கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரதேசங்களிலிருந்து சென்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இரண்டு இடங்களில் பதிவாகியுள்ளன. ஒரு இடம் மஸ்கெலியா. கடந்த தினத்தில் தமிழர்களின் பண்டிகை ஒன்று இருந்தது. நாம் அறிவித்திருந்தோம் மலையக பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று. எனினும் நபர் ஒருவர் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அதேபோல் நுவரேலியா பிரதேசத்திற்கும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்த நபர் ஒருவர் சென்றிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் மலையகத்திற்கு நோய் பரவியுள்ளது. நாம் இந்த இரண்டு விடயங்களையும் புலனாய்வு பிரிவு ஊடாக விசாரணை செய்தோம். ஒரு சில பிரதேசங்களில் நோயாளர்கள் பதிவாகும் அதேவேளை ஏனைய பிரதேசங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது. அதனடிப்படையிலேயே தனிமை படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • நேற்று பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வரவு திருப்திகரமான மட்டங்களில் இருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
  • அம்பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டிலுள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலைகளில் கல்வி பயிலும் அம்பலாங்கொடை-திலகபுர பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயும் தந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த குடும்பத்தில் உள்ள இரண்டு மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுடன் நெருங்கி பழகிய மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போது தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 
  • அக்குரணையில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு குறித்த சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிற்கு இன்று முதல் நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
  • பேருவளை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • இலங்கையில் இதுவரை கர்ப்பிணித்தாய்மார்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 459 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 25, 2020 Rating: 5

உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்...

November 25, 2020

அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
குறித்த சருகுமானை பிடித்த பிரதேசவாசிகள் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் குறித்த சருகுமானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்... உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்... Reviewed by irumbuthirai on November 25, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை...

November 24, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 50ம் நாள் அதாவது திங்கட்கிழமை (23) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த நபர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச் செல்ல முற்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான 22 வயது கொவிட் தொற்றாளர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • இன்று 5 வீதமான மாணவர் வருகையே பதிவானதாக ஆசியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. 
  • 3ம் தவனை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணத்திலேயே இன்று அதிகூடிய அதாவது 55% மாணவர் வரவு பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார். 
  • வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் எல்பிட்டி-நவதகல பிரதேசத்தில் வசித்து வரும் நபர் தமது வீட்டுக்கு திரும்பியிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • சுகாதார வழிமுறைகளுக்கு அமைய LPL மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடர்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
  • பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு இன்று முதல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பதிவுசெய்தல் இணைய நிகழ்நிலை கட்டமைப்பு ஊடாக மட்டுமே இடம்பெறும். 
  • அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • தரம் 6 - 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் சில பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையும் திறக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை. 
  • மேலும் 03 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 60 மற்றும் 86 வயது பெண்கள். 60 வயது ஆண். இத்துடன் மொத்த மரணம் 90 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 24, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை...

November 23, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 49ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பொரல்ல, கோட்டை, கொம்பனி வீதி மற்றும் வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவுளும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஜா-எல மற்றும் கடவத்தை பொலிஸ் பிரிவுகளும் நாளை (23) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்படுவதாக ராணுவ தளபதி அறிவிப்பு. 
  • குருணாகலை பிரதேச தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் குருணாகலை பிரதான தபால் அலுவலகத்தின் அலுவலக ஊழியர்கள் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குருணாகலை மாவட்டத்தின் தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 
  • பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிபடுத்துவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 
  • பச்சையாக மீனை உண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சியை வரவேற்கும் நிகழ்வொன்று தங்காலை மீன்பிடி துறைமுக மீனவர்களினால் இன்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சி பச்சையாக மீனை உண்ட சம்பவத்தை தொடர்ந்து மீன் வியாபாரம் இத்தினங்களில் வெற்றிகரமாக இடம்பெறுவதாக தெரிவித்தே அவருக்கு இந்த வரவேற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
  • நாளை முதல் ஒரு வாரக்காலத்திற்கு பாடசாலைகளை திறந்து குறித்த செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஏதாவது ஒரு வகையில் பாடசாலை கொவிட் கொத்தணி ஒன்று உருவானால் அரசாங்கத்தின் சார்பாக தான் அந்த பொறுப்பை ஏற்பதாகவும் தெரிவித்தார். 
  • சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடித்து நாளை தொடக்கம் அலுவலக ரயில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் எனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 
  • நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
  • நாளை முதல் ஆரம்பமாவுள்ள மூன்றாம் தவணைக்கு பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து முறைகளை பொலிஸ் ஒழுங்குபடுத்த உள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
  • பாடசாலைகளில் கொரோனா அச்சம் அதிகரிக்காமல் இருக்க சுகாதார வழிமுறைகள் அடங்கிய கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு. 
  • கொட்டகலை பகுதியில் இரண்டு வயதுடைய குழந்தைக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 4 கொரோனா மரணம் அறிவிப்பு. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழப்பு. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 400 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

இன்று (23) திறக்கப்படாத பாடசாலைகள்...

November 23, 2020

தரம் 6 - 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டன. 
ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் சில பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையும் திறக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை. 
இதேவேளை மத்திய மாகாண ஆளுனர் லலித் யு.கமகே தெரிவிக்கையில், 
ஹட்டன் வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளும் கண்டி–அக்குறனை மற்றும் மஹிய்யாவ பகுதிகளை சேர்ந்த பாடசாலைகள் சிலவற்றின் கற்றல் செயற்பாடுகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் சிலர் அடையாளங் காணப்பட்டதையடுத்து கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 
இதேவேளை உரிய சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர்கள் மேற்கொள்வார்கள் என மத்திய மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (23) திறக்கப்படாத பாடசாலைகள்... இன்று (23) திறக்கப்படாத பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை...

November 23, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 48ம் நாள் அதாவது சனிக்கிழமை (21) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற பெண் எஹலியகொட, சிதுரங்கல காட்டுப்பகுதியில் வைத்து பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (20) முதல் 14 நாட்கள் மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
  • இதுவரையில் சிறைச்சாலைகளில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் 578 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், ஏனைய 39 பேர் சிறைச்சாலை ஊழியர்கள் என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநயக்க தெரிவித்துள்ளார். 
  • சிறைச்சாலைகளில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • முறையான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை கேட்டுள்ளன. 
  • நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 
  • ஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இதில் பாரிய ஆபத்து இருப்பதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார். 
  • கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சிலாபம் பொது மீன் சந்தை ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்தார்.
  • கொரோனாவினால் மேலும் 9 பேர் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இத்துடன் மொத்த மரணம் 83 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 491 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews


திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

நாளை (23) பாடசாலை ஆரம்பிக்கப்படாத பகுதிகள்...

November 22, 2020

நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் வலையத்திற்குள் அமைந்துள்ள பாடசாலைகள், கிழக்கு மாகாண 5 பாடசாலைகள், வடமேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில் சில பாடசாலைகள், சப்ரகமுவ மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சில பாடசாலைகள் தவிர்ந்த சுமார் 5,100 பாடசாலைகளில் நாளை (23 ஆம் திகதி) முதல் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 15 / 2020 என்ற சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டி ஆலோசனைகளை உள்ளடக்கிய வகையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
விசேடமாக இதில் குறிப்பிடப்பட்ட வகையில் சுகாதார மேம்பாட்டு குழுவை முன்னிலைப்படுத்தி மிகவும் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு பாடசாலைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். 
நாட்டில் உள்ள 91% ஆன பாடசாலைகள் 1000 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலையாகும். சமூக இடைவெளி உள்ளிட்ட ஏனைய சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து பாடசாலைகளை முன்னெடுப்பதில் நடைமுறையில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாளை (23) பாடசாலை ஆரம்பிக்கப்படாத பகுதிகள்... நாளை (23) பாடசாலை ஆரம்பிக்கப்படாத பகுதிகள்... Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.