PCR செய்தவர்களை இனம் காண புதிய App

December 07, 2020

PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்காக உட்படுத்தப்படுபவர்களை பதிவு செய்வதற்காக புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதர சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர் சமன்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 
இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, ஆய்வு கூட கட்டமைப்பு, சுகாதார அமைச்சு மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள தொற்று நோய் விசேட நிபுணர்கள் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியுமாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கையடக்க தொலைபேசி செயலியை அடுத்த வாரம் முதல் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
PCR செய்தவர்களை இனம் காண புதிய App PCR செய்தவர்களை இனம் காண புதிய App Reviewed by irumbuthirai on December 07, 2020 Rating: 5

MBA: Sabaragamuwa University of Sri Lanka.

December 07, 2020

MBA (weekend) in Sabaragamuwa University of Sri Lanka. 
Closing date: 15-01-2021. 
See the details below.


MBA: Sabaragamuwa University of Sri Lanka. MBA: Sabaragamuwa University of Sri Lanka. Reviewed by irumbuthirai on December 07, 2020 Rating: 5

Degree Courses: NSBM Green University (Government University)

December 07, 2020
Degree Courses @ NSBM Green University (Government University) 
 See the details below.


Degree Courses: NSBM Green University (Government University) Degree Courses: NSBM Green University (Government University) Reviewed by irumbuthirai on December 07, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-12-2020 நடந்தவை...

December 06, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 62ம் நாள் அதாவது சனிக்கிழமை (05) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • இவ்வருடம் வெளியான 5ம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை 2021 ஆம் ஆண்டு 6ம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபரிம் கையளிக்க வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • சகல சிறைச்சாலைகளிலும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
  • ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தின் மேல் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேற முடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
  • Covid-19 தொற்று பரவல் தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலேயே இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளரான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 
  • நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 30 வீதமான மக்கள், எந்தவித நோய் அறிகுறியும் இன்றி கொரோனா தொற்றுறுடன் இருக்கக் கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.. 
  • காலி, பத்தேகம கிறிஸ்தவ மகளீர் வித்தியாலயத்தில் தரம் 12 மாணவி ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதன் காரணமாக குறித்த மாணவியுடன் நெருங்கிப் பழகிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்தேகம பொது சுகாதார பரிசோதகர் கே.பி.நவரத்ன தெரிவித்தார். 
  • சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படாத நபர்கள் வசிக்கும் அடலுகம போன்ற பிரதேசங்களுக்கு தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 
  • சிறைக்கைதிகள் உட்பட மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு. பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய ஆண் ஒருவரும், தெமடகொட பிரசேத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், வெல்லம்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் 53 மற்றும் 66 வயதுடைய சிறைக் கைதிகள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 669 பேருக்கு கொரோனா உறுதியானது. அத்துடன் இலங்கையின் மொத்த தொற்றாளர்கள் 27,228 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 06, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-12-2020 நடந்தவை...

December 05, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 61ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன், கினிகத்தேனை, மஸ்கெலியா பகுதியில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் இனங்காணப்பட்டதன் காரணமாக ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள 02 பாடசாலைககளுக்கு கொரோனா தொற்று பிரதேச மாணவர்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது எனவும் ஏனைய மாணவர்களும் ஆசிரியர்களும் வருகை தருவார்கள் எனவும் ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார். 
  • அட்டுளுகமவில் சுகாதார தரப்பினருக்கு இடையூறை ஏற்படுத்தி எச்சிலை உமிழ்ந்ததாக கூறப்படும் நபரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
  • அடலுகம பிரதேச மக்கள் சுகாதார பிரிவினருக்கு ஆதரவளித்து அவர்களின் பிரதேசங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பல நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
  • கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் மற்றும் அக்குரணை பகுதியில் உள்ள 5 பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். 
  • மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,005 ஆக அதிகரித்துள்ளது. 
  • தம்புள்ள விஷேட பொருளாதார மத்திய நிலையத்தில் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் இனங்காணப்பட்ட 4 ஆவது கொரோனா தொற்றாளர் இவராவார். 
  • விமான நிலையத்தை திறந்து சுற்றலா துறையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து சுகாதார நடைமுறைகளை தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 
  • Covid-19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்பதோடு, முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 
  • அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பினை நல்கினால் கொரோனா பரவலை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கட்டுப்படுத்த முடியும் என தொற்று நோயியல் ஆய்வு பிரிவு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 
  • மேலும் ஒரு கொரோனா மரணம். பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண். (IDH வைத்தியசாலையில் மரணம்) மொத்த மரணம் 130 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 521 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews

ui
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 05, 2020 Rating: 5

புதிய தெரிவுக்குழுவிற்கு அனுமதி வழங்கிய நாமல்...

December 05, 2020

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
குழு விபரம்: 
குழுவின் தலைவராக அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக பிரமோத்ய விக்கிரமசிங்க, சமிந்த மெந்திஸ், எம்.எ.டயில்யு.ஆர் மதுரசிங்க, டி.நில்மினி குணரத்ன, ஹேமந்த தேவப்பிரிய மற்றும் எஸ்.எச்.யு கர்னேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
புதிய தெரிவுக்குழுவிற்கு அனுமதி வழங்கிய நாமல்... புதிய தெரிவுக்குழுவிற்கு அனுமதி வழங்கிய நாமல்... Reviewed by irumbuthirai on December 05, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 03-12-2020 நடந்தவை...

December 04, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 60ம் நாள் அதாவது வியாழக்கிழமை (03) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • Covid-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்ட கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
  • றாகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அங்கிருந்து நேற்றிரவு தப்பி சென்ற மஹர சிறைக் கைதி ஒருகொடவத்தை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 
  • நாணயத்தாள்களை வெப்பமான பகுதியில் வைத்திருப்பதன் மூலம் கொரோனா பரவலை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதோடு, சூரிய ஒளி படுகைக்குரிய இடத்தில் நாணயத்தாள்களை வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • வட்டவல சுகாதார பரிசோதகர் பிரிவின் வெலிஒய தடகெலே கீழ் பிரிவு மற்றும் கினிகத்ஹேன சுகாதார பரிசோதகர் பிரிவின் கெனில்வர்த் தோட்டம் பிளக்வோடர் கீழ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு மீள அறிவிக்கும் வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு. கொலன்னாவையைச் சேர்ந்த பெண். கொழும்பு 2,10, 12 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு ஆண்கள். அந்தவகையில் மொத்த மரணங்கள் 129 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 628 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 03-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 03-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 04, 2020 Rating: 5

27-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

December 04, 2020

27-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 27-11-2020 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
27-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 27-11-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on December 04, 2020 Rating: 5

பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா பரவாமல் இருக்க..

December 03, 2020

பணப் பரிமாற்றம் மூலம் கொரோனா பரவாமல் இருக்க சில ஆலோசனைகளை இங்கு தருகிறோம். 
  • நாணயத்தாள்களில் கொரோனா வைரஸ் ஆனது 3 நாட்களுக்கு வாழும். எனவே நாணயத்தாள்களை நிழல் பொருந்திய வெப்பமற்ற இடத்தில் சேமிப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று நீடித்திருக்கும். ஆனால் வெப்பமான பகுதியில் வைத்திருப்பதன் மூலம் அதனை தவிர்த்துக்கொள்ள முடியும். எனவே சூரிய ஒளி படுகைக்குரிய இடத்தில் நாணயத்தாள்களை வைக்க வேண்டும். 
  • குடும்பத்தில் நாணய தாள் பயன்பாட்டினை எவரேனும் ஒருவர் மேற்கொள்ளும் வகையில் திட்டமிட்டுக்கொள்ளுதல் அவசியம். 
  • நாணயத்தாள்களுக்கு தொற்று நீக்கியை பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தினால் நாணயத்தாள்கள் அதன் பாதுகாப்பு தன்மையை இழந்து விடும்.
பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா பரவாமல் இருக்க.. பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா பரவாமல் இருக்க.. Reviewed by irumbuthirai on December 03, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-12-2020 நடந்தவை...

December 03, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 59ம் நாள் அதாவது புதன்கிழமை (02) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக தனியார் பேருந்துகளுக்காக டிசம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கான லொக் சீட் மற்றும் பிரவேச பத்திர கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். 
  • மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 11 கைதிகளில் 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
  • கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்றைய தினம் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் கொரோனா தொற்றுக்குள்ளான 50 தொற்றாளர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
  • கொலன்னாவை தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவர் கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொலன்னாவை தபால் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06 உப தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) *சிலாபம் பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண். 2) *கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 878 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 03, 2020 Rating: 5

சா.தர பரீட்சை மார்ச்சில் நடந்தாலும் ஜூன் மாதத்தில் உயர் தரத்திற்கு சேரலாம்...

December 03, 2020

Covid-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அதேவேளை இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மூன்று மாதங்களில் அதாவது எதிர்வரும் ஜூன் மாதமளவில் வெளியிட எதிர்பார்த்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 
ஜூன் மாதம் முடிவுகள் வந்ததும் ஜூன் மாதத்திலேயே உயர் தரத்திற்கு அவர்கள் இணைந்து கொள்ளலாம் எனவும் மேலும் தெரிவித்தார்.       
    
சா.தர பரீட்சை மார்ச்சில் நடந்தாலும் ஜூன் மாதத்தில் உயர் தரத்திற்கு சேரலாம்... சா.தர பரீட்சை மார்ச்சில் நடந்தாலும் ஜூன் மாதத்தில் உயர் தரத்திற்கு சேரலாம்... Reviewed by irumbuthirai on December 03, 2020 Rating: 5

30-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

December 02, 2020

30-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
30-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 30-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 02, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-12-2020 நடந்தவை...

December 02, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 58ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • திட்டமிட்டபடி உரிய திகதியில் சாதாரணதரப் பரீட்சை நடைபெறாது எனவும் பரீட்சை நடைபெறுவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர் உரிய திகதி அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
  • க.பொ.த. உயர் தர பரீட்சைக்குரிய விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம். எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை. அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்கவதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஆகும் போது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 
  • மஹர சிறைச்சாலை அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை குடும்ப அங்கத்தவர்கள் பொறுப்பேற்காத பட்சத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்கான செலவீனங்களை அரசாங்கமே பொறுப்பேற்பதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
  • மேலும் 04 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. மரணமானவர்கள் கொழும்பு-10,12, கொலன்னாவ மற்றும் ராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இத்துடன் மொத்த மரணங்கள் 122 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 545 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 02, 2020 Rating: 5
Powered by Blogger.