எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்..

December 18, 2020

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அபே ஜனபல பக்ஷய / எங்கள் மக்கள் சக்தி / Our People's Power Party (OPPP) கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. 
 இதற்காக கட்சி சார்பாக நியமிக்கப்படும் உறுப்பினரின் பெயரை அனுப்புவதற்கான இறுதி தினத்திற்கு முந்தைய நாள் இந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனார். 
அதன் பின்னர் தானே அந்த பதவிக்கு பொருத்தமானவர் என அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். 
இதேவேளை ஞானசார தேரர் 
மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் இந்த பதவி தமக்கே வேண்டுமென முயற்சித்தனர். அந்தவகையில் இதற்காக மும்முனை போட்டி நிலவியது. 
தற்போது இவ்வளவு நாட்களாக இழுபறியாக இருந்த இந்த விடயம் முடிவுக்கு வந்துள்ளது. 
குறித்த தேசிய பட்டியல் உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று விசேட வர்த்தமானியையும் வெளியிட்டுள்ளது. இதேவேளை ரத்ன தேரருக்கு எதிர்கட்சியில் ஆசனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்.. எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது..

December 18, 2020

கொரோனா பாதிப்பினால் 46 நாள் பூர்த்தியான குழந்தையொன்று மரணம் அடைந்துள்ளதாக லேடி ரிஜ்வே வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கொரோனாவினால் ஏற்பட்ட 
நிமோனியா காய்ச்சலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது கொரோனாவினால் இடம்பெற்ற இரண்டாவது இளவயது மரணம் ஆகும். ஏற்கனவே இம்மாதம் டிசம்பர் 8ஆம் திகதி 20 நாட்கள் பூர்த்தியான குழந்தை Covid இனால் இதே வைத்தியசாலையில் மரணமாகியது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையும் எரிக்கப்பட்டது. 
அந்தவகையில் இந்த 46 நாட்கள் பூர்த்தியான குழந்தையும் இன்று மாலை பொரளை மயானத்தில் எரிக்கப்பட்டது. (நிவ்ஸ்வய)
மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது.. மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

முல்லேரியா வைத்தியசாலை PCR இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை..

December 18, 2020

முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உள்ள பிசிஆர் இயந்திரத்தில் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் தோன்றி உள்ளதாக அந்த வைத்தியசாலை பணிப்பாளர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார். 
குறித்த இயந்திரத்திற்கு தேவையான இரசாயன பதார்த்தம் ஒன்றின் பற்றாக்குறையே இதற்கு காரணம். சுமார் 2,000 பரிசோதனைகள் செய்ய வேண்டிய நிலையில் 1,000 பரிசோதனைகளே தற்பொழுது இடம்பெறுகின்றன. குறித்த இரசாயன பதார்த்தத்தை அரசிடம் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது உள்ள நிலைமையில் இதை வெளிநாட்டிலிருந்து தருவித்து தருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். 
எவ்வாறாயினும் தற்போது  1000 பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் இது மேலும் குறைவடையலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லேரியா வைத்தியசாலை PCR இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை.. முல்லேரியா வைத்தியசாலை PCR இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு)

December 18, 2020

MCC உடன்படிக்கையில் இலங்கை ஏன் இணைத்துக் கொள்ளப்படவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
அதாவது, இந்த விடயத்தில் இலங்கையின் ஈடுபாடு குறைந்ததன் காரணமாக இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த ரூபா 89 பில்லியன் பெறுமதியான MCC அபிவிருத்தி நிதி உதவித் திட்டத்தை நிறுத்த MCC பணிப்பாளர் சபை இம்மாதம் 15ஆம் திகதி தீர்மானித்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 இருப்பினும் நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு Covid உட்பட ஏனைய விடயங்களிலும் அமெரிக்கா தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்கும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.



MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு) MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

மோட்டார் சைக்கிள் களவு... தங்கச் சங்கிலி அறுப்பு ...

December 18, 2020

மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களின் தங்கச் சங்கிலியை அறுத்துச் செல்லும் சம்பவம் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
இதற்காக உள் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் குறிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக களவெடுத்த மோட்டார் சைக்கிள்களே பயன்படுத்தப்படுகின்றன. 
இதேவேளை மோட்டார் சைக்கிள்கள்சைக்கிள்கள் களவு போனமை தொடர்பான முறைப்பாடுகளும் அண்மையில் அதிகரித்துள்ளன. 3ம் தரப்பு செய்யும் குற்றங்களுக்காக வாகன உரிமையாளர்கள் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் களவு... தங்கச் சங்கிலி அறுப்பு ... மோட்டார் சைக்கிள் களவு... தங்கச் சங்கிலி அறுப்பு ...  Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்ப முடிவு திகதி(விண்ணப்பம் இணைப்பு)

December 17, 2020

தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் தமக்குரிய நியமன பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
இம்மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்றுடன் முடிவடைவதாக இருந்த இந்த விண்ணப்பிக்கும் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. 
இந்த Online முறையிலான விண்ணப்ப நடைமுறையில் பல குளறுபடிகள் இருப்பதாக விண்ணப்பதாரிகளும் ஆசிரியர் சங்கங்களும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
விண்ணப்பப்படிவத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

நீடிக்கப்பட்டது ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்ப முடிவு திகதி(விண்ணப்பம் இணைப்பு) நீடிக்கப்பட்டது ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்ப முடிவு திகதி(விண்ணப்பம் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 17, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது LPL போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்..

December 16, 2020

Lanka Premier League - LPL (லங்கா பிரிமியர் லீக்) இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று (16) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. 
இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோல் கிளடியேடர்ஸ் (Galle Gladiators) அணியை தோற்கடித்து சாம்பியனானது. 
 Jaffna Stallions சார்பாக அதிக பட்சமாக சுஹைப் மலிக் 46 ஓட்டங்களை பெற்றார். 
போட்டியில் வழங்கப்பட்ட விருதுகளும் நபர்களும் பின்வருமாறு: 
Man of the Final – Shoaib Malik (Jaffna Stallions) 
Emerging Player of the Tournament – Dhananjaya Lakshan (Galle Gladiators) 
Fair Play Award – Dambulla Viiking 
Player of the Tournament – Wanindu Hasaranga (Jaffna Stallions)

இலங்கையின் முதலாவது LPL போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்.. இலங்கையின் முதலாவது LPL  போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்.. Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

சாதாரண தர பாடத்திட்டங்கள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளன? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்...

December 16, 2020

இம்முறை சாதாரண தர மாணவர்களின் பாடத்திட்டங்கள் சுமார் 60% முதல் 100% வரை முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட தகவல் சேகரிப்பில் தெரியவந்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் ஆங்கில பாடமே மிகக்குறைவாக முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஆசிரியர் பற்றாக்குறையே. மாறாக Covid-19 நிலைமை அல்ல.  
எதிர்வரும் மார்ச் மாதமே பரீட்சை நடைபெற உள்ளதால் அதற்குள் முடிக்கப்படாத பாடங்களை முடிக்கலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 
கல்வியமைச்சு இதுதொடர்பான தகவல்களை முதலில் Online  மூலமும் அதன் பின்னர் மாகாண கல்விப் பணிப்பாளர் மூலமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண தர பாடத்திட்டங்கள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளன? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்... சாதாரண தர பாடத்திட்டங்கள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளன? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்:

December 16, 2020

தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக இம்முறை Online முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இந்த விண்ணப்ப செயன்முறையில் காணப்படும் பல்வேறு குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது. 
அதாவது, 
  • விண்ணப்பத்தை ஒன்லைன் முறையில் பூர்த்தி செய்யும் போது சரியான தகவல்களை வழங்கினாலும் அவை பிழையான தகவல்கள் என காண்பிப்பதாக கூறப்படுகிறது. 
  • விண்ணப்பதாரியின் மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் இருந்தாலும் வேறு மாகாணங்களையே காண்பிப்பதாக கூறப்படுகிறது. 
  • அதேபோன்று 2017 ல் இருந்த வெற்றிடங்கள் அல்லது வேறு வெற்றிடங்களை காண்பிப்பதாகவும் குற்றச்சாட்டு. 
  • பிரச்சினைகளுக்காக அழைக்குமாறு வழங்கப்பட்டுள்ள இலக்கங்கள் எதற்கும் பதில் அளிக்க உரிய அதிகாரிகள் யாரும் இல்லை. 
  • இந்த சிக்கல்களை பலமுறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 
இந்த ஒன்லைன் முறையிலான விண்ணப்பம் நாளை 17ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தாலும் தற்போது அது இம்மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது. 
குறித்த Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்: கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்: Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்...

December 16, 2020


அடுத்த வருடம் முதல் LPL போட்டிகளில் பல மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அவற்றுள் சில பின்வருமாறு:

  • அடுத்த வருடம் ஜூலை 29 போட்டிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜனவரி முதல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். 
  •  அடுத்த வருடம் புதிய அணியொன்று இணைத்துக் கொள்ளப்படும். அதாவது கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திருகோணமலையிலிருந்து அந்த அணி இடம் பெறும். 
  • அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு அணியிலும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இருவர் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்... திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா..

December 16, 2020

இவ்வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் அரசியல் விஞ்ஞானம் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அதன்பின்னர் மதிப்பீட்டு மண்டபம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு உரிய மதிப்பீட்டு பணிகள் வழமைபோன்று தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த நபரோடு நெருங்கி இருந்த மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா.. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா.. Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்...

December 16, 2020

அடுத்த வருடம் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய சில தீர்மானங்களை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. 
இதுதொடர்பான விரிவான சுற்றுநிறுபம் இவ்வாரம் வெளியாகும் என தெரிய வருகிறது. 
குறித்த தீர்மானங்கள் சில பின்வருமாறு: 
  • உரியமுறையில் தவணைப் பரீட்சை நடக்காவிட்டாலும் சகல மாணவர்களும் வகுப்பேற்றப்படுவர். 
  • இவ்வருடம் முடிக்கப்படாத பாட அலகுகளை முடிப்பதற்கு அடுத்த வருடம் முதல் இரு வாரங்களை பயன்படுத்தலாம். 
  • தரம் 11 மாணவர்கள் மார்ச் வரை பாடசாலைக்கு வரலாம். இவர்களுக்கு இடவசதி போதாமல் இருந்தால் தரம் 8, 9 ஆகிய மாணவர்களை தொகுதி அடிப்படையில் மாத்திரம் பாடசாலைக்கு வரவழைக்கலாம். 
  • தரம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு புதிய மாணவர் அனுமதி பெப்ரவரி வரை பிற்போடப்பட்டுள்ளது. 
  • இவ்வருடம் 3ம் தவணை விடுமுறை டிசம்பர் 23 வழங்கப்பட்டு ஜனவரி 4 மீண்டும் பாடசாலை ஆரம்பமாகும். 
  • அடுத்த வருடம் முதலாம் தவணையில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் இல்லை. கல்விச் சுற்றுலா விளையாட்டுப்போட்டி எதற்கும் அனுமதி இல்லை.
கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்... கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

Vacancy: ICTA (Information Communication Technology Agent)

December 16, 2020

Vacancy: ICTA (Information Communication Technology Agent) 
Closing date: 19-12-2020. 
See the details below.


Vacancy: ICTA (Information Communication Technology Agent) Vacancy: ICTA (Information Communication Technology Agent) Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5
Powered by Blogger.