21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

December 22, 2020

21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

December 22, 2020

அண்மையில் பட்டதாரி நியமனம் பெற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்று (21) கண்டி, மாத்தளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமது தொழில்களை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் முதலே நிரந்தரமாக்கி தரும்படி கோரியே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்: (ஊடக அறிக்கை இணைப்பு)

December 22, 2020

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேச பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் திகதியே ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அன்றைய தினமே தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேவேளை குறித்த பிரதேசங்களில் பாலர் பாடசாலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் (Day Care Centres) மீள ஆரம்பிப்பதற்கான அனுமதி ஜன. 11 முதலே வழங்கப்பட்டுள்ளது. 
 மேலும் மூன்றாம் தவணை விடுமுறை 24ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (நாளை 23 பாடசாலை நடைபெறும்) 
இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை கீழே தருகிறோம்.



வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்: (ஊடக அறிக்கை இணைப்பு) வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்:  (ஊடக அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை..

December 22, 2020

ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தான் தெரிவித்த கருத்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே கூறப்பட்டது. மாறாக இங்குள்ள சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் பாவனையாளர்களை பதிவு செய்வதாக கூறப் படவில்லை. 
இந்த Digital  பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை 
பெரிதும் பாதிப்பதாகவும் நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிப்பதாகவும் அமைகிறது. அதேவேளை இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெருந்தொகையான பணம் வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை.. சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை..

December 22, 2020

கொழும்பு, புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 15 ஆம் திகதி ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை என மின்சார சபை அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தின் பணியாளர்கள் 
உட்பட மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை.. நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

Vacancies: University Grants Commission

December 20, 2020

Vacancies in the University Grants Commission. 
Closing date: 31-12-2020. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.

Vacancies: University Grants Commission Vacancies: University Grants Commission Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5

Vacancies: University of Sri Jayewardanapura

December 20, 2020

Vacancies in the University of Sri Jayewardanapura.
Closing date: 05-01-2021.
See the details below.
Source: 13-01-2020 Sunday Observer.

Vacancies: University of Sri Jayewardanapura Vacancies: University of Sri Jayewardanapura Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5

Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation

December 20, 2020

Vacancies in the Bureau of the Commissioner General of Rehabilitation. 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source : 13-12-2020 Sunday Observer.

Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation Vacancies: Bureau of the Commissioner General of Rehabilitation  Reviewed by irumbuthirai on December 20, 2020 Rating: 5

கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு

December 19, 2020

கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 
இது தொடர்பில் சிங்கப்பூரில் 
நடத்தப்பட்ட ஆய்விலேயே இவ்விடயம் வெளியாகியுள்ளது. 
தாயிடமிருந்து பிள்ளைக்கு வைரஸ் கடத்தப்படுவதற்கு இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளியான ஆய்வு Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை...

December 19, 2020

இலங்கை நீதிமன்றங்களில் சுமார் 8 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவற்றை விசாரணைக்கு எடுக்க மேலும் 15 வருடங்கள் தேவைப்படும் எனவும் நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பீ. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 
எனவே இந்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக 
நீதிமன்றங்கள் மற்றும் நீதவான்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
இதேவேளை சிறைச்சாலை நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை... 8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை...  Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்..

December 19, 2020

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் போலீசாருக்கு எதிராக 2400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இதில் 51 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை போலீசார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பானது என அவர் தெரிவித்தார்.
போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்.. போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்.. Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை:

December 19, 2020

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு Rapid Antigen பரிசோதனை நேற்றைய தினத்தை போன்று இன்றும் நடைபெற்றது. 
கொழும்பு-புத்தளம் வீதியில் கொச்சிக்கடை பிரதேசத்திலும், ஹைலெவல் வீதியில் சாலாவ பிரதேசத்திலும் கொழும்பு - கண்டி வீதியில் நிட்டம்புவ பிரதேசத்திலுமாக மூன்று இடங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
இன்று எழுமாறாக 750 பேரில் செய்த பரிசோதனைகளில் 
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
இதேவேளை நேற்று முதல் நாள் செய்யப்பட்ட 451 பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை: மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்றும் செய்யப்பட்ட பரிசோதனை: Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்...

December 19, 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரிக்கும் தீர்மானத்தை கைவிட வலியுறுத்தும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க விருப்பதாக நம்பகமாக தெரிய வருகிறது. 
ஏற்கனவே இது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சாதகமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்... கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்... Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5
Powered by Blogger.