இவ்வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறு பற்றி கல்வி அமைச்சர்...

January 04, 2021

இவ்வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அதேவேளை எதிர்வரும் மார்ச் 
மாதம் நடைபெறும் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறு பற்றி கல்வி அமைச்சர்... இவ்வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறு பற்றி கல்வி அமைச்சர்... Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

உக்ரைனிலிருந்து 4வது குழுவும் வந்தது

January 04, 2021

உக்ரேனில் இருந்து நான்காவது சுற்றுலாப்பயணிகள் இன்றைய தினம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று இவ்வாறு வருகை தந்தது 97 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை ஏற்கனவே வந்த 
குழு இன்றைய தினம் செல்லவிருந்த பொலன்னறுவை மற்றும் நாளைய தினம் செல்லவிருந்த சிகிரியா பயணம் என்பன ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து 4வது குழுவும் வந்தது உக்ரைனிலிருந்து 4வது குழுவும் வந்தது Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரி பதவிக்கான விண்ணப்பம் கோரல்

January 04, 2021

2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஏதேனுமொரு வருடத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் சித்தியடைந்த மாணவிகளிடமிருந்து (திருமணமாகாதவர்) சுகாதார அமைச்சின் 'சுகாதார சேவைகள் அதிகாரி' வெற்றிடங்களுக்கான பாடநெறியின் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இணைய வழி மூலமாக 
இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவுத் திகதி: 01-02-2021. 
இது தொடர்பான மேலதிக தகவல்களை 2021.01.08 ஆம் திகதி வெளிவரும் வர்த்தமானி மற்றும் www.health.gov.lk என்ற இணையதளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரி பதவிக்கான விண்ணப்பம் கோரல் குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரி பதவிக்கான விண்ணப்பம் கோரல் Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை:

January 04, 2021

அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் கடந்த 15 நாட்களாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அலுவலகத்தின் மருத்துவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 
குறித்த நபர் சென்ற மாதம் 
19ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
 குறித்த உடலை அடையாளம் காட்டுவதற்கு இதுவரை அவரது வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியர்கள் தமது கடமைகளில் இருந்து நேற்றைய தினம் விலகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை: கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை: Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி..

January 04, 2021

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராவார். 
தற்போதுவரை இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த 
சீனாவை சேர்ந்த தொழிலதிபரான ஷாங் ஷான்ஷான் (Zhong Shanshan) 1ம் இடத்திற்கு முன்னேறியதுடன் முகேஷ் அம்பானி 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாமிடத்தில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா இருக்கின்றார். 
77.8 பில்லியன் டொலர் மொத்த சொத்துக்களை கொண்ட ஷான்ஷான் உலக பணக்காரர் பட்டியலில் 11 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 
இவர் மற்ற பணக்காரர்களை போலல்லாமல் இதழியல் துறை, காளான் வளர்ப்பு மற்றும் சுகாதாரத் துறை என்பவற்றிலேயே கவனம் செலுத்தி வந்தவர். 
கடந்த ஏப்ரலில் தனக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை சீன பங்குச் சந்தையில் இவர் பட்டியலிட்டார். 
மேலும் மூன்று மாதங்களுக்கு பிறகு இவரது தண்ணீர் போத்தல் நிறுவனத்தை பங்கு சந்தையில் பட்டியலிட்டார். இந்நிறுவனத்தின் பங்கு 155% ற்கு மேல் அதிகரித்தது. 
கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் இறங்கிய இவரது மற்றொரு நிறுவனத்தின் பங்கு விலை 2,000% க்கு மேல் அதிகரித்தது. 
அந்த வகையில் இவரது வளர்ச்சி வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் அதிக செல்வம் ஈட்டப்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி.. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி.. Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்?

January 04, 2021

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தனது பதவியை ராஜினாமா செய்தமைக்கான காரணம் 
சிலரின் தலையீடே என தெரிய வருவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
இவர் தனது ராஜினாமா கடிதத்தை இம்மாதம் 1ம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளதாக தெரிய வருகிறது.
 2019 டிசம்பர் முதல் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்? முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்? Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

Full Free Scholarship to Japan - 2021/22.

January 04, 2021

Full Free Scholarship to Japan - 2021/22. (ASIA KAKEHASHI) 
Fully sponsored by ministry of education in Japan. 
Closing date: 20-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.

Full Free Scholarship to Japan - 2021/22. Full Free Scholarship to Japan - 2021/22. Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

MPhil / PhD - 2021 (University of Colombo)

January 04, 2021

MPhil / PhD - 2021 (University of Colombo) 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.

MPhil / PhD - 2021 (University of Colombo) MPhil / PhD - 2021 (University of Colombo) Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka)

January 04, 2021

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) 
Closing date: 17-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்...

January 03, 2021

இலங்கை வந்துள்ள உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள் மூடப்படும் என மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. 
அந்த வகையில் நாளை (4) அவர்கள் பொலநறுவை பராக்கிரம அரண்மனை வளாகம், லங்காதிலக விகாரை, தலதா முற்றம், சிவன் ஆலயம், கிரி விகாரை மற்றும் கல் விகாரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர். எனவே நாளை குறித்த இடங்கள் பிற்பகல் 01 மணிக்கு பின்னர் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படமாட்டாது. 
நாளை மறுதினம் 
சீகிரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதால் அன்றைய தினம் குறித்த வலயம் நண்பகல் 12 மணி வரை உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படமாட்டாது என குறித்த நிதியம் அறிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் கொத்தணி ஒன்று உருவானால் அதற்கு யார் பொறுப்பு என ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.
மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்... மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா?

January 03, 2021

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட 44 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி வந்துள்ளது. அதில் முதலாவது போட்டி 
ஜனவரி 14ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜனவரி 22ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த இரு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா? இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா? Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்..

January 03, 2021

கடந்த 10 வருடங்களின் பின் கடந்த வரும் (2020) டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்பவர்களின் எண்ணிக்கையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார். 
அதாவது இந்த எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களை விட 
கடந்த வருடம் பாரியளவு குறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 
2020 இல் 30,691 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டதோடு 35 பேர் மாத்திரமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்.. 10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்.. Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை...

January 03, 2021

07 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
கிளிநொச்சி, வவுனியா, 
முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களே இவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை... 7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5
Powered by Blogger.