13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி:

January 09, 2021

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கு அமைய 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அதிகாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார். 
அம்பாறை, ஏறாவூர் ஆகிய நகர சபைகளின் மற்றும் பொத்துவில், இறக்காமம், பதியத்தலாவ, மண்முனை, வாழைச்சேனை, வாகரை, ஏறாவூர்பற்று, 
சேருவில, தம்பலகாமம், திருகோணமலை பட்டிணமும் சூழலும், மொரவெவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் சபை தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசேட வர்த்தமானி வெயிடப்படும் வரை சபை அமர்வுகளை நடத்துவதற்கும் மூலதன வேலைத்திட்டங்களை செய்யவோ அல்லது இலவச விநியோகங்களை மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி: 13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்...

January 09, 2021

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் அதிகாரி வி.திலீபன் தெரிவித்தார். 
இதற்காக புளியங்குளம் இந்துக் கல்லுாரியில் 
PCR பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அங்கு பரிசோதனைக்கு வருவோரது எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்... அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்... Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை:

January 09, 2021

கொரோனா தடுப்பூசி (Covid Vaccine) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் தடுப்பூசி போட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி: 
சுகாதார பணியாளர்கள் - 155,000 (0.68%) 
முப்படை மற்றும் பொலிஸ்- 127,500 (0.56%) 
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 3,159,800 (14%) 
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தொடர்புபடும் ஊழியர்கள் - 225,700 (1%) 
நோய்வாய்ப்பட்ட 18-59 வயதுடையவர்கள் - 3,227,510 (14.3%) 
40-59 வயதுடையவர்கள் - 3,114,660 (13.8%) 
இருப்பினும், கோவிட் தடுப்பூசி 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது. அவர்கள் தடுப்பூசி போடத் தேவையில்லை என்பதே இதற்குக் காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை: கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா...

January 09, 2021

கேகாலை, மாகுர, மகுருதெனியவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் அனைவரும் தம்மிக கொரோனா பாணியை 
அருந்தியவர்கள் என தெரியவந்துள்ளதாக புழுகஹதெனிய பொது சுகாதார பரிசோதகர் பன்டார அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா... கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்..

January 09, 2021

10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஹோமாகம போலீஸ் நிலையமே இவ்வாறு சட்டவிரோதமாக நீரை பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்திற்கு தண்ணீர் வழங்க கூடிய 
நான்கு இணைப்புக்கள் இருந்துள்ளன. அதில் மூன்று இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த துண்டிக்கப்பட்ட இணைப்புகள் மூலமாக சட்டவிரோதமாக நீர் இவ்வளவு காலமும் பெறப்பட்டுள்ளது. 
 இந்த சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சுமார் 15 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நீர்வழங்கல் சபைக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இது தொடர்பான விசாரணைகளை அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்.. 10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்.. Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்:

January 09, 2021

கடந்த சில நாட்களாக கேகாலை பிரதேசத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு வித்தியாசமான அறிகுறி அதாவது அதிக காய்ச்சல் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை இந்த அறிகுறிகள் தென்படுவது பெரும்பாலும் 
புதிய வகையான கொரோனாவாக இருக்கலாம் என குறித்த சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேகாலை பிரதேசத்தில் கொரோனா பாணியை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான மக்கள் சமூக இடைவெளியை பேணாது ஒன்றுகூடியமை குறிப்பிடத்தக்கது.
கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்: கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்

January 09, 2021

மேலதிக வகுப்புக்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், 
கட்டம் கட்டமாகவே ஒவ்வொரு கற்றல் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இன்னும் 02 வாரங்களில் 
மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்க எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமையவே இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர் Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா?

January 09, 2021

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்துதல் கட்டணம் அறவிடப்படமாட்டாது என அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
அவர்கள் அரசினால் 
நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா? நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா? Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

பயிலுனர் பட்டதாரிகளில் சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு..

January 09, 2021

49 ஆயிரத்து 478 பேருக்கு இதுவரை பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 2000 பேருக்கு தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பை 
மேற்கொள்ள அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக அரச நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். 
 அரச சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு அவர்களை தகுதியுடையவர்களாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பயிலுனர் பட்டதாரிகளில் சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு.. பயிலுனர் பட்டதாரிகளில் சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு.. Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

முழு நாட்டையும் முடக்கியது உக்ரேன்: 6வது சுற்றுலா பயணிகள் குழுவையும் ஏற்றது இலங்கை:

January 08, 2021

உக்ரேன் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக இன்று (8) முதல் 24ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியிலான முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்றைய தினத்திலான தகவல்களின்படி ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட 
மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 19,588 பேர் இறந்துள்ளனர். 
இதேவேளை உக்ரைனில் இருந்து 6வது சுற்றுலா பயணிகள் குழுவும் இன்றைய தினம் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
முழு நாட்டையும் முடக்கியது உக்ரேன்: 6வது சுற்றுலா பயணிகள் குழுவையும் ஏற்றது இலங்கை: முழு நாட்டையும் முடக்கியது உக்ரேன்: 6வது சுற்றுலா பயணிகள் குழுவையும் ஏற்றது இலங்கை: Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

January 08, 2021

2020 க.பொ.த. (உ/தர) பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக செயன்முறை பரீட்சைகள் (Practical Exames) 5ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
செயன்முறை பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு குறித்த திகதியில் செல்ல வேண்டும். 
 இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் 
தமது பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சைக்கு செல்லலாம் என பரீட்சை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: 0112 781208/ 0112784537/ 0113140314 அவசர அழைப்பு இலக்கம் - 1911
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல் Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

உயர் தர செயன்முறை பரீட்சை நேர அட்டவணை வெளியானது

January 08, 2021

2020 க.பொ.த. (உ/தர) பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக செயன்முறை பரீட்சைகள் (Practical Exames) 5ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
பரீட்சைகள் நடைபெறும் திகதியையும் பாடத்தையும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
2021/01/05 - நாட்டியம் (தேசிய) 
2021/01/05 - நாட்டியம் (பரதம்) 
2021/01/09 - உயிர் முறைமை தொழிநுட்பவியல். 
2021/01/21 - பொறியியற் தொழிநுட்பம் 
2021/01/26 - மனைப்பொருளியல் 
2021/01/26 - கீழைத்தேய சங்கீதம் 
2021/01/26 - கர்நாடக சங்கீதம் 
2021/01/26 - மேலைத்தேய சங்கீதம் 
2021/01/26 - நாடகமும் அரங்கியலும் (சிங்களம்). 
2021/01/26 - நாடகமும் அரங்கியலும் (தமிழ்). 
2021/01/26 - நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்). 

மேலதிக விபரங்களுக்கு: 0112 781208/ 0112784537/ 0113140314 
அவசர அழைப்பு இலக்கம் - 1911
உயர் தர செயன்முறை பரீட்சை நேர அட்டவணை வெளியானது உயர் தர செயன்முறை பரீட்சை நேர அட்டவணை வெளியானது Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்தவர்...

January 08, 2021

உலக பணக்காரர்களில் முதலாம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பிசாசோவை பின்தள்ளி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் எலான் மஸ்க். 
உலகின் 500 செல்வந்தர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ள 
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
அமேசான் நிறுவனர் ஜெப் பிசாசோ கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்தவர்... உலக பணக்காரர்களில் முதலிடம்  பிடித்தவர்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5
Powered by Blogger.