Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021

August 07, 2021

Limited competitive examination for recruitment to Grade 111 of Sri Lanka Planning Service - 2021 

இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் - 111 இற்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021 

விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தில் உள்ள ஒன்லைன் (Online) விண்ணப்ப படிவத்தின் மூலமே சமர்ப்பிக்க முடியும். 

விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின் அதை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியும் எடுத்து அதில் விண்ணப்பதாரியின் ஒப்பத்தை சான்றுப்படுத்தி, நிறுவன தலைவரின் சான்றுரையுடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். 

எந்தவொரு மதத்தையும் சேர்ந்த துறவிக்கு இந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்கவோ அல்லது தோற்றவோ அனுமதி கிடையாது.

Online விண்ணப்பத்திற்குரிய காலம்: 07-08-2021 தொடக்கம் 06-09-2021 (24:00 மணி) வரை. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021 Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021 Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

போராட்டத்தை கைவிட தீர்மானம்! அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!

August 07, 2021

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு தாம் முன்னெடுத்துவரும் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய எதிர்ப்பு ஊர்வல பேரணியை இன்றைய தினம் (7) தற்காலிகமாக கைவிடுவதாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். 

கடந்த 4ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஆரம்பித்த இந்த பேரணி இன்று பஸ்யாலையில் 
வைத்து கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (9) கொழும்பை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது. 

இதேவேளை பல தரப்பினரின் கோரிக்கைக்கு அமையவே இந்த போராட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார். 

நேற்றைய தினம் (6) விசேட வைத்திய நிபுணர்களின் சங்கமும் நாட்டின் நிலைமையை கருதிக்கொண்டு அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தை கைவிட தீர்மானம்! அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு! போராட்டத்தை கைவிட தீர்மானம்! அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

W & OP Re-Registration திகதி நீடிப்பு தொடர்பில் வெளியான சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு)

August 06, 2021


W & OP Re-Registration திகதி நீடிப்பு தொடர்பில் பொது சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் 05-08-2021 அன்று புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மீள்பதிவிற்கான இறுதி திகதி 31-12-2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Circular


Re-Registration எவ்வாறு செய்வது என்ற வழிகாட்டலைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

W & OP Re-Registration (Easy Guidelines)

W & OP Re-Registration திகதி நீடிப்பு தொடர்பில் வெளியான சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) W & OP Re-Registration திகதி நீடிப்பு தொடர்பில் வெளியான சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

கல்விமாணி பட்டதாரிகளை (B. Ed) ஆசிரியர் சேவையில் இணைத்தல் - 2021 (வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு)

August 06, 2021

Teaching appointments for B. Ed degree holders - 2021
 நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக சிறப்பு கல்வி, நாடகம் மற்றும் அரங்கியல் தொடர்பாக கல்விமாணி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-11 தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்தல் - 2021 

மேற்படி நியமனத்துக்கான அறிவித்தல் 06-08-2021 வர்த்தமானியில் வெளிவந்துள்ளது. 

வயதெல்லை: 18-40. 

விண்ணப்ப முடிவு திகதி: 03-09-2021. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கல்விமாணி பட்டதாரிகளை (B. Ed) ஆசிரியர் சேவையில் இணைத்தல் - 2021 (வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு) கல்விமாணி பட்டதாரிகளை (B. Ed) ஆசிரியர் சேவையில் இணைத்தல் - 2021 (வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

02-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 06, 2021

02-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களை பார்வையிட...
02-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 02-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு)

August 06, 2021

அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைத்தல் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையை இன்று (6) அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம்: 02/2021(1V) உடைய இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு. 

ஒவ்வொரு அரச ஊழியரும் கிழமைக்கு குறைந்தது 03 நாட்கள் வருகை தரும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 

ஒரு ஊழியர் வரவேண்டிய தினத்தில் வராவிட்டால் மாத்திரமே அவரது சொந்த லீவில் குறைக்கப்பட வேண்டும். 

நிறுவனத்திற்குரிய உத்தியோகபூர்வ வாகனத்தின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. நிறுவன பிரதானிகள் அவர்களுக்குரிய பொருத்தமான முறையை பின்பற்ற வேண்டும். 

பணிக்கு வருகை தராத நாட்களில் வீட்டிலிருந்து 
Online மூலம் வேலை செய்ய வேண்டும். இதன்போது நிறுவன பிரதானியின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். 

கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகளை கொண்ட தாய்மார்களை பணிக்கு அழைக்கக்கூடாது. 

மேலும் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் மற்றும் வேறு விஷேட நிலைமைகளின் காரணமாக சேவைக்கு வரமுடியாதவர்களை சேவைக்கு அழைத்தல் அல்லது மாற்று ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தல் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள நிலையத்தில் பணியை தொடர ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த ஊழியர் பாதிக்காத வகையில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் நிறுவன பிரதானிக்குரியது. 

ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறல் தொடர்பில் கையொப்பமிடும் வகையில் வரவு பதிவேட்டை பயன்படுத்த வேண்டும். 

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக ஒரு ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவருக்கு சம்பளத்துடன் லீவு வழங்கப்பட வேண்டும். 

குறித்த சுற்று நிருபத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

06-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 06, 2021

06-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 

Official Government Gazette released on 06-08-2021. 

இதில், ஆசிரிய நியமனம் 
உட்பட பல முக்கிய அறிவிப்புகள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய வர்த்தமானிகளைப் பார்வையிட...
06-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 06-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன?

August 05, 2021

24 வருடங்களாக தமக்கு மறுக்கப்பட்ட சம்பளத்திற்கான கோரிக்கை உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் பல நாட்களை கடந்தும் உரிய தீர்வு இன்றி தொடர்கின்றது. 

இதனிடையே கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை சென்று 10 லட்சம் கையொப்பங்களையும் 
திரட்டி எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கும் போராட்டமும் நேற்றைய தினம் கண்டி நகரிலிருந்து ஆரம்பமானது. 

இது மாத்திரமன்றி நேற்று வாகன பேரணி ஒன்றும் கொழும்பு நோக்கி சென்றது. கடவத்த, கொட்டாவ, மொரட்டுவ மற்றும் வெலிசர ஆகிய நான்கு இடங்களில் இருந்து வாகன பேரணி ஆரம்பமானது. 

இவர்கள் ஜனாதிபதி செயலகம் வரை சென்று தமது போராட்டத்தை நிறைவு செய்தனர். இவ்வாறு சென்றவர்கள் கொழும்பிலிருந்து திரும்பும்பொழுது அதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண் ஆசிரியைகளும் அடங்குவர். 

இவர்கள் கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களில் அல்லாமல் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். 

இதன் பின்னர் அவர்களை சென்று பார்வையிட சட்டத்தரணிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பல தரப்பினர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தை பிரதானமாக சுட்டிக்காட்டி அந்த அனுமதி மறுக்கப்பட்டது. 

இதேவேளை 44 பேருக்கும் துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. 

இவர்களை சென்று பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார போன்றோர் இன்று காலை எவ்வளவு முயற்சி செய்தும் அனுமதி வழங்கப்படவில்லை. 

இதேவேளை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 44 பேரும் தமது சொந்த பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களும் விடுவிக்கப்பட்டன.
அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன? அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன?  Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு:

August 05, 2021

நேற்றைய தினம் (4) இடம்பெற்ற அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தில் கலந்துவிட்டு கொழும்பிலிருந்து திரும்பும்பொழுது கைது செய்யப்பட்ட 44 பேரும் உரிய போலீஸ் நிலையங்களில் அல்லாமல் வழமைக்கு மாற்றமாக துறைமுக போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

எனவே அவர்களை பார்வையிடவும் அவர்களுக்கு தேவையான ஆடைகளை வழங்கவும் இன்று காலை துறைமுகத்துக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சென்றனர். 

ஆனால் இவர்கள் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு அனுமதியும் மறுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள சிறப்புரிமைகள் அதிலும் 
விசேஷமாக எதிர்க்கட்சித் தலைவருக்குள்ள சிறப்புரிமைகள் என்பவற்றை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதி வழங்கப்படவில்லை. 

சட்டத்தரணிகளும் இந்த விடயம் அரசியல் யாப்பின் பிரகாரம் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்றும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் எவ்வளவோ வாதாடியும் பயனில்லை. 

நான் பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தினால் அது உங்கள் தொழிலுக்கும் பிரச்சனையாய் அமையும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. உங்கள் உயர் அதிகாரிகளிடம் மீண்டும் கேட்டாவது அனுமதி தாருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் வேண்டினார். ஆனால் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் வந்த குழுவினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். 

இதனிடையே கைது செய்யப்பட்ட 44 பேரும் இன்று நீதிமன்றத்தினால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு: கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு: Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்:

August 05, 2021

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

அந்த வகையில் கர்ப்பிணிகளை சேவைக்கு அழைப்பது உடன் அமுலாகும் வகையில் நிறுத்தப்படுவதாகவும் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று(5) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் நிறுவன பிரதானிகளின் தீர்மானத்திற்கு அமைய வாரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் 
இரண்டு குழுக்களாகப் பிரித்து சேவைக்கு அழைக்க முடியும். மேலும் இந்த புதிய மாற்றங்களோடு புதிய சுற்றுநிருபம் விரைவில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்: அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்:  Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்..

August 05, 2021

செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது 3வது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். 

இதனால் வறிய நாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்படும். எனவே இந்த 3வது தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் போது, ஒவ்வொரு நாட்டினதும் 10% ஆன மக்களுக்காவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாகவிருக்கும். 

இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்.. மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்:

August 04, 2021

தரம் 1 மாணவர் அனுமதி தொடர்பாக 2019-05-24 திகதியிடப்பட்ட 29/2019 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் 7.5.2.2 பிரிவு மாற்றப்படுவதாக கல்வியமைச்சின் செயலாளர் 2021-07-29 திகதியிடப்பட்ட 13/2021 (1) இலக்கம் கொண்ட சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். 

குறிப்பிட்ட திருத்தம் பின்வருமாறு: 
7.5.2.2 தற்போது கஷ்டப் பாடசாலையொன்றில் சேவையாற்றாதிருப்பினும் இதற்கு முன் கஷ்டப் பாடசாலையொன்றில் சேவையாற்றியிருப்பின் சேவைக் காலம் - பூரண 01 வருடத்திற்கு 03 புள்ளிகள் வீதம் 15 புள்ளிகள். 
என மாற்றப்பட்டுள்ளது. 

திருத்தப்பட்ட சுற்றறிக்கையை கீழே காணலாம்.


தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்: தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்:  Reviewed by irumbuthirai on August 04, 2021 Rating: 5

அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை!

August 04, 2021

குருநாகல், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்தவரும், அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராருமான எம்.எஸ்.எம்.சப்றாஸ், அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்டு வழங்கப்படும் சான்றிதழ் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 

தொழில் முயற்சியாண்மை முகாமைத்துவம் தொடர்பான பாடநெறிக்காக கடந்த ஜனவரியில் தெரிவுசெய்யப்பட்ட இவர், அமெரிக்க்காவிலுள்ள 
கேனல் பல்கலைக்கழகத்தில் தனது கற்கை நெறியைப் பூர்த்தி செய்து இந்த சான்றிதழ் விருதையும் பெற்று நாடு திரும்பியுள்ளார். 

ஏற்கனவே எமது நாட்டில் ஜனாதிபதியின் செயலாளர்களாக பதவி வகித்த பிரட்மன் வீரக்கோன் மற்றும் லலித் வீரதுங்க போன்றோர் இந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இலங்கையிலிருந்து தமிழ் பேசும் சமூகம் சார்பாக இந்த கற்கைநெறிக்குத் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறியைப் பூர்த்தி செய்து சான்றிதழ் விருதைப் பெற்ற முதலாமவர் M.S.M. சப்றாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

பறகஹதெனியாவைச் சேர்ந்த முகம்மட் சௌபான் சொஹறா உம்மா தம்பதியின் புதல்வரான இவர்,2017 இல் இந்தியாவிலும், 2018, 2019,ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரிலும், 2019, 2020ஆம் ஆண்டுகளில் சீனாவிலும் பல கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பித்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை! அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை! Reviewed by irumbuthirai on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.