தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு
Irumbu Thirai News
January 15, 2022
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தடுப்பூசி செலுத்தும் பணிகளை மும்முரமாக செய்துவரும் அரசாங்கம் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டொடி ரிஹோ டுடர்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே
வரக்கூடாது அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவித்தலின் படி செயற்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். எனவே அதிகாரிகள் தற்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பான விபரங்களை மும்முரமாக திரட்டி வருகின்றனர்.
இதேவேளை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த கூடாது என்ற விடயம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு
Reviewed by Irumbu Thirai News
on
January 15, 2022
Rating: